Thursday, January 21, 2016

மரம் காத்த பெண் டார்ஜன்கள்

மரம் வெட்டுவதற்கு எதிராக விநோபாபாவேவும், பகுணா என்பவரும் பல்லாயிரக்கணக்கான தூரம் நடந்தே சென்று பிரசாரம் செய்து சிப்கோ என்ற இயக்கத்தை வளர்த்து எடுத்தனர்

உத்தர்கந்த் மாநிலத்தில் ரெனி எனும் கிராமத்தில் இருந்த மரங்களை வனத்துறை சார்ந்தவர்கள் வெட்ட முயன்றனர், அந்த மரங்களை வெட்டும் முன்பு தங்களை வெட்டி விட்டு பின்னர் மரங்களை வெட்டுமாறு அப்பகுதி பெண்கள் மரத்தை கட்டிப்பிடித்து நின்று கொண்டனர்.

அதன்பின் எவ்வளவோ முயற்சி செய்தும் அப்பெண்களை மரத்திலிருந்து பிரிக்க முடியாமல் அதிகாரிகள் வெறும் கையுடன் திரும்பி சென்று விட்டனர்
அவர்களே பெண் டர்ஜன்கள் என அழைக்கபட்டனர்.
ஒரு துளி  வன்முறை கூட  இல்லாமல் கிடைத்த வெற்றி அது!

சிப்கோ என்றால் கட்டிகாப்பது என்று பொருள், இந்த இயக்கத்தில் பெரும் பகுதி பெண்களே இருக்கிறார்கள் 

பின்னர் இதுவே பேரியக்கமாக மாறி காட்டில் உள்ள மரங்களை  வெட்ட அனுமதிக்காமல் வளங்களை காப்பாற்றி வருகிறார்கள், பெண்கள் ஒன்றிணைத்தால் எவ்வளவு வளங்களை கெடுக்கும் கூட்டத்தை அது எவ்வளவு வலிமையாக இருந்தாலும் கூட துரத்தலாம் என்பதை செயல்கள் மூலம் நிரூபித்தது அந்த இயக்கம்  

தமிழ்நாட்டிலும் பெண்கள் இருக்கிறீர்கள்,  இங்கும் மரம் வெட்ட பட்டுக்கொண்டு இருக்கின்றன, நமது நில வளங்களும் அழிந்து கொண்டு இருக்கின்றன என்பதையும் நினைவு படுத்துவது எனது கடமை      

மூலம்: எனது இந்தியா, எஸ் ராமகிருஷ்ணன்  

No comments:

Post a Comment