Tuesday, January 12, 2016

கவிதைகள் 1

எடையைவிட ஒன்றிறண்டு காய்களை
அதிகமாய் தந்துவிட்டு 'குடுக்கிறதை குடு தாயி'
என கையேந்தும் ரோட்டோரக்கடை கிழவிகளுடன்
பேசப்படுகின்றன
பெரும்பேரங்கள்


 காகத்துக்கும் வைத்தால்தான்
சாப்பிடுவேன் என அடம்பிடிக்கிறது குழந்தை,
காகம் குழந்தையிடம்,
தன் பசி பற்றி
சொல்லியிருக்கலாம்!
-------------------------

 தினமும் சிரிக்கும் என் காதலன்
முதன் முதலாக இன்று அழுகிறான்...!
அவன் கண்ணீரை துடைக்க எழ நினைக்கிறேன்
நான் இறந்திருப்பத்தையும் மறந்து...
-------------------------

 பூஜையில் நடுவீட்டில் அருகம்புல் பிடித்து வைத்திருந்த தெய்வமாக கருதிய ஒன்றை
"அய்யே, சாணி"
என்ற வார்த்தையில் நாத்திகம் பேச துவங்குகிறது மழலை
-------------------------

 என்று வாழ்வின் மீது நம்பிக்கை இழக்கிறீர்களோ, அன்றிலிருந்தே
உங்கள் உடலை மட்டுமே
தாங்கியிருக்கும்
இந்த பூமி

-------------------------

No comments:

Post a Comment