Friday, February 28, 2020

கற்றதும் பெற்றதும் பகுதி 2


சுஜாதாவின் கற்றதும் பெற்றதும் பகுதி 2.

படித்ததில் சில பிடித்த சுவாரஸ்யமான தகவல்கள் கவிதைகள் கருத்துக்கள்

குழ‌ந்தை அழும்போதெல்லாம்
நான் குதிரையாக‌
வேண்டியிருக்கிற‌து.
இம்ம‌ண்ணில்
என்னைச்ச‌வாரியாக்கி
கைகொட்டி சிரிக்க‌,
குழ‌ந்தைக்குமா ஆன‌ந்த‌ம்?
 -எஸ். வைதீஸ்வரன்

வாழ்க்கை சுருக்கமானது.
பிடிவாதத்திற்கோ, சண்டை போடவோ நேரமில்லை நண்பனே
 -லென்னன்

கண்ணீரை படைத்தது
கடவுளின் தவறா?
ஆனந்தப்பட்டு அதை வடிக்காமல்
அழுது வடிக்கும் மனிதனின் தவறா?

-நீலமணி

கடும் உழைப்பு எதிர்காலத்துக்கு நல்லது. சோம்பேறித்தனம் நிகழ்காலத்துக்கு!

சாவுக்கு இழப்பீடு என்பது நவீன வியாபார உத்திகளில் முதன்மையான இடத்தை பிடித்திருக்கிறது. அரசியல் எனும் வியாபாரத்தில் அது மிக பெரிய முதலீடு

அந்த பெண்ணுக்கு பதினெட்டு பாஷைகள் தெரியும், ஆனால் எதிலும் மாட்டேன் என்று சொல்ல தெரியாது
 -டொராதி பார்க்கர்

வாயை திறக்காமல் ஒன்றுமே தெரியாத முட்டாளை தோன்றுவது, வாயை திறந்து அதை ஊர்ஜிதம் செய்வதை விட மேல்
 -மார்க் டிவைன்

சிலர் பேனா கத்தியால் திருடுகிறார்கள்,
சிலர் பேனாவால்...
 -கத்ரி

"இறந்தவர் யாருப்பா?" என்றார் மருத்துவர்
"நான்தாங்க" என்றார் வந்தவர்         
 -மாணிக்கதாய்

தோழி, உனக்கு குழந்தை பிறந்ததற்கு வாழ்த்துக்கள் உனக்குள் இந்த திறமை இருந்தது எனக்கு அப்போதே தெரியும்.
 -டோரத்தி பார்க்கர்

பழைய மன்னருடன் நகர்வலம்
வந்ததாய்ச் சொல்லப்பட்ட
பாகனற்ற கிழ யானை
பட்டத்து ஒப்பனையோடும்
ஓசையற்ற சலங்கையோடும்
தெருவில் இறந்து கிடந்தது’.
 -யாத்ரீகன்

புகழ் வார்த்தைகளை நிஜமென்று நம்ப துவங்கும்போது உனக்கு கேடு காலம் ஆரம்பிக்கிறது
 -ஜிம் ஆலன்

உலகின் ஜனத்தொகையில் பாதிப்பேருக்கு பலாப்பழம் பிடிக்கும், மீதி பேருக்கு பிடிக்காது அவர்கள் ஒருவரை ஒருவர் திருமணம் செய்து கொள்வது வழக்கம்
-ஜிம் ஆலன்

"எல்லாமே மாயை எதுவுமே நிலையில்லை" என்ற நான் என் கார்பெட்டுக்கு அதிக விலை கொடுத்துவிட்டேன்

சாகாத இலக்கியம் படைப்பதை விட
நான் சாகாமல் இருக்கவே விரும்புகிறேன்
 -ஆலன்

அடி முட்டாள்
அயோக்கியன்
அதி புத்திசாலி
ஞானி
அனைவரையும் குளத்தில் குதித்தனர்
ஒரே மாதிரி வட்டம் வட்டமாக வந்தது
 -தென்றல்

தவறுகளுக்காக அவமானப்பட்டால் அதை குற்றங்களாக்கி விடுவீர்கள்
-கன்பூசியஸ்

பிரச்சாரம் பொய் சொல்வதன் ஒரு பிரிவு, அதனால் உங்கள் நண்பர்களை ஏமாற்றலாம் நிச்சயம் எதிரிகளை ஏமாற்ற முடியாது
 -வால்டர் லிப்மன்

ஒரு தரம் காதல் என்னை மீட்டு தந்தது
ஒரு தரம் புல்லாங்குழல் என்னை மீட்டு தந்தது
ஒரு வண்ணத்துப்பூச்சியும் என்னை மீட்டு தந்தது
நான்தான் அடிக்கடி தொலைந்து போகிறேன்
 -பூமா ஈஸ்வரமூர்த்தி

நான் எழுதிய புத்தகங்களுக்காக
குடித்த சுருட்டுகளின் காசு கூட அதிலிருந்து கிடைக்கவில்லை
 -காரல் மார்க்ஸ்

நானே வலிய சென்று எம் ஐ டி யில் ஒரு பாட்டு போட்டியில் கலந்து கொண்டு மூன்றாவது பரிசாக ஒரு சொப்பு மாதிரி கப்பு வாங்கினேன். அதில் கலந்துகொண்டவர்கள் எண்ணிக்கை மூன்று
 -சுஜாதா

என் நீண்ட ஆயுளுக்கும் ஆரோக்கியத்திற்கும் காரணம் தெளிவாக தெரிந்து விட்டது, நான் ஒரு சிகரெட் கூட பிடித்ததில்லை ஒரு பெண்ணை கூட தொட்டதில்லை என் பத்து வயதுவரை
 -ஜார்ஜ் மூர்

"தினமும் சமைக்கும் போது இந்த நீரில் தான் சாதனை செய்தோம் என நினைப்பதுண்டா?" என்று சிரித்தாள் குடும்பத்தலைவியாகி குண்டாகவும் ஆகிவிட்ட முன்னாள் நீச்சல் வீராங்கனை
 -முகுந்த் நாகராஜ்

எனக்கு சட்டமியற்றும் அதிகாரம் இருந்தால் மதமாற்றத்தை உடனடியாக தடைசெய்து விடுவேன்
-மகாத்மா காந்தி சொன்னதாக ஹிந்துமித்திரன் இதழில்

அப்பா சொன்னாரென
பள்ளிக்கு சென்றேன்
தலை சீவினேன்
சில நண்பர்களை தவிர்த்தேன்
சட்டை போட்டுக்கொண்டேன்
பல் துலக்கினேன்
வழிபட்டேன்
கல்யாணம் கட்டிகொண்டேன்
காத்திருக்கிறேன் என் முறை வருமென
 -கனிமொழி

சான் பிரான்சிகோவில் ஆப்பிள் கம்பெனியின் புதிய படைப்பான ஐ போனை வாங்க 40 வது ஆளாக க்யூவில் நின்றவர் ஸ்டீவ் வாஸ்னியாக் ஆப்பிள் கம்பெனி நிறுவனர்களில் ஒருவர்

நன்றி வணக்கம் 


Friday, February 14, 2020

குறுங்கதை-10 சண்டைச்சேவல்

அவனது சண்டைச்சேவல் தோற்றதேயில்லை. அவன் சேவலைச் சண்டைக்குப் பழகுவதற்கு முன்பாக அது ஒரு சேவல் இல்லை என்பதை உணரச் செய்வான். இதற்காக அதிகாலையில் சேவல் தன்னை அறியாமல் கூவும் போது சிறிய மூங்கில் கழியால் அடித்து அது கூவுவதைக் கட்டுப்படுத்துவான். நாட்படச் சேவல் கூவுவதை நிறுத்திக் கொண்டுவிடும். பின்பு சேவலை இன்னொரு சேவலுடன் சண்டைக்குப் பழக்குவதற்குப் பதிலாகத் தண்ணீரை பீய்ச்சியடித்து சேவலை அதோடு சண்டையிடச் செய்வான். தண்ணீர் எந்தத் திசையிலிருந்து பீறிடும் எனத் தெரியாமலும் நனைந்து கண்ணை மறைக்கும் தண்ணீரை எப்படிச் சமாளிப்பது எனத் தெரியாமலும் சேவல் தடுமாறும். பின்பு மெல்லத் தண்ணீரை எதிர்கொள்ளச் சேவல் பழகிவிடும்.
பின்பு சேவலுடன் சண்டையிட பல்வேறு தீப்பந்தங்களை ஏற்பாடு செய்திருப்பான். நெருப்புக் கண் முன்னே சீற்றம் கொள்வதையும் ரெக்கையில் நெருப்பு பற்றிக் கொள்வதையும் கண்டு சேவல் ஆவேசம் கொள்ளும். பின்பு பயந்தெளிந்து நெருப்பைக் கண்டு சேவல் விலகியோடாது. அதன்பிறகு சேவலின் கண்களைக் கறுப்புத் துணியால் கட்டி கிணற்றில் போட்டுவிடுவான். தட்டுத்தடுமாறி அது மேலேறி வர எத்தனிக்கும். ஆனால் சில நாட்களில் கண்களைக் கட்டினாலும் சேவல் திசையறிந்துவிடும்.
அதன்பிறகு சேவலுக்கு உணவு தராமல் பட்டினி போடுவான். அது பசியில் குரல்கொடுத்தபடியே இருக்கும். மண்ணைக் கொத்தித் தின்னும். பின்பு மெல்லச் சேவல் பசியைக் கடந்து போகும். முடிவில் மரத்தில் செய்யப்பட்ட இயந்திர சேவல் ஒன்றை அத்தோடு சண்டையிடச் செய்வான். மரச்சேவலை கொத்தும் நிஜசேவல் ஏன் அச்சேவல் கத்துவதில்லை எனத் திகைத்துப் போகும். பின்பு தானும் அது போலவே கத்தக்கூடாது என்பதை உணர்ந்து கொள்ளும்.
இந்தப் பயிற்சிகள் யாவும் முடிந்தபிறகு அவன் சேவலைச் சண்டைக்குக் கொண்டு வருவான். போட்டியில் அவனது சேவல் எதிராளியின் சேவலை ஒரே அடியில் வீழ்த்திவிடும். ஆனால் வென்ற சேவலுக்கான கொக்கரிப்போ, சிறகடிப்போ எதுவும் இருக்காது. ஒரு துறவி மடாலயம் திரும்புவது போல நிதானமாக அச்சேவல் அவனை நோக்கித் திரும்பிவரும். அவன் சேவற்கட்டில் வென்ற பரிசினை ஒருபோதும் பெற்றுக்கொள்வதில்லை.
வீடு திரும்பும் வழியில் தோளில் சேவலை நிற்கச் செய்தபடியே உற்சாகமாகப் பாடிக் கொண்டு வருவான்.
அவ்வளவு தான் அவனது மகிழ்ச்சி. 

From s.raa's website (Sharing from S Ramakrishnan's FB page)

Friday, February 7, 2020

கொரோனோ வைரஸ்


சைனா மொழியை கூகுள்ல போட்டு தேடினதுல கொரானா வைரஸ்ன்னா என்ன, அங்க இப்போ என்ன அப்டேட் இருக்குன்னு எனக்கு புரிந்தவரை விளக்குகிறேன்....

汉肺炎新型冠状病毒 இதுதான் கொரானா வைரஸ்கான சைனா வார்த்தை, இதை காபி பேஸ்ட் பண்ணி தேடுங்க, நம்மூரு செய்திகள்ல வெளிவராத தகவல்கள்  நிறைய கிடைக்கும்

பின்வரும் இந்த இரண்டு ட்வீட் கள் தான் கொரானாவின் கொடூரத்தை உலகிற்கு உணர்த்தியது, சமூக வலைதளங்களை  பரபபபாக்கிய முதலில் வந்த செய்தி

"ஒரு ஏஜென்ஸ் பிரான்ஸ் செய்தியாளர் 31 ஆம் தேதி தெருவில் விழுகிறார் அவருக்கு வுஹான் நிமோனியா இருப்பதாக சிலர் கூறுகின்றனர். அதே காலங்களில் இன்னும் சிலர் மர்மமான முறையில் உயிரிழக்கிறார்கள் யாருடைய சடலத்தையும் பரிசோதனை செய்ய கொண்டு செல்ல படவில்லை 

அப்படியே தகனம் செய்கிறார்கள், எனவே இறப்புகளின் உண்மையான காரணம் யாருக்கும் தெரியாது"

அடுத்தது கீழே

"என் அம்மாவுக்கும் எனக்கும் உடல்நிலை சரியில்லை,  இங்கே யாரும் உணவு அல்லது மருந்து அனுப்பவில்லை. இன்று என் நண்பர் அனுப்பிய வீடியோ, இப்போது நான் மரணத்தைப் பார்க்கிறேன், உணர்ச்சியற்றவனாக உணர ஆரம்பிக்கிறேன், என் வெப்பநிலை குறையத் தொடங்குகிறது"

"பாதுகாப்பு துறை நான் வாயை மூட வேண்டும் என எதிர்பார்க்கிறது, வுஹானில் ஏற்பட்ட தொற்றுநோய் ஒரு பெரிய மனிதாபிமான பேரழிவை ஏற்படுத்தியுள்ளது. மனசாட்சி உள்ள நான் எப்படி அமைதியாக இருக்க முடியும், தொலை தொடர்பே இல்லை இந்த டிவீட்டை மட்டுமே செய்ய முடிகிறது, அதிகாரியால் மட்டுமே கொரோனா பாதிப்பு   செய்திகளை வெளியிட முடியும்", என்றது அடுத்த பிரபலமான ட்விட்

கொரானா விலங்குகள் மூலம் அசாத்தியமான முறையில் பரவியது என்று கண்டுபிடித்திருக்கிறார்கள். முதலில் கண்டு பிடித்த லீ வென்லியாங் என்ற 34 வயது டாக்டரை தவறான தகவல் பரப்புவதாக கூறி கைது செய்து, பின்னர் விடுதலை தந்து நோயாளிகளுக்கு சிகிச்சை தர சொன்னது சீனா அரசு, அவர் கொரோனோ பாதிப்பால் நேற்று இறந்தார்.

"உலகளாவிய சுகாதார அவசரநிலை" என்று அறிவித்தும் தொற்றுநோயைக் கையாள்வதற்கான அரசாங்கத்தின் நடவடிக்கைகள் குறித்து ஹாங்காங் மக்கள்  கடுமையான அதிருப்தி அடைந்துள்ளனர்.

பாக்டீரியாவுக்கு வளர்ச்சி குறைவு, மருந்து சீக்கிரம் கண்டுபிடிக்கலாம், கட்டுப்படுத்தலாம், அழிக்கலாம். கொரோனோவை போன்ற வைரஸ் அப்படியல்ல, நேற்று ஆறு மாத குழந்தையாக இருந்த ஒருவன் இன்று 20 வயது வாலிபனாக மாறி நாளை 60 வயதுடையவனாக மாறுவது போன்றது, ஏன் இப்படி என கண்டுபிடிக்கவே மாதங்கள் தேவை, பின்னரே மருந்து சாத்தியம். ஆகவே நிலவேம்பு கசாய வதந்திகளை நம்பாதீர்கள், சீனாவில் இணைய கட்டுப்பாடு உண்டு, உண்மை தாமதமாக வெளிவரும் அல்லது வராது, கிட்டத்தட்ட ஒரு கோடி பேரை வுவான் நகரில் தனிப்படுத்தி செத்தாலும் பரவாயில்லை என வைத்திருக்கிறது அவ்வரசு. கொரோனோவை கட்டுப்படுத்தவோ தடுக்கவோ முடியவில்லை என உலகத்துக்கு சொல்லி விட்டார் அந்த அதிபர்.

இந்தியாவிற்கு பயணிகள் மூலம் உள்ளே வருவது தடுக்க படலாம், சீன-நேபாள-இந்திய எல்லைப் பகுதிகளில் பாதுகாப்பு குறைவு, அங்கிருந்து பரவ வாய்ப்பு உண்டு. இவ்வளவு மக்கள் தொகைக்கு போதுமான மருத்துவ வசதிகள் சீனாவிலோ, இந்தியாவிலோ மிகக்குறைவு. தற்போது தமிழ்நாடு கொரானாவால் பாதிக்கப்படவில்லை, அதனால் நமக்கு வரும்போது கவலைப்படலாம்,
பாஸிடிவ் பக்கங்கள்

சீன நர்ஸ்களின் பணி மிகவும் போற்றத்தக்கது, நேரம், காலம் பார்க்காமல் பணிபுரிகிறார்கள், அவர்கள் முகமூடிகள் முகத்தையே சிதைத்த போதிலும். தேவதைகள்.

பல நாடுகள் சீனாவில் இருக்கும் தன் நாட்டு மக்கள் திரும்பி வருவதை விரும்பாத போது, இந்தியா தனி விமானத்தில் நம் சகோதரர்களை அழைத்து வந்திருக்கிறது.

கேரளாவில் கொரானாவுடன் வந்தவர்கள் பூரண குணமாகி விட்டதாக கேரள அரசு தெரிவித்துள்ளது.

பொதுவாக இந்தியர்களின் மரபணு, கொரானாவிற்கு எதிரான தன்மையுடன் காணப்படுகிறது எனவும், பாதிப்பு குறைவாக இருக்கும் எனவும் மரபணு வல்லுநர்கள் கூறுகின்றனர்.