Saturday, April 16, 2016

இரவிற்கான இளையராஜாவின் உறக்க மாத்திரைகள் சில

இளையராஜாவை வெறும் இசை கலைஞன் என்பதை நான் எற்றுகொள்வதாய் இல்லை,

நம்மை கடந்த காலத்திற்கு நேரடியாக கொண்டு சேர்க்கும் டைம் மெசின் இவரின் இசை...
இரவுக்கென சில பிரத்யோக பாடல்கள் உண்டு. அவற்றில் சில.

கேட்க அமைதியான சூழலை தேர்ந்தெடுங்கள், மொட்டை மாடி, குளிர் காற்று, ஹெட் போன், தனிமை வாய்க்குமாறு பார்த்து கொள்ளுங்கள், மெல்ல கண்மூடி அனுபவித்தபடி கேட்கையில், உங்களுக்குள் வேறொரு உலகம் திறக்கும்.
பத்து பாடல்களை வரிசை படுத்தி இருக்கிறேன், மேலும் நேரம் கிடைக்கையில் இன்னும் முயற்சிக்கிறேன்.

"நாயகன் மேலிருந்து நூலினை ஆட்டுகின்றான், நாமெல்லாம் பொம்மையென்று நாடகம் காட்டுகின்றான்"
என்று இடையில் வரும் இந்த வரிகள் ஈர்த்தாலும் மொத்த பாடலும் சுகமான தெளிந்த நீரோடை

1. மறுபடியும்: எல்லோரும் சொல்லும் பாட்டு
----------------------------------------------------------------------
"நேற்று போல் இன்று இல்லை, இன்று போல் நாளை இல்லை"
மென்மையான ரஜினியும், spbயின் மாய குரலும் கட்டி போடும், காதலின் வழியே கசியும் ரகசியங்களை பாடலாக, இசையாக மொழி பெயர்த்து கொடுத்திருப்பார் ராஜா

2.தம்பிக்கு எந்த ஊரு: காதலின் தீபம் ஒன்று
-----------------------------------------------------------------------
"கலந்தாட கைகோர்க்கும் நேரம் கண்ணோரம் ஆனந்த ஈரம்"
இது, நீண்ட இடைவேளைக்கு பிறகு சுசீலா பாடிய, மகளுக்கான தாயின் முழு பிரியம் கலந்து கண்ணோரம் நீரை துளிர்க்க வைக்கும் மற்றொரு அற்புதம் இது.

3. கேளடி கண்மணி : கற்பூர பொம்மை ஒன்று
-----------------------------------------------------------------------
எஸ் ஜானகி பாடிய இது காதல் தாலாட்டு பாட்டு, "ஏக்கம் தீயாக ஏதோ நோயாக பார்க்கும் கோலங்கள் யாவும் நீயாக" லயிப்பில் ஆழ்த்திவிடும் ராகம்


4. கோபுர வாசலிலே: தாலாட்டும் பூங்காற்று நானல்லவா
-------------------------------------------------------------------------
நம்மை ஒரு அரசனாக உணர செய்ய வேண்டுமெனில் இந்த பாடல் சரியான தேர்வு, "வில்லோடு அம்பு ரெண்டு கொள்ளாமல் கொல்லுதே, பெண்பார்வை கண்கள் என்று பொய் சொல்லுதே" 
என பல்லவியில் ஒரு சொர்க்கத்தை உருவாக்கி தந்திருப்பார் ஜேசுதாஸ்.

5. ரெட்டை வால் குருவி : ராஜராஜ சோழன் நான்
----------------------------------------------------------------------------
"அன்பே நீயே அழகின் அமுதே" என மனோவுடன் ஜானகி இணைந்து பாடிய இது மிக பெரிய வரவேற்பை பெற்ற மீண்டும் கேட்க தூண்டும் பாடல்

6. செம்பருத்தி: நிலா காயும் நேரம் சரணம்
-----------------------------------------------------------------------------
"ஆயர்பாடியில் கண்ணன் இல்லையோ, ஆசை வைப்பதே அன்பு தொல்லையோ"
ஒரு முழு சங்கீத கச்சேரிக்கு உரிய இசை, சாமான்ய மனிதனையும் ஈர்த்து அந்த மெல்லிய சோக உணர்வை கொடுத்து விடக்கூடிய மித்தாலி எனும் அதிகம் அறியப்படாத பெண் பாடகி பாடிய காலத்தை கடந்து நிற்கும் பாடல் இது.

7. தளபதி: யமுனை ஆற்றிலே
---------------------------------------------------------------------------------
"தினம் தினம் உனக்கென உருகிடும் என் இதயமே" 
என விரியும் அற்புதமான கவிதைக்கு அதே கவிதை போல் இசை. ஜானகியின் குரலிலும் இந்த பாடல் இருந்தாலும், ஜேசுதாஸ் குரலில் கேட்கையில் இது உச்ச பரவசம்.

8. கிளிபேச்சு கேட்கவா : அன்பே வா அருகிலே
----------------------------------------------------------------------------------
"சொன்னாலும் இனிக்குது, நெஞ்சில் ஒலிக்குது இன்ப ராகமே" ரஜினியை அமைதியான, நெகிழ்வான மனிதனாக காட்டும் பாடல்களில் இது ஒன்று, அண்ணன் தாயாக மாறும், மிக மிதுவான ஒரு நல்ல மெல்லிசை பாடல் இது 

9. நான் சிகப்பு மனிதன்: வெண்மேகம் விண்ணில் இன்று கண்ணில் இன்று பன்னீர் தூவும் 
------------------------------------------------------------------------------------
முதல் கணினி இசை, முதல் தீம் இசை தமிழில் என்ற பெருமைகள் பல இப்படத்திற்கு உண்டு,
"கிளிகள் முத்தம் தருதா, அதனால் சப்தம் வருதா",
spbயின் உச்சகட்ட சிறப்பான பாடல்களில் இது முக்கியமானது

10. புன்னகை மன்னன் : என்ன சப்தம் இந்த நேரம்
--------------------------------------------------------------------------------------

இது இரவுக்கான நான் பரிந்துரை செய்யும் வெறும் பத்து இசை பாடல்கள் மட்டுமே, இன்னும் இன்னும் எழுதிக்கொண்டே போகலாம். ஆயிரக்கணக்கான நீளும் ராஜாவின் பாடல்களில் எதை எடுப்பது எதை விடுவது என்றே தெரியாத ஒரு குழப்பமே மிஞ்சும். தாங்களுக்கு பிடித்த பாடல்களையும் இயன்றால் பின்னூட்டம் இடுங்கள்


3 comments: