Thursday, January 14, 2016

மகிழ்நன் கவிதைகள்

வழுக்கை
வழுக்கைத் தலைகளைப் பார்க்கும்போதெல்லாம்
நாளைய நானாகத் தெரிகிறார்கள் அவர்கள்!
ஒருவேளை அவர்களுக்கு
நேற்றைய அவர்களாகத் தெரியலாம் நான்!

----------------------------------------------------
 அயல்நாட்டில் தமிழ்

பிறந்த வீட்டைவிட
புகுந்த வீட்டில்
செழிப்பாய் இருக்கிறாள்  -‍ தமிழ்மகள்
 ----------------------------------------------------


தைரியம்

பயம் உடுத்தும் ஆடை  தைரியம்
--------------------------------------------------- 

அடைமொழி

அடைமொழிக்கு ஆசைப்படும் மனிதா
அறிவாயா? இறந்தபின்
உன் பெயரே உனதில்லை,
பிணமென்பார்.
 -----------------------------------------------

மச்சம்

இறைவன் வரைந்த கவிதையின்
முற்றுப்புள்ளி,

என்ன‌வளின் முகத்தில் மச்சம்.
----------------------------------------------------

No comments:

Post a Comment