Tuesday, January 12, 2016

கவிதைகள் 2

மரண கனவை காலால் உதைக்கிறேன்,
எமனின் "அய்யோ" என்று
அலறும் குரல் கேட்கிறது
-------------------------


 இந்தியாவின் கேப்பிடல்  டெல்லி என்கிறது
சிறுவர்களுக்கான வரலாற்று புத்தகம்
அது சுவிஸ் வங்கியில் பதுங்கி இருக்கிறது என
எப்படி சொல்ல?
-------------------------

 யாரையேனும் எப்போதும் நேசிப்பதில்தான்
உயிர்ப்போடு இருப்பதின்
இரகசியம் ஒளிந்திருக்கிறது
-------------------------

 வரும் தேர்தலிலும் போட்டியிட்டு
தோற்று போகும்
-ஜனநாயகம்
-------------------------

 வாழ்ந்த சுவடுகள் ஏதுமின்றி
ஒரே ஒரு நொடியில் கரைந்து போய் விடும்
ஒரு அழகான மரணம் வேண்டும்
ஆசை
-------------------------

 நிம்மதியான இரவு தூக்கத்தின் சாவியை,
இணையம் பறித்துக்கொண்டு விட்டது

 -------------------------

 எனக்கு இழைக்கப்பட்ட துரோகத்திற்கு
இரண்டு காரணங்கள் உண்டு,
ஒன்று என் எதிரி,
இன்னொன்று நான்.
-------------------------

 அன்பும் கருணையும் பிறப்பில்
இயல்பாகவே இருந்ததுதான்...
காலபோக்கில் நாம்தான்
தொலைத்து விடுகிறோம்


-------------------------

No comments:

Post a Comment