Showing posts with label ட்விட்டர். Show all posts
Showing posts with label ட்விட்டர். Show all posts

Thursday, November 3, 2022

சில நகைச்சுவை ட்வீட்கள்

 இந்த குழந்தைக, பிடிச்ச பலகாரத்தை சாப்பிடும்போது எழுந்து போக வேண்டி வந்தா, தட்டையும் சேர்த்து தூக்கிட்டு போகுதுங்க... நம்ம மேல அவ்ளோ நம்பிக்கை

urs_priya

மனைவியின் மௌனத்தில் உள்ள கோபத்தை, ஊர்கூட அறியும். ஆனால், கணவனின் மௌனத்தில் உள்ள திருட்டுத்தனத்தை, மனைவி மட்டுமே அறிவாள் amuduarattai

மச்சினிச்சி வாட்சப் டீபி பார்த்து "சூப்பர்"ன்னு அனுப்பினா, "செருப்பு"ன்னு ரிப்ளை வருது. போன் அவங்க அக்காட்ட இருக்கும் போல -SriLiro

வாழ்க்கையில பழம்தின்னு கொட்டையைப் போடலாம்னு பார்த்தா, வாழைப்பழத்தைக் கையில குடுத்துட்டுப் போயிடுறாரு கடவுள் -sudhansts

இந்த வெள்ளைக்காரன்கிட்ட வேலை பார்க்கிறதுக்கு பதிலா ஊர்ல பன்னி மேய்க்கலாம். ஏதோ சொல்றானேன்னு நினைச்சிட்டு இருந்தா, அஞ்சு நிமிசமா என்னை திட்டிட்டு இருக்கான் -kattathora

திங்கள்கிழமை ஆபீஸுக்கு லீவ் போட்டுட்டு பஸ்டாண்ட்ல நின்னு ஆபீஸ் போறவங்களை வேடிக்கை பாக்குற சுகம் இருக்கே... From fb

``டேய், நிமிர்ந்து ஒக்காரு!” ஏதோ என்னாலான குழந்தை வளர்ப்பு. ThePayon

எப்பொழுதும் ஆர்ப்பாட்டமாய் ஆடிக்கொண்டிருக்கும் குழந்தை, அமைதியாய் வந்து உங்கள் அருகில் அமர்கிறது என்றால், அடுத்த ஐந்து நிமிடத்தில் வீடே ஆர்ப்பாட்டமாய் ஆகும் அளவுக்கு ஏதோ வேலையை செய்திருக்கிறான் என அர்த்தம் ItsJokker

"காதலித்து பார்" "பார்லதான்டா உட்கார்ந்திருக்கேன்" -BulletJackie

அப்பா ஒரு குறிப்பிட்ட வயசுக்கு மேல பையனை அடிக்கிறதை நிறுத்திட்டு... கல்யாணம் பண்ணிவெச்சுடுவார் -tamilhumourjoke

மனைவி: "உங்களுக்கு காபி வேணுமா?" நான்: "இல்லம்மா... வேணாம்" ம: "ஏன்?" நான்: "நீ டயர்டா இருப்பேன்னு சொன்னேன். போட்டுக் கொடுத்தா குடிப்பேன்" ம: "பால் கொஞ்சம் மிச்சம் இருக்கு. எப்படியும் கீழேதான் ஊத்தணும், அதான் கேட்டேன்" சற்றுமுன் நடந்த அசம்பாவிதம் fb/NaveenKumar Nadarajah

"டேய் குடிகாரப்பயலே" எனப் பொத்தாம்பொதுவாகக் கூவினால், பத்தில் எட்டு பேர் திரும்பிப் பார்க்கும் நிலையில் இருக்கிறது நம் தமிழ்நாடு! -killer

Friday, June 22, 2018

வலைபேசி 3

பலபெண்களின் "எக்ஸ்க்யூஸ்மீ" என்ற சொல், "நகருடா டேய்" என்பது போலவே ஒலிக்கிறது.

-----------------------------------------------------------------------------------

கல்யாணமாகி மூணு வருடங்கள் ஆனதும் மாமனார் நம்மை ஒரு ஆச்சர்யத்தோடவே பார்ப்பார்
"எப்படி இவன் சமாளிக்கிறான்?"

-----------------------------------------------------------------------------------


நம்ம மாதிரியே உலகத்துல ஏழு பேர் இருப்பார்களாம், நம்ம நிலைமையே கேவலமா இருக்கு, மிச்ச ஆறு பேரும் எந்த நாட்ல எந்த தெருவுல அவங்கெல்லாம் பிச்சை எடுத்துட்டு இருப்பாங்களோ. 

-----------------------------------------------------------------------------------


நெல்சன் மண்டேலா வருஷம் ஜெயில்ல சித்திரவதை, அடி, மிதி எல்லாம் தாங்கிருக்கார். வெளிய வந்து ஆறே மாசத்துல டைவர்ஸ் வாங்கிருக்கார்

-----------------------------------------------------------------------------------

நமக்கு எதெல்லாம் பிடிக்கும்னு ஒரு லிஸ்ட் போட்டு வச்சிக்கிட்டு அதெல்லாம் கிடைக்காம பாத்துக்கிறது தான் கடவுளோட வேலை போல

-----------------------------------------------------------------------------------

எடிசனின் ஆயிரமாவது முயற்சியிலும் அவருக்கு பல்ப் தான் கிடைத்தது

-----------------------------------------------------------------------------------

இந்த ஜென்மத்தில் அனுபவிக்க முடியாத போது புண்ணியம் எதற்கு?

-----------------------------------------------------------------------------------

"குடிசிருக்கியா" என விசாரித்த போலீஸ்காரர் என்னை விட அதிகமாக குடித்திருந்தார்

-----------------------------------------------------------------------------------

கடவுளே நாட்டு மக்களை நீதான் காப்பாத்தணும்னு வெளிய வந்தா என் செருப்பை காணோம், கடவுள் அதை போட்டுட்டு காப்பாத்த போய்ட்டாரு போல                           

-----------------------------------------------------------------------------------


கல்யாண மாலை நிகழ்ச்சியை எதேச்சையா பார்த்தது ஒரு குற்றமாய்யா? இவ ஏன் மொறைச்சு பார்த்துட்டு போறா?

-----------------------------------------------------------------------------------

நான் கோழிக்கு குளிருதுன்னு போர்வையை போர்த்தினேன், கோழி திருடுறான்னு பஞ்சாயத்தை கூட்டிட்டாங்க

-----------------------------------------------------------------------------------


உண்மையில் அது மணற் கொள்ளை இல்லை, நதிகளின் கொலை.

-----------------------------------------------------------------------------------

சில வீடுகளில் நாய்தான் மனுஷங்களை வாக்கிங் கூட்டிட்டு போகுது

-----------------------------------------------------------------------------------

டியர் காட், என் வாழ்க்கைக்கு சப் டைட்டில் அனுப்பவும் இதுவரை ஓடியதில் ஒன்றுமே புரிய மாட்டிங்குது

----------------------------------------------------------------------------------- 

அது என்னங்கடா அடுத்தவன் காலை மிதிச்சிட்டு, உங்க கைல முத்தம் கொடுத்துட்டு போறீங்க

----------------------------------------------------------------------------------- 

டேய் வாயைக்கட்டி வைத்தக்கட்டி மேனஜர் கிட்ட திட்டு வாங்கி சம்பாதிச்ச 
காசுடா.... தட்டி விட்றாதீங்கடா!!! இன்டெர்வல் பாப்கார்ன் மொமெண்ட்

----------------------------------------------------------------------------------- 

என் பையனுக்கு டெய்லி நைட்ல புலி வந்து உறுமுதாம் ஒருவேளை என் குறட்டையைத்தான் அப்படி நினைச்சிக்கிறானோ?

-----------------------------------------------------------------------------------

அறிவுரை என்பது தற்பெருமை

-----------------------------------------------------------------------------------

நாய்க கிட்ட இருந்து மனுசனுக கத்துகிட்ட ரெண்டாவது விஷயம் திடீர் திடீர்ன்னு ரோட்ல ஓடி வரது

-----------------------------------------------------------------------------------

பாலா, மிஸ்கின், செல்வராகவன் மூணுபேரையும் சிரிச்சா போச்சு ரவுண்டு விளையாட விடனும் #ரொம்ப நாள் ஆசை

----------------------------------------------------------------------------------- 



Friday, June 8, 2018

வலைபேசி 2

  பிடித்த ட்விட்டுகள் தொடர்கின்றன. 



குரங்கில் இருந்து வந்திருக்க வாய்ப்பில்லை அநேகமாக குரங்கு இனத்தில் இருந்து அடித்து துரத்தப்பட்டு வந்திருப்பான் மனிதன். 

------------------------------------------------------------ 



இஸ்லாமியர்களை போல் அனைத்து பெண்களும் பர்தா அணிய வேண்டும் மதுரை ஆதீனம் 

நீ முதல்ல சட்டையை போடு



------------------------------------------------------------ 


குழந்தை வளர்ப்பை குழந்தைகளிடமே கற்றுக்கொள்ளுங்கள், அவர்கள் பொம்மைகளை அழ விடுவதில்லை 

------------------------------------------------------------ 


தன்னை அறியாமல் ரஜினி பலநேரம் தனக்குள் இருக்கும் எம் எஸ் பாஸ்கரை வெளியே விட்டு விடுகிறார் 

------------------------------------------------------------ 

 வெறுப்பை உள்வாங்கி கொள்கிறோம் அன்பை அலட்சியம் செய்து தூர வைக்கிறோம்


------------------------------------------------------------ 

"காபி டே" எனப் பெயரிட்டவர் நிச்சயமாக ஒரு திருநெல்வேலிக்காரராகத்தான் இருக்க வேண்டும்!

------------------------------------------------------------ 

பிடிக்காத இடத்திலிருந்து சட்டென வெளியேறும் சுதந்திரம் பால்யத்தோடு முடிந்துவிடுகிறது 

------------------------------------------------------------ 

"பாவாயா பேரனா?" என்று முன்பு எங்கள் ஊரில் சில கிழவிகள் கேட்பார்கள், அதைத்தான் "People you may know?" என்கிறது இந்த facebook

------------------------------------------------------------ 

சீனாவில் காற்றை பாக்கெட்டுகளில் அடைத்து விற்பனை -செய்தி. 
நீ ரொம்ப லேட்டு, லேஸ் காரன் அதை பண்ணி பல வருசமாச்சு

------------------------------------------------------------  

       அசதியா இருக்குன்னு ஒரு நிமிசந்தான் கால நீட்டி உட்கார்ந்தேன்!  "கொடுத்து வச்ச வாழ்க்கையா"ன்னு ஒருத்தர் பாராட்டிட்டு போறாரு :(

------------------------------------------------------------   

மல்டிப்ளெக்ஸ் தியேட்டரில் எதுவும் சாப்பிடாமல் உட்கார்ந்திருப்பவன் கஞ்சன் அல்ல, புத்திசாலி  

------------------------------------------------------------   

திடீரென ஒருவன் நூறு எதிரிகளை சம்பாதிக்க, சிக்னலில் வண்டி ஆப் ஆவதே போதுமானதாக இருக்கிறது  

------------------------------------------------------------   

   சரக்கடித்த பின் பழைய கேர்ள் பிரெண்ட்ஸ்க்கு மெசேஜ் அனுப்பாமல் தடுக்கும் App இருந்தா எவ்வளவு நல்லா  இருக்கும் !!

------------------------------------------------------------

Saturday, June 2, 2018

வலைபேசி 1

 கடந்த சில வருடங்களுக்கு முன்பிருந்து நான் மிகவும் ரசித்து மறக்க இயலா பல ட்விட்டுகள் (கல்வெட்டுகள் அல்லது நங்கூரம்) தான் இந்த மலரும் நினைவுகள்...

எங்க தாத்தா கடைசிவரை சுதந்திரத்துக்கு போராடினார் எங்க பாட்டி தரவே இல்லை
---------------------------------------

"காக்கா ஜெயிச்சாலும் நரி ஜெயிச்சாலும் வடை பாட்டிக்கு கிடைக்க போறதில்ல. நாமதான் அந்த பாட்டி #அரசியல் #வட போச்சே!"
---------------------------------------

வகுப்பறையில் டீச்சர் "வெளியே போ" என திட்டினால் வாதத்தில் வென்று விட்டாய் என்று அர்த்தம்.
---------------------------------------

கல்யாண சமையல் அண்டாவில் காயை தேடுவது போலவே இருக்கிறது ஹர்பஜன் பேட்டிங் ஸ்டைல்
--------------------------------------- 

ரூபாய் நோட்டுக்களாக மாற்றப்படாத எந்த திறமையும் ஜெயிப்பதில்லை.
---------------------------------------

"மச்சி சாம்பார் வைக்கவா? ரசம் வைக்கவா?" "
முதல்ல ஏதாவது செய்டா, அப்புறம் பேர் வைக்கலாம்" பேச்சுலர் ரூம் பேஜார்கள்.
---------------------------------------

ஆழம் தெரியவேண்டுமானால் காலை விடாதே அடுத்தவனை தள்ளிவிடு #கார்போரேட் விதி
---------------------------------------


மனைவி கஸ்டமர் கேர் ரெண்டுமே ஒண்ணு. பிரச்சனைன்னு போன் பண்ணா அவங்க சொல்றதை தான் சொல்வாங்க, நாம என்ன சொல்றோம்னு கண்டுக்கவே மாட்டாங்க
---------------------------------------

குழந்தைகளுக்கு குழந்தைகளே தடையாக இருக்கின்றன. நான் நடுவுலதான் படுப்பேன்
---------------------------------------

ரம்யா நித்யா ஓவியா பேருக்கு பின்னாடி ஆம்பளை பேரை சேத்திக்கிட்டா மட்டும் நாங்க ஒரிஜினல் ஐடின்னு நம்பிருவமா #பிளடி பேக் ஐடி ப்ராடுகளா... பிச்சு... பிச்சு
---------------------------------------

மனைவி சமையல் பழகும் முன் மனைவி சமையல் பழகி விடுகிறது.
---------------------------------------

ஆபீஸ் கேன்டீன்ல ஒருத்தி அந்த ஒயிட் சட்னி கொடுன்னான்னு கேட்குறா, ஏண்டி உனக்கு நிஜமா அது தேங்கா சட்னின்னு தெரியாது
---------------------------------------

 போண்டா வடையோடு ஒப்பிட்டால் பஃப்ஸ்ல்லாம் வெறும் பித்தலாட்டம்.
---------------------------------------

புன்னகை வழிய போன் பேசுபவன் ஒன்று புதிதாய் பெண்ணுடன் பேச வேண்டும் அல்லது புதிய பெண்ணுடன் பேசவேண்டும்.
---------------------------------------
உலக அளவில் எல்லா மனிதர்களுக்கும் ஒருமுறையாவது நம்பிக்கை துரோகம் கடவுளால் செய்யப்பட்டிருக்கும்
--------------------------------------- 

பொங்கிய பீரை அடைக்க பூந்தியை உள்ளே போடும் விங்ஞானி யார் என்று யோசித்து கொண்டிருக்கிறேன் என்ன ஒரு கண்டுபிடிப்பு
---------------------------------------  

கிரிக்கெட்டில் விளையாடுவதே பத்து நாடு, இதில் செஞ்சா எப்படி உலக சாதனைன்னு சொல்றாங்களோ 
---------------------------------------  

வலைபேசி 2,3,4 என இதன் தொடர்ச்சியை வரும் நாட்களில் பதிவிடுகிறேன். கூகுளிலோ, ட்விட்ரிலோ follow செய்யுங்கள், பதிவிடுகையில் அப்டேட் கிடைக்கும். தங்களுக்கு மிகவும் பிடித்த பழைய ட்விட்களையும் பின்னூட்டம் இடலாமே?



Friday, September 16, 2016

காவிரி ஆறும்,அதை கொலை செய்த நாமும்

இந்த புகைப்படம் காவிரி டெல்டாவின் மையப்பகுதி பிரதான சாலையில் எடுக்கப்பட்டது.  தஞ்சையை தாண்டிய பின் இந்த காவிரி புதர்மண்டி, சாக்கடை கலந்து, கழிவுநீர் வர, வெங்காயத்தாமரை சூழ, பாலிதீன் குப்பைகள் நிறைந்து கிட்டத்தட்ட இறக்கும் தருவாயில் இருக்கிறது.

மக்கள் இதை பார்த்தும்சாதாரணமாக கடந்து கொண்டுதான் இருக்கிறார்கள். தமிழ்நாட்டில் மொத்தம் விளைகிற நெல்லின் அளவு 18ஆயிரம்டன். இதில் 13ஆயிரம் டன் காவிரி பாயும் பூமியான 7மாவட்டங்களில் மட்டுமே நமக்கு கிடைக்கிறது.  இப்பொன்விளையும் பூமிக்கு உயிர் தரும் ஆறுதான் காவிரி. நம் மக்கள் காவிரி ஆற்றையோ, ஆற்று நீரையோ பாதுகாக்க சிறு பங்களிப்பை கூட நிகழ்த்தவில்லை என்பதன் பெரும் வேதனை.

இந்த புகைப்படம்விவசாயத்தை நம்பி வாழ்கிற, அதை உண்ணும் பொருளாக வாழ்க்கை ஆதாரமாக மாற்றுகிற பூமியில் ஆறு சீரழிந்து கிடப்பது வரலாற்றின் மிகமோசமான துயரம்.  ஆற்றுசமவெளி பகுதியால், அவ்விடங்களில்   செழிப்பாக வாழ்ந்தது நம் கலாச்சாரம், எல்லா வளமும் தந்த அதே ஆற்றை சாக்கடையாக்கி, அதன் சாவுக்கும் வழி வகிக்கிறோம் என்பதை நினைக்கையில் நெஞ்சம் நெருப்பாய் எரிகிறது. ஆற்றின் குறுக்கே கட்டப்படும் தடுப்பணை நீரை பாதுகாத்து தேவைகேற்ப பயன்படுத்த வழிவகை செய்யவே.

காமராஜருக்கு பிறகு தமிழகத்தில் எந்த அணையும் கட்டப்படவில்லை என்பதும், அதற்கான முயற்சிகள் கூட மேற்கொள்ளப்படவில்லை என்பதும் உங்களுக்கு தெரியுமா? நெடும் துயரம் என்னவெனில் கட்டிய அணைகளை கூட பராமரிக்கவில்லை. ஆறு,குளம், ஏரிகண்மாய், வாய்க்கால் என எவையும் சரியாக தூர்வாரப்படவில்லை.  காவிரி ஆற்றில் இருந்து பயன்படுத்தாமல் கடலில் கலக்கும் நீரின் அளவு 155TMC.  நாம் கர்நாடாகாவிடம் கெஞ்சிக்கொண்டிருக்கும் நீரின் அளவு 142TMC.  தடுப்பணைகள் கட்டி நீரை சேமித்திருந்தாலே முப்போகம் விளையும் பூமியாக இருந்திருக்கும். 

சென்னையில் வெள்ளம் வந்த பொழுது ஏற்றப்பட்ட பேரிழப்பிற்கு முக்கிய காரணம் ஆறு, குளங்கள்,ஏரிகள் தூர்வாரப்படாததே என்பது யாவரும் அறிந்ததே. நீரின் முக்கியத்துவத்தையும், மகத்துவத்தையும் நாம் இன்னும் சரியாக புரிந்து கொள்ளவே இல்லை. ஆறுகளை பாதுகாப்பதில் உள்ள  பெரிய நன்மையை நாம் வளரும் தலைமுறைக்கு கற்றுக்கொடுக்க தவறிவிட்டோம். 

கர்நாடகம் நிச்சயம் தண்ணீர் தந்தே ஆகவேண்டும். ஆனால் அவர்கள் தரும் நீரை நாம் தலையிலா தூக்கிவரமுடியும்? காற்று கலப்படமாகிவிட்டால் எப்படி சுவாசிப்பது சிரமமோ, அது போல் நீர் கலப்படமாகிவிட்டாலும் விஷமென்பதை புரிந்து கொள்ள வேண்டும்.  இனியாவது ஆறுகளை பாதுகாக்கவேண்டும்.


இது அடுத்த தலைமுறைக்கு, நாம் செய்தே தீர வேண்டிய அடிப்படை சூத்திரம்.

@Rajarocketrocky from twitlonger 

Tuesday, March 8, 2016

மகளிர் தினம்

திரு ராஜா., காங்கிரஸில் படித்த இளைஞர்கள் அரசியலுக்கு வரவேண்டும் என்ற எண்ணத்தோடு சாதரண குடும்பத்தில் பிறந்து மக்களுக்காக போராடும் இளைஞர்.என் ட்விட்டர் நண்பன்... 
அவரின் மகளிர் தின கட்டுரை   

ஆணும்,பெண்ணும் சமம் என்பதே பகுத்தறிவு.
உடல் ரீதியாக ஆண் என்பவன் பெண்ணை விட சற்று வலிமையானாக இருந்தாலும், மனரீதியாக பெண் பெரும் வலிமை மிக்கவள்.
ஆண் அறிவியல் ரீதியாகவே ஒரு பெண்ணை
தாய்,சகோதரி,தோழி,காதலி,மனைவி என சார்ந்து வாழும் குணம் உடையவன்.
பெண் தன் பிரியங்களை வெளிக்காட்டும் தன்மை கொண்டவள்.
தன்னை சுற்றியுள்ளவர்களை காப்பதும்அவர்களை வாழவைப்பதும் அவளின் இயல்பு.
ஆணின் வெற்றிக்குபின் பெண்ணும், பெண்ணின் வெற்றிக்கு பின் ஆணும் 
இருப்பது அதிசயமல்ல, இயல்பு.
பெண்ணில்லாமல் ஆண் இல்லை, ஆண் இல்லாமல் பெண் இல்லை என்பது அடிப்படி விஞ்ஞானம்.
அறியாமையாமல் அடிமைபட்டுக்கிடந்த பெண் சமூகம் தற்பொழுது ஒவ்வொரு அடியாக தலைதூக்க தொடங்கியுள்ளது.
ஆணுக்கு இணையாக பெண்கள்
போட்டியிடும் அளவிற்கு அவர்கள் வளர்ந்து வருகிறார்.
அவர்களை நாம் கரம்பிடித்து தூக்கிவிட வேண்டும்.
சகபோட்டியாளராக பார்க்க வேண்டுமே தவிர எதிரியாக பார்க்க கூடாது.
தமிழ் சமூகத்தை பொருத்தளவில் பெண்கள் காட்சி பொருளல்ல. காவிய பெண்மணிகள்.
அனைத்து துறைகளிலும் சாதித்து வரும் பெண்களின் திறமைகள் மதிக்கப்படவேண்டும்.
பாலியல் ரீதியாக மட்டுமே பெண்களை பார்பதை தவித்து,பெண்ணையும் தன்னைபோலவே மதிக்க கற்றுக் கொள்ளவேண்டும்.
தனக்கு முன்னே செல்லும் பெண் சமூகத்தின் மீதான சீண்டல்கள் ஒரு பக்கம் நடந்து கொண்டுதான் இருக்கிறது. அப்படிப்பட்ட மிருகங்களை இரும்புக்கரம் கொண்டு அடக்குவது ஒவ்வொரு இந்திய இளைஞர்களின் கடமையும்கூட.
பெண்கள் சாதிக்கட்டும்
புதியதோர் சரித்திரம் படைக்கட்டும்.
நாம் ரசிக்க கற்றுக் கொள்வோம் பெண்களின் வெற்றியை...

#மகளிர்_தின_வாழ்த்துக்கள்

இவரை ட்விட்டரில் தொடர ராஜா ராக்கெட்

Friday, January 22, 2016

வலைபாயுதே



ரசித்த சில ட்விட்கள்

டுபாக்கூர் ஏஜெண்டுகிட்ட சிக்கி துபாய்க்குப் போகமுடியாத பார்த்திபன், வெற்றிகரமா துபாய்க்குப் போய்ட்டு வந்த வடிவேலுவை ஓட்டுறதுதான் Irony! :)

@kiramaththan

ஓட்டே போடாம அரசியல் பத்தி பேசுறது.
படமே பாக்காம பட விமர்சனம் செய்றது.
வயலே பாக்காம விவசாயம் பத்தி பேசுறது
யாருங்க நீங்க - டிவிட்டர் பிரபலம்
@DinuVj

ஈகோவைத்தான் நிறைய பேரு கெத்துன்னு நினச்சுக்கிட்டிருக்காங்க
@SelvaaRocky

தி.மு.க என்பது நமக்கு தெரியாதிருக்க பினாமி வைத்து தெளிவாய் திருடுவது, அதிமுக என்பது நமக்குத் தெரிந்தால் என்ன என்று திமிராய் திருடுவது.
@moon_inthewell

குழந்தைகளின் கோபமும் சண்டையும் அடுத்த விளையாட்டு ஆரம்பிக்கும் வரை தான்!ஆனால்
பெரியவர்களின் சண்டை தான்
அடுத்த தலைமுறைகள்  வரை நீடிக்கிறது!!
@ponkulanthai

எல்லோருடைய வாழ்க்கை புத்தகத்திலும் கிழித்து எறிந்து விட நினைக்கும் பக்கம் இருக்கத்தான் செய்கிறது...!!!
@shefnatwits

TR : என் புள்ள சட்டைல சின்ன கரை பட்டாலும் உன்ன செதச்சிடுவேன்

பாண்டவர் அணி : அப்ப அவன் சட்டைய கழட்டிட்டு அடிங்கடா
@MrElani

இனி ஒன்றுமில்லை என அழுது தீர்க்கும் பொழுது
கடைசி நொடியில் பிறக்கும் துணிவுதான் மீண்டும் வாழ்வை
வாழச் சொல்கிறது.!
@dhivya_iam

நாரதனால் எல்லா இடங்களிலும் இருக்க முடியாது..
அதனால்தான் கடவுள் உறவினர்களை படைத்துள்ளார்
@Shalinii_

நான் நல்லவன் என்பதற்கு சாட்சி , நான் செய்த எந்த தவறுக்கும் சாட்சி இல்லை என்பதே !
@Kathirru

விருப்பமில்லாதவர்களை சுமக்காதீர்கள், உயிரற்ற உடல் போல் கனப்பார்கள்.
@tejomayan

இட்லி தோசை பொங்கல் உப்புமா கிச்சடி எனும் பஞ்சபாண்டவர்களுக்கென படைக்கப்பட்ட திரெளபதி தேங்காய்சட்னி
@mpgiri

"மயிராப்போச்சு போ" என்ற மனநிலைக்கு வந்தவுடன் பிரச்சனையை அணுகுவது சுலபமாயிருக்கிறது.
@svenkad

ஒரு மழலை செமயா அழுதுட்டே வந்து வாசப்படி ஏறும்போது கவனமா அழுகை நிறுத்திட்டு கை ஊனி விழாம ஏறி திரும்ப அழுகைய தொடருது :-)
@arattaigirl

ஆண்பாலாக பிறந்ததற்கு பதில் ஆவின் பாலாக பிறந்திருந்தால் மனைவிக்கு முன் தைரியமாக பொங்கியிருக்கலாம்.
@nmravikumar

நிறைய நேரமும் குறைவாகப் பணமும் செலவழித்து வளர்க்கப்படும்  குழந்தைகள் வீணாகப் போவதில்லை...
@mekalapugazh

இப்போதாவது புரியுமா. பணமோ, அழகோ, சாதியோ, மதமோ எதுவுமில்லை. வாழ்ந்த விதம் மட்டுமே ஒருவருக்கு பெருமை சேர்க்கும்.
@r_vichu  

Wednesday, January 13, 2016

என் தத்துவம்ஸ்



"அம்மா யாரோ ஒரு அத்தை"


என கைகாட்டுகிறது குழந்தை,


தனக்காக நீட்டப்பட்ட


பிஞ்சுவிரலுக்காக கண்ணீரும்,


தாய்மையும் சேர்ந்து சுரக்கிறது


திருநங்கைக்கு


------------------------------










கள்ள நோட்டில் கூட


சிரிக்காமல் இருக்க தெரியவில்லை


இந்த காந்திக்கு


------------------------------










இப்படியும் இருக்கின்றன சில இரவுகள்.


தூங்குவதற்கென்றும்.,


தூங்காதிருப்பதற்கென்றும்....


------------------------------






நிராகரிக்கப்பட்ட


வரங்களுடனும், யாழிசையுடனும்


குருட்டுப் பிச்சைக்காரன்


------------------------------






சூரியனை கொத்தி பார்க்கிறது பசித்த காகம் ஒன்று,


-மழை நீரில்


------------------------------






டாஸ்மாக்கைக் கடக்கும்போது


யாரோ உள்ளிருந்து அழைப்பதாய்


ஓர் உணர்வு..


மனப்பிராந்தி???


------------------------------