Monday, January 29, 2018

ஊழின் சிக்னல்

"ம்ம்மா ..."
ஏற்றிவிட்ட கண்ணாடிசாளரத்தையும் 
மீறி என் காலடியில்
வந்து விழுந்தது
அந்த அழுக்கு குழந்தையின்
இரவல் குரல்..
கறுத்த கைகள் நீட்டி
சன்னலைத் திறந்துவிட
முயல்கிறது...தனக்கான உரிமையை
கேட்கும் பாவனையுடன்..!!
சில்லறை தேடி என் கைகள்
துழாவ, அருகிருந்து
பதறுகிறாள் மகள் "அப்பா ..சீக்கிரம்
சிக்னல் போடப்போறாங்க .."
எளிய சிக்னல் நிறுத்தங்கள்
சோதிக்கின்றன...நமது காருண்யத்தை..!!
பச்சை விழ, சாளரத்தை இறக்கி
சிறு பிஸ்கட் நெகிழியையும்,
நீர்ப்போத்தலையும்
தேவதைக்கு அளிக்கும் சாக்கில்
கரிய பாதங்களை வருடி
ஊழின் பொருட்டு மன்னிப்பு
கேட்டுக்கொள்கிறேன்..!!
---அனலோன் 

நகைச்சுவை

Lady : உள்ளே வரலாமா டாக்டர்?

Dr : வாங்க மேடம்.வந்து உக்காருங்க.என்ன பிரச்னைன்னு சொல்லுங்க.

Lady : என் பையனுக்கு ஒடம்பு சரியில்லை!

Dr: பேர் என்னம்மா?

Lady : மஞ்சுளா!

Dr : என்னது ஆம்பளப் பிள்ளைக்கு மஞ்சுளான்னு பேர் வெச்சிருக்கீங்க?

Lady : டாக்டர் அது என் பேரு!

Dr : பையன் பேர சொல்லுங்கம்மா!

Lady : குஞ்சு!

Dr: மொத்தமே அதுதான் பேரா?

Lady : இல்லை. அது நாங்க வீட்டுல கூப்பிடுற பேர்!

Dr : படுத்தாதீங்கம்மா! பையனுக்கு என்ன?

Lady : லூஸ் மோஷன்!

Dr : எப்படிப் போறான்?

lady : அது, கதவத் தொறந்து வெச்சா போதும் டாக்டர், உடனே ஓடிப்போயிடுவான்!

Dr : அம்மா நீங்க எப்போவுமே இப்படித்தானா!

Lady : இல்ல டாக்டர், சுடிதாரும் போடுவேன். இன்னைக்கு சாரி கட்டிருக்கேன்!

Dr : கடவுளே...அம்மா, பையன் ஆய்...ஆய்… அது எந்தக் கலர்ல போறான்னு கேட்டேன். புரிஞ்சுதா?

Dr : சரி... சாப்ட்டானா?

Lady : இல்ல டாக்டர் நல்லவேளை அதுக்குள்ளே அவன் கைய கழுவி விட்டுட்டேன்!

Dr : அம்மா, நான் அதக் கேட்கலம்மா.
இப்படி என்னை பாடா படுத்தாதீங்க.உங்க வீட்டுல வேற யாரும் இல்லையா?

Lady : இல்லைங்க.என் வீட்டுகாரர் துபாய் போய் அஞ்சு வருஷம் ஆச்சு.

Dr: என்னம்மா இது..பையனுக்கு ரெண்டு வயசு தான் ஆகுது.அவர் ஊருக்குப் போய் அஞ்சு வருஷம்.எப்படி இது?

lady : ச்சீசீ...அவர் இடைல ரெண்டு நாள் ஊருக்கு வந்திருந்தார்.ஒரு பிரச்னைக்காக.

Dr : ஓஓஓஓ அப்படியா.! சரி,சொல்லுங்க ...

Lady : அது ஒரு சொத்துப் பிரச்னை டாக்டர்.

Dr : அதுக்கு நீங்க வக்கீல்கிட்டதானே போகணும்? இங்க ஏன் வந்தீங்க?
நான் பையனுக்கு என்ன பிரச்னைன்னு கேட்டேன்.!

Lady : அதுதான் சொன்னேனே, லூஸ் மோஷன்.

Dr : ஓ சாரி...

Lady : அதான் என் பையன சரி பண்ணிடுவீங்களே,அப்புறம் எதுக்கு சாரி?

Dr : ஐயோ ஆண்டவா.! பையன் சாப்பிட்டானான்னு கேட்டேன்.

Lady : இல்லை டாக்டர், காலைல ரெண்டு தடவை பால்தான் குடிச்சான்.

Dr : சர்க்கரை எவ்வளவு போட்டீங்க?

Lady : தாய்ப்பாலுக்கு எப்படி சர்க்கரை போடறது டாக்டர்?

Dr : ரெண்டு வயசுப் பையனாச்சே, தாய்ப்பால் இன்னுமா கொடுக்கறீங்க?

Lady : ஆமாம் டாக்டர்! அவன் அவங்க அப்பா மாதிரி.

Dr : என்னம்மா இவ்வளவு பச்சையா....

Lady :இல்ல டாக்டர், மஞ்சளாப் போறான்!

Dr: அம்மா! நீங்க பச்சையா பேசறீங்கன்னு சொல்லவந்தேன்!

Lady : டாக்டர், நீங்க தப்பா புரிஞ்சுக்கிட்டீங்க.
அவங்க அப்பா அஞ்சு வயசு வரைக்கும் தாய்ப்பால் தான் குடிச்சாறாம். நான் அதைச் சொன்னேன்.

Dr : ம்க்கும் எனக்கு இந்த இன்பர்மேஷன் ரொம்பத் தேவை.பையன் ஆவின் பால் ஏதும் குடிச்சானா?

Lady : இல்லை டாக்டர் நான் ஆரோக்யாதான் வாங்கறேன்.

Dr : முருகா! ஏம்மா இப்படி சோதிக்கிறே.! உங்க வீட்டுக்காரர் எப்பம்மா வருவார்?

Lady : அவர் இன்னும் அஞ்சு வருஷம் கழிச்சுத்தான் வருவார்!

Dr : ம் ...கொடுத்து வெச்சவன்!
சரி, நீங்க என்ன சாப்பிட்டீங்க?

Lady : வர்ற வழியில தலப்பாக்கட்டி பிரியாணி!

Dr : ஏம்மா, பையனுக்கு லூஸ் மோஷன், தாய்ப்பால் வேற கொடுக்குறீங்க,பிரியாணி சாப்பிடலாமா?

Lady : ஏன் டாக்டர், புல்லு சாப்பிடுற மாட்டுப் பாலே தர்றோம்! அது மட்டும் பரவாயில்லையா?

Dr : அம்மா! நான் உங்கள மாதிரி மாட்டையெல்லாம் உட்கார வெச்சு அட்வைஸ் பண்ண முடியாது.சரி,உங்க பையன் எத்தனை தடவை போனான்?

Lady : எங்க டாக்டர்?

Dr : ம்! என் தலை மேல...லூஸ் மோஷன் எத்தனை தடவைம்மா போனான்?

Lady : அப்படிக் கேட்கலாம்ல்ல, என்ன டாக்டரோ.நாலுதடவை போனான்.

Dr : தண்ணி மாதிரி போனானா?

Lady : இல்ல டாக்டர், சாம்பார் மாதிரி மஞ்சளா.

Dr : அம்மா இதுக்குமேல நீங்க பேசவே வேண்டாம்.இந்த மாத்திரைய மூனு வேலை தண்ணீல கரைச்சுக் குடுங்க.அப்புறம் இந்த பவுடர.....

Lady : பூசிவிடவா டாக்டர்?

Dr : ம். ஆமாம்,.அதுக்கு முன்னால, அந்த எடத்துல fair and lovely கொஞ்சம் பூசிவிடுங்க.சாவடிக்கறீங்களே.! நான் என்ன மேக் அப் கிளாசாம்மா நடத்துறேன்?
சுடுதண்ணீல கரைச்சுக் குடுங்கம்மா.
ரெண்டு நாள்ல மோஷன் நிக்கலைன்னா,திரும்ப வந்து எங்கிட்ட காட்டுங்க.

Lady : டப்பாவுல போட்டு எடுத்துக்கிட்டு வரவா டாக்டர்?

Dr : அம்மா அங்காள பரமேஸ்வரி

Lady : என் பேர் மஞ்சுளா டாக்டர்.

Dr : உங்க பையன் குஞ்சக் கொண்டாந்து காமிங்கனு சொன்னேன்.புரிஞ்சதா?

Dr : அம்மா, உங்க பையன் பேர் அதுதானே!

Lady : இல்ல டாக்டர், அது வீட்டுல கூப்பிடுறது.வெளியில ஹ்ரிதிக் ரோஷன்னு கூப்பிடுவோம்.

Dr : நீங்க லூஸ் மோஷன்னே கூப்பிடுங்க. எனக்கென்ன வந்துச்சு.!

Lady : டாக்டர், சாப்பாடு டயட் பத்தி சொல்லலியே?

Dr : என்ன எங்கம்மா பேச விட்டே நீ?

Dr : காலைல மூணு இட்லி, மதியம் ஒரு கப் தயிர் சாதம், ராத்திரி ரெண்டு தோசை அல்லது மூணு இட்லி.

Lady : அவன் அவ்வளவு சாப்பிட மாட்டான் டாக்டர்.

Dr : தாயே, இது உங்களுக்கு சொன்னேன். ரோஷனுக்கு மோஷன் நிக்கற வரைக்கும் நீங்க டயட்ல இருக்கணும்.

Lady : அப்போ, நைட்டுக்கு வாங்கிட்டு வந்த பார்சல் பிரியாணிய என்ன செய்ய?

Dr : உங்க வீட்டுல நாய் இல்லைன்னா, வெளியில நர்ஸ் இருக்கும், அதுக்குக் கொடுத்துடுங்க!

Lady : ஏன், அவங்க உங்க செட்டப்பா?

Dr : கடவுளே, கிளம்பும்மா ப்ளீஸ்.

Lady : டாக்டர் பீஸ்?

Dr : நர்ஸ்கிட்ட கொடுத்துட்டுப் போம்மா.

Lady : அப்போ செட்டப்புதான்.நான் வரேன் டாக்டர்.

Dr : வராதம்மா! தயவு செஞ்சு அப்படியே போய்டு!

(நர்ஸ்.. லைட் லாம் ஆஃப் பண்ணுங்க.. HOSPITAL ஒருவாரம் லீவு..)
😊😊 #WA

Sunday, January 28, 2018

பெருந்தேவி

நீங்கள் முயல்குட்டி வாங்கியதாகச் சொன்னீர்கள்

சற்று பொறாமையாக இருந்தது

அது கிளிபோல் பேசுகிறது என்றீர்கள்

சற்று சந்தேகமாக இருந்தது

அதன் பாசிக்கண்ணில் பிரபஞ்சத்தைக்

கண்டதாகக் கூறினீர்கள்

சற்று ஆச்சரியமாக இருந்தது

அதன் பெயர் மிருது என அறிவித்தீர்கள்

தொடவேண்டும் போலிருந்தது

தொட்டும் தொடாமலும் அதைத் தீண்ட

கடவுளால் மட்டுமே முடியும் என்றீர்கள்

கடவுள்மேல் சற்று நம்பிக்கைகூட வந்தது

வெல்வெட் துண்டு அதன் காது என

வர்ணீத்தீர்கள்

வெல்வெட் வெல்வெட் என்று

சொல்லிப் பார்த்துக்கொண்டேன்

அது கேரட்டைக் கடிக்கும் அழகுக்குத்

தலையையே தந்துவிடலாமெனப் பரவசப்பட்டீர்கள்

என் தலையையும் கூடவே தரத்

தயாராக வைத்திருந்தேன்

இன்றுதான் உங்கள் முயலை

முதன்முதலில் பார்த்தேன்

என் வீட்டுச் சுற்றுச் சுவரில்

ஒன்றுக்கடித்துக்கொண்டிருந்தது

என்னவாகவும் இருக்கட்டுமே

உங்கள் வீட்டுக்குள் வைத்துக்கொண்டு

நீங்களே பீற்றிக்கொள்ளுங்கள்

வாயாடிக் கவிதைகள்  

Friday, January 19, 2018

ராயல் என்பீல்ட் புல்லட்

தம்பி மாமாவின் டீசல் புல்லெட்டை திருட்டு தானமாக ஸ்டார்ட் செய்து ஒரு ரவுண்ட் வருவது ஒன்பதாம் வகுப்பில் கொள்ளை இன்பம் கொடுக்கும். கார் வரை வந்து விட்ட போதும், ஏனோ இன்று வரை அந்த மயக்கம் மாறவே இல்லை, அதிலும் அந்த பழைய வண்டிகளின் கீரும், பிரேக்கும் இப்போது வண்டிகளில் நேர் மாறாக இருக்கும், ஆம்ஸ் நேராக வைத்து ஸ்டார்ட் செய்வது ஒரு கலை. அதிலும் டீசல் புல்லட்டை பள்ளி சிறுவன் நான் ஓட்டி கொண்டு போவதை வாயை திறந்து பார்ப்பவர்கள் முன்னாள் "ஷோ" காட்டுவது  அத்தனை பரவசம் தரும்.

 பழைய வண்டிகளை எடைக்கு போடும் நிலை வந்து மீண்டு இன்று உச்சத்தை தொட்டுவிட்ட (கேரள இளைஞர்களின் பங்கு அதில் அதிகம், அவர்கள் திடீர் மோகம் கொண்டு புல்லட் நிறுவனத்தை பெரு வாழ்வு வாழ வைத்து விட்டார்கள்) அதன் மீது மீண்டும் மயக்கம் தொற்றி கொள்ள என் மகனும் ஒரு காரணம். அவனது பல்லே சரியாக முளைக்காத தோழன் விதைத்த விதையில் சாலையில் வாகனத்தை பார்த்தாலே துள்ளி குதிக்கும் புல்லெட் வெறியனாக மாறி விட்டான்.
     பல்சரில் மூன்றாவது முறையாக விழுந்து காலில் தையல் போடும் நிலைக்கு வந்த பின் ஆக்ட்டிவா போன்ற வண்டி வாங்கி செட்டில் ஆகி விடலாமென்று என் மாமன் மகனிடம் பல்சரை தள்ளி விட்டு கொஞ்ச நாள் அவனின் வண்டியை ஓட்டிக் கொண்டிருக்கிறேன் என எடுத்து வந்தேன்.
  சிறு வயது முதல் கீர் வண்டியே ஓட்டி பழக்கப்பட்ட நான், அதை ஓட்டுவதில் இயல்பே வரவில்லை, சிறிய சக்கரங்கள் வேறு, எனது உயரத்திற்கு (6 feet) என்னை பெண்ணாகவே உணர வைத்தது (தனிப்பட்ட கருத்து, ஆக்ட்டிவா வெறியர்கள் மன்னிக்க)
  சரி ஒரு புதிய புல்லேட்டே வாங்கி விடுவோம் என கோவையில் உள்ள ஷோரூம்களுக்கு சென்றால் பதிவு செய்து ஒரு மாதத்திற்கு மேல் காத்திருக்க வேண்டுமென சொன்னதால் செகண்ட்ஸ் வாங்க முயற்சி செய்தேன்.
  1965ம் ஆண்டு G2 வண்டி என ஒன்றை பார்த்தேன் 2 லட்சம் ரூபாய் சொன்னார்கள், அப்படியென்ன இதில் இருக்கிறது என்றால் அதில் ஒரு கிளைக் கதை விரிந்து சென்றது, சுதந்திரத்திற்கு பிறகு இங்கேயே தங்கி விட்ட வெள்ளையர்களுக்காகவும், குறிப்பிட்ட ராணுவ வீரர்களுக்காகவும் இங்கிலாந்தில் இருந்து கொஞ்சம் வண்டிகளை இறக்குமதி செய்தார்களாம், அந்த வண்டிகளின் எஞ்சின் மிக வலுவானதாம், அது சரியாக பராமரித்தால் இன்னும் நூறு ஆண்டுகளுக்கு உழைக்குமாம்.
அது வேலைக்கு ஆகாது என பல வண்டிகளை இணையம் மூலம் நான், எனது அப்பா, அவர் நண்பர்கள், என் நண்பர்கள், எனது புல்லெட் ஆசான் தம்பி மாமா என ஒரு படை தேடியது. கடந்த ஒரு மாதத்தில் மாடல் சொன்னால் அதன் புகைப் படம் பார்த்தே விலை நிர்ணயிக்கும் அளவு கிறுக்கன் ஆகி இருந்தேன்.
 கடந்த வாரத்தில் தேடி கிட்டத்தட்ட பார்த்த 15 வண்டிகளில் பிடித்த 4 வண்டிகள் விலை கட்டுப்படியாகமல், வண்டியில் வேலைகள் நிறைய இருந்ததாலும் சோர்ந்து இன்னும் கொஞ்ச காலம் ஆக்ட்டிவாவிலேயே பொழுதை ஓட்டலாம் என மனதை தேற்றிக் கொண்டேன்.
 சென்ற வார இறுதியில் இணையத்தில் தேடிய போது ஒரு கல்லூரி தாளாளரின் வண்டி பார்க்கையில் பிடித்து போனது விலையும் கட்டுப்படியாகும் என தோன்றி போன் செய்த போது அது ஈரோட்டில் இருந்தது, உடனே எனது மாமன் மகனை அழைத்து வண்டியை பார்க்கும் படி சொன்னேன், அவன் அதை அருகில் இருந்த புல்லெட்  மெக்கானிக்கின் கடைக்கே வரவழைத்து சோதனை செய்து "வாங்கலாம் மாமா" என சட்டிபிகேட் கொடுத்தான்.
 அப்புறம் என்ன? உடனடியாக அட்வான்ஸ் கொடுக்க சொல்லி விட்டு வண்டியை கைப்பற்றி அடுத்த நாளே ஈரோடு சென்று பணம் செட்டில் செய்து எடுத்து வந்தாகி விட்டது.
புல்லட்டில் standard அல்லது Electra அதிகம் செலவு வைப்பதில்லையாம், வாகனத்திலும் அதிக தொந்தரவு தருவதில்லையாம். நான் வாங்கி இருப்பது Electra வகையறா.

 என் மகனுக்கு சொல்லாமல் சஸ்பென்ஸ் வைத்து,  தூங்கி கொண்டிருந்தவனை எழுப்பி "வண்டி வாங்கியாச்சு குட்டிமா" என்றவுடன் வாயெல்லாம் பல்லாக அந்த நாள் முழுவதும் அதை சுற்றி வந்து கொண்டே இருந்ததை, அவனின் டவுசர் கூட ஒழுங்காக போட தெரியாத நண்பர்களை கூட்டி கொண்டு வந்து வண்டியில் ஏற்றி விளையாடி கொண்டிருந்ததை தனி கட்டுரையாக எழுதலாம்

கடைசியாக உங்களிடம் சொல்ல ஆசைப்படுவது
 "ஆண்களின் ராஜவாகனமய்யா புல்லட்"

Sunday, January 14, 2018

திட்டமிட்டு குடியுங்கள் - சில டிப்ஸ்கள்

இது குடிக்க வைப்பதற்காக எழுதப்பட்ட tl அல்ல, குடிக்காதவர்களும், பெண்களும் இதை படித்து விட்டு புத்தி சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. தயவு செய்து மேலே தொடராமல் கிளம்பி விடுங்கள். அது உங்களுக்கும் எனக்கும் நல்லது. 

மாதத்தில் ஒரு நாள் மட்டுமே குடிக்கும் பழக்கமுள்ள ஒருவனால் எழுதப்பட்டது தான் இது.

சில டிப்ஸ்கள் 
1. குடிக்க தெரியாதவர்களை தயவு செய்து புதிதாய் குடிக்க வைக்க முயற்சி செய்யாதீர்கள், அதன் பிற்பலன் ஆபத்தானது. அவர்கள் சேட்டை தாங்க முடியாது. 

2. தெரு சண்டை போடவோ, நாம் இந்த உலகத்தில் பெரிய பருப்பு என்று காட்டவோ குடிக்க வேண்டாம், அதில் சில பல நஷ்டங்களை சந்திக்க வேண்டி இருக்கும். பேர் கெட்டுவிடும் அபாயமும் இருக்கிறது. 

3. காசில்லாத பெரும் குடிகாரர்களை கூட்டு சேர்க்க வேண்டாம். மொட்டையாய் வெளியே வருவீர்கள். 

4. முடிந்த மட்டும், வீட்டாரிடம், அனுமதி வாங்கி மொட்டை மாடி போல ஒரு இடம் தேர்ந்தெடுங்கள், சில பாடல்களை மொபைலில் ஒலிக்க விட்ட படி, சுவையான தீனிகளை வைத்து கொண்டு, தனியாக கொஞ்சம் கொஞ்சமாக அனுபவித்து குடிக்க சிறந்த வழி. எனது வழி அதுதான்.

5. பார்ட்டி எனில் சொந்த வாகனத்தை தவிர்த்து விடுங்கள், கால் டாக்ஸி வைத்து வீட்டுக்கு வந்து சேருவது சரியான வழி.

6. சோகத்தின் போதோ, தோல்வியின் போதோ குடிக்காதீர்கள், எனக்கு தெரிந்து நிறைய நண்பர்கள் போதைக்கு அடிமையாகி மீள முடியாமல் போனது அப்படிதான். குடிப்பதை ஒரு கொண்டாட்டமாக மாற்ற வேண்டுமானால் குடியுங்கள்.

7. டாஸ்மாக்கில் அவசர அவசரமாக குடிப்பவர்கள், இதை படிக்க வாய்ப்பில்லை, இது அவர்களுக்காக எழுத பட்டது அல்ல.

8. மாதம் ஒரு முறை குடியுங்கள், அது சம்பள நாளாக இருந்தால் நல்லது. 

வேறென்ன? 
குடி குடியை கெடுக்கும் 

குக்கரிலேயே மட்டன் தம் பிரியாணி செய்வது எப்படி?

விளக்கம் இங்கே! -

Thursday, January 4, 2018

குற்றப் பரம்பரை புத்தக விமர்சனம்

வேலா ராமமூர்த்தி எழுதிய இந்த புத்தகத்தை டிஸ்கவரி புத்தக நிறுவனம் வெளியிட்டிருக்கிறது. இதுதான் இவர் எழுதியதில் நான் படிக்கும் முதல் புத்தகம்.
 Criminal Tribes Act எனும் குற்ற பரம்பரை சட்டம் இந்தியாவை வெள்ளையர்கள் ஆண்ட போது சில குறிப்பிட்ட சமூகத்தினர்மீது அவர்கள் கொள்ளையடிப்பதை தடுக்கும் பொருட்டு சுமார் நூறு ஆண்டுகளுக்கு முன் அறிமுகம் செய்யப்பட்டது. (அதாவது வெள்ளைக்காரர்கள் மட்டும் திருட வேண்டும் ;) வேறு யாரும் பங்குக்கு வந்து விடக் கூடாது என்ற நோக்கத்தில் வைத்து கொள்ளலாம் )
 ஒரு நூற்றாண்டுக்கு முந்தய வாழ்வை அப்படியே கண் முன் கொண்டுவந்து நிறுத்தியிருக்கிறார் வேலா. ஆதிரை, காடு, எனது இந்தியா போன்றவை ஏறக்குறைய 400க்கும் மேற்பட்ட கொண்டவை, படிக்க சில நாட்களை தின்று தீர்த்தவை. ஆனால் 446 பக்கங்கள் கொண்ட இந்த புத்தகத்தை தினம் நூறு அல்லது நாற்றைம்பது பக்கங்கள் என்ற ரீதியில் நான்கு நாளில் முடித்து விட்டேன்.
 பரபரவென படு வேகமான, மிக அட்டகாசமான வரலாற்று தொகுப்புகளுடன் கூடிய தமிழில் முக்கியமான புத்தகங்களில் இதுவும் ஒன்று.
  கொம்பூதி கிராமத்து கள்ளர்களின் வாழ்க்கை தான் கதைக்களம், வீரம், மரணம், காதல், நெகிழ்வு, பசி, மகிழ்ச்சி, தொழில் நுணுக்கம், பழி வாங்கல் என எல்லா சுவைகளும் கொண்ட அறுசுவை விருந்து.
 இதில் எனக்கு மிக பிடித்த பகுதி வஜ்ராயினியின் வாழ்க்கை, அவளை பற்றி வேலா எழுதுகையில் மட்டும் காதல் நிரம்பி வழிகிறது. இயற்கை அழகு, கவிதை, மீன்களின் துள்ளல், அந்த மானின் பிரியம், கோபம், உணர்வுகளை கடத்தும் தன்மை என அது வேறு உலகம்
 ரயில் கடந்த பின் தண்டவாளம் அதிருமில்லையா, அது போல "ஆங்கார சூறாவளி ஒன்று முன்னோட்டம் காட்டி போனது" என ஆரம்பிக்கும் இப்புதினம் ஓயாத "அழுகுரல் ஊரணிக்கரை அலை சப்தமும் கேட்டுக்கொண்டே இருந்தன வரை" அதிர்வை கொடுத்துக்கொண்டே இருக்கிறது. 
 இயக்குனர் பாலாவும், பாரதிராஜாவும் இந்த கதைக்காக மோதி கொண்டார்கள் என்பது தெரிந்த விஷயமே, பாரதிராஜாவை விட பாலாவின் வடிவத்தில் வெளிவந்தால் பழைமை மாறாமல், சமரசம் செய்து கொள்ளாமல் அருமையான திரைப்படமாக உருவாகும் என்பது என் தனிப்பட்ட கருத்து.
 ஆனால் பாலா அந்த வருடத்தின் வேறு சம்பவங்களை கதை காலமாக்குவதாக அறிவித்து இருப்பதும் கூடுதல் ஈர்ப்பை தருகிறது.

தமிழில் தரமான கதை விரும்பிகள் தவற விடக்கூடாத புத்தகம் இது.