Sunday, January 24, 2016

கஜினி என்னும் கொடூரன்

சோமநாதர் கோவிலில் அவன் செய்த காரியம் அவனை எவ்வளவு கொடூரமான கீழ்தரம் மிக்க அரக்கன் என்பதை சொல்லும்

குழந்தை தேர்வில் தோற்றால் வரலாறு தெரியாதவர்களால் உதாரணமாக சொல்லப்படும் கஜினி முகமது இந்தியாவை நோக்கி 17 முறை போரிட்டு தோற்ற காமெடியன் அல்ல, இந்திய வளத்தை திருடி சென்ற,வெறி பிடித்த கொடூரமான கொலைகாரன், அவன் ஒருமுறை கூட அதில் தோற்றதில்லை, ஒவ்வொரு முறையும் வெற்றியே தான்.

சரியாக கிபி 1000ல் ஆப்கானிஸ்தானின் கஜினி எனும் ஊரிலிருந்து வந்த முகமது எனும் கொள்ளைக்காரன், கட்டட கலை, கோவில், சிற்பங்கள், இயற்கை வளங்கள், கலாசாரம், பொன், பொருட்கள்  நிரம்பிய பெரும் பணக்கார நாடான இந்தியாவை, வெறும் பாலைவனத்தையும், மண்ணையும் கொண்ட மற்ற நாட்டு மன்னர்கள் போல் அவனும் படையெடுத்து வந்ததில் ஆச்சர்யமில்லை
 மிக பெரும் குதிரை படையும், கோர தாண்டவமாடும் படை வீரர்களும், மிகுந்த புத்திசாலித்தனமாக திட்டமிடும் மந்திரிகளும் கஜினி முகமதுவின் பெரும் பலம்


குஜராத்தில் கடற்கரை ஓரம் இருந்த சிவன் கோவில் மிகுந்த புகழ் பெற்ற ஒன்று.  அப்போதே அதன் கர்ப்ப கிரகத்தில் சிவன் அந்தரத்தில் எந்த பிடிப்பும் இல்லாமல் அமர்ந்திருக்கும்படி கட்டட வல்லுனர்கள் அமைத்திருந்தார்கள், அந்த கோவிலுக்குள் சுமார் பத்தாயிரம் கிராமங்கள் அடங்கும் என்றால் அதன் செல்வ செழிப்பு பற்றியும் புகழ் பற்றியும் தெரிந்து கொள்ளலாம்

மன்னர்களும், செல்வர்களும், பக்தர்களும் அளித்த செல்வம் சிறு மலையாகவே குவிந்து இருக்கும், ஆயிரக்கணக்கான தங்க விக்ரகங்களில் அணிய  தங்கம், வைரம், வைடூரியம்கள் என அது ஒரு ஆயிரம் திருப்பதிக்கு சமமாக இருக்கும்

அது தவிர தங்க காசுகள் குவித்து வைக்கபட்டிருக்கும், அர்ச்சகர்கள் மட்டும் ஆயிரம் பேர் இருப்பார்கள், விசேஷ காலங்களில் லட்ச கணக்கில் பக்தர்கள் கடலில் நீராடி கோவில் விழாவில் கலந்து கொள்வார்கள்

அப்படிப்பட்ட கோவிலுக்குள் தான் தன் வெறித்தனமான படை வீரர்களுடன் புகுந்தான் கஜினி, அது ஒரு எளிதான பெரிய கொள்ளையாக இருக்கும் என்ற நினைப்பிலேயே  உள் நுழைந்தான், ஆனால் ஆயுதங்கள் ஏதுமில்லாத ஆயிரக்கணக்கான மக்கள் அவனை தடுத்து நிறுத்தினர், இதை எதிர் பார்க்காத அவன் அனைவரையும் வெட்டி வீழ்த்துமாறு ஆணையிட்டான்

கோவிலையும் இறைவனையும் பொருட்களையும் காக்க அர்ச்சர்கர்கள், பொதுமக்கள், பெண்கள், குழந்தைகள் என அவர்கள் வெட்ட வெட்ட மேலும் மேலும் கதறியபடி, அழுதுகொண்டு தடுக்க வந்து கொண்டே இருந்ததுதான் அவனுக்கு பெரும் அதிர்ச்சி

கொஞ்சம் கூட மனிதாபிமானமில்லாமல் மொத்தமாக அவன் கொன்று வீழ்த்தியது ஐம்பதாயிரம் பேரை,  அதன் பின் அவன் அந்த கோவிலையும் இடித்து தள்ளி விட்டு அதனை செல்வங்களையும் அள்ளி சென்றான் என்பதை வரலாற்றின் கொடுமையான செயலில் முதன்மையானது என வருத்தம் கொண்டு எழுதி இருப்பவர் அரபு நாட்டை சேர்ந்த தோல் பொருள் ஆராய்ச்சியாளர் அல்காஸ்வினி

  

No comments:

Post a Comment