Tuesday, January 12, 2016

நகுலன் கவிதைகள்

எனக்கு யாருமில்லை
நான்
கூட...
-------------------------

 நினைவு ஊர்ந்து செல்கிறது
பார்க்கப் பயமாக இருக்கிறது
பார்க்காமல் இருக்கவும்
முடியவில்லை
-------------------------

 நான் இறந்த பின்
யாரும் எனக்கு விழா எடுக்க வேண்டாம்,
என்னால் கலந்துகொள்ள முடியாது
-------------------------

 மனம் நினைவுகூரும்
அந்த முள் பிசகாத நிமிஷத்தில் கவிதை பிறக்கிறது.
இது சிருஷ்டி ரகசியம்!
-------------------------

 மனதின்  எந்த கதவு  எப்போது  திறக்கும்,
என யாருக்கு தெரியும்?
-------------------------

 என்னைப் பார்க்க வந்தவர்
தன்னைப் பார்
எனச் சொல்லிச் சென்றார்!
-------------------------

 வேலைக்குத் தகுந்த வேஷம்
ஆளுக்கேற்ற அபிநயம்
இதுதான் வாழ்வென்றால்
சாவதே சாலச் சிறப்பு
-------------------------

 சிலர்
வந்ததும்
வந்து
சென்ற
பிறகும்
சூன்யமாகவே
மிஞ்சுகிறார்கள்.
-------------------------

 அலைகளைச் சொல்லிப் பிரயோஜனமில்லை
கடல் இருக்கிற வரை.
-------------------------

 இருப்பதற்கென்றுதான்
வருகிறோம்
இல்லாமற்
போகிறோம்


-------------------------

No comments:

Post a Comment