Wednesday, January 13, 2016

என் தத்துவம்ஸ்



"அம்மா யாரோ ஒரு அத்தை"


என கைகாட்டுகிறது குழந்தை,


தனக்காக நீட்டப்பட்ட


பிஞ்சுவிரலுக்காக கண்ணீரும்,


தாய்மையும் சேர்ந்து சுரக்கிறது


திருநங்கைக்கு


------------------------------










கள்ள நோட்டில் கூட


சிரிக்காமல் இருக்க தெரியவில்லை


இந்த காந்திக்கு


------------------------------










இப்படியும் இருக்கின்றன சில இரவுகள்.


தூங்குவதற்கென்றும்.,


தூங்காதிருப்பதற்கென்றும்....


------------------------------






நிராகரிக்கப்பட்ட


வரங்களுடனும், யாழிசையுடனும்


குருட்டுப் பிச்சைக்காரன்


------------------------------






சூரியனை கொத்தி பார்க்கிறது பசித்த காகம் ஒன்று,


-மழை நீரில்


------------------------------






டாஸ்மாக்கைக் கடக்கும்போது


யாரோ உள்ளிருந்து அழைப்பதாய்


ஓர் உணர்வு..


மனப்பிராந்தி???


------------------------------

No comments:

Post a Comment