Showing posts with label funny tweets in tamil. Show all posts
Showing posts with label funny tweets in tamil. Show all posts

Thursday, November 3, 2022

சில நகைச்சுவை ட்வீட்கள்

 இந்த குழந்தைக, பிடிச்ச பலகாரத்தை சாப்பிடும்போது எழுந்து போக வேண்டி வந்தா, தட்டையும் சேர்த்து தூக்கிட்டு போகுதுங்க... நம்ம மேல அவ்ளோ நம்பிக்கை

urs_priya

மனைவியின் மௌனத்தில் உள்ள கோபத்தை, ஊர்கூட அறியும். ஆனால், கணவனின் மௌனத்தில் உள்ள திருட்டுத்தனத்தை, மனைவி மட்டுமே அறிவாள் amuduarattai

மச்சினிச்சி வாட்சப் டீபி பார்த்து "சூப்பர்"ன்னு அனுப்பினா, "செருப்பு"ன்னு ரிப்ளை வருது. போன் அவங்க அக்காட்ட இருக்கும் போல -SriLiro

வாழ்க்கையில பழம்தின்னு கொட்டையைப் போடலாம்னு பார்த்தா, வாழைப்பழத்தைக் கையில குடுத்துட்டுப் போயிடுறாரு கடவுள் -sudhansts

இந்த வெள்ளைக்காரன்கிட்ட வேலை பார்க்கிறதுக்கு பதிலா ஊர்ல பன்னி மேய்க்கலாம். ஏதோ சொல்றானேன்னு நினைச்சிட்டு இருந்தா, அஞ்சு நிமிசமா என்னை திட்டிட்டு இருக்கான் -kattathora

திங்கள்கிழமை ஆபீஸுக்கு லீவ் போட்டுட்டு பஸ்டாண்ட்ல நின்னு ஆபீஸ் போறவங்களை வேடிக்கை பாக்குற சுகம் இருக்கே... From fb

``டேய், நிமிர்ந்து ஒக்காரு!” ஏதோ என்னாலான குழந்தை வளர்ப்பு. ThePayon

எப்பொழுதும் ஆர்ப்பாட்டமாய் ஆடிக்கொண்டிருக்கும் குழந்தை, அமைதியாய் வந்து உங்கள் அருகில் அமர்கிறது என்றால், அடுத்த ஐந்து நிமிடத்தில் வீடே ஆர்ப்பாட்டமாய் ஆகும் அளவுக்கு ஏதோ வேலையை செய்திருக்கிறான் என அர்த்தம் ItsJokker

"காதலித்து பார்" "பார்லதான்டா உட்கார்ந்திருக்கேன்" -BulletJackie

அப்பா ஒரு குறிப்பிட்ட வயசுக்கு மேல பையனை அடிக்கிறதை நிறுத்திட்டு... கல்யாணம் பண்ணிவெச்சுடுவார் -tamilhumourjoke

மனைவி: "உங்களுக்கு காபி வேணுமா?" நான்: "இல்லம்மா... வேணாம்" ம: "ஏன்?" நான்: "நீ டயர்டா இருப்பேன்னு சொன்னேன். போட்டுக் கொடுத்தா குடிப்பேன்" ம: "பால் கொஞ்சம் மிச்சம் இருக்கு. எப்படியும் கீழேதான் ஊத்தணும், அதான் கேட்டேன்" சற்றுமுன் நடந்த அசம்பாவிதம் fb/NaveenKumar Nadarajah

"டேய் குடிகாரப்பயலே" எனப் பொத்தாம்பொதுவாகக் கூவினால், பத்தில் எட்டு பேர் திரும்பிப் பார்க்கும் நிலையில் இருக்கிறது நம் தமிழ்நாடு! -killer

Friday, June 8, 2018

வலைபேசி 2

  பிடித்த ட்விட்டுகள் தொடர்கின்றன. 



குரங்கில் இருந்து வந்திருக்க வாய்ப்பில்லை அநேகமாக குரங்கு இனத்தில் இருந்து அடித்து துரத்தப்பட்டு வந்திருப்பான் மனிதன். 

------------------------------------------------------------ 



இஸ்லாமியர்களை போல் அனைத்து பெண்களும் பர்தா அணிய வேண்டும் மதுரை ஆதீனம் 

நீ முதல்ல சட்டையை போடு



------------------------------------------------------------ 


குழந்தை வளர்ப்பை குழந்தைகளிடமே கற்றுக்கொள்ளுங்கள், அவர்கள் பொம்மைகளை அழ விடுவதில்லை 

------------------------------------------------------------ 


தன்னை அறியாமல் ரஜினி பலநேரம் தனக்குள் இருக்கும் எம் எஸ் பாஸ்கரை வெளியே விட்டு விடுகிறார் 

------------------------------------------------------------ 

 வெறுப்பை உள்வாங்கி கொள்கிறோம் அன்பை அலட்சியம் செய்து தூர வைக்கிறோம்


------------------------------------------------------------ 

"காபி டே" எனப் பெயரிட்டவர் நிச்சயமாக ஒரு திருநெல்வேலிக்காரராகத்தான் இருக்க வேண்டும்!

------------------------------------------------------------ 

பிடிக்காத இடத்திலிருந்து சட்டென வெளியேறும் சுதந்திரம் பால்யத்தோடு முடிந்துவிடுகிறது 

------------------------------------------------------------ 

"பாவாயா பேரனா?" என்று முன்பு எங்கள் ஊரில் சில கிழவிகள் கேட்பார்கள், அதைத்தான் "People you may know?" என்கிறது இந்த facebook

------------------------------------------------------------ 

சீனாவில் காற்றை பாக்கெட்டுகளில் அடைத்து விற்பனை -செய்தி. 
நீ ரொம்ப லேட்டு, லேஸ் காரன் அதை பண்ணி பல வருசமாச்சு

------------------------------------------------------------  

       அசதியா இருக்குன்னு ஒரு நிமிசந்தான் கால நீட்டி உட்கார்ந்தேன்!  "கொடுத்து வச்ச வாழ்க்கையா"ன்னு ஒருத்தர் பாராட்டிட்டு போறாரு :(

------------------------------------------------------------   

மல்டிப்ளெக்ஸ் தியேட்டரில் எதுவும் சாப்பிடாமல் உட்கார்ந்திருப்பவன் கஞ்சன் அல்ல, புத்திசாலி  

------------------------------------------------------------   

திடீரென ஒருவன் நூறு எதிரிகளை சம்பாதிக்க, சிக்னலில் வண்டி ஆப் ஆவதே போதுமானதாக இருக்கிறது  

------------------------------------------------------------   

   சரக்கடித்த பின் பழைய கேர்ள் பிரெண்ட்ஸ்க்கு மெசேஜ் அனுப்பாமல் தடுக்கும் App இருந்தா எவ்வளவு நல்லா  இருக்கும் !!

------------------------------------------------------------

Saturday, June 2, 2018

வலைபேசி 1

 கடந்த சில வருடங்களுக்கு முன்பிருந்து நான் மிகவும் ரசித்து மறக்க இயலா பல ட்விட்டுகள் (கல்வெட்டுகள் அல்லது நங்கூரம்) தான் இந்த மலரும் நினைவுகள்...

எங்க தாத்தா கடைசிவரை சுதந்திரத்துக்கு போராடினார் எங்க பாட்டி தரவே இல்லை
---------------------------------------

"காக்கா ஜெயிச்சாலும் நரி ஜெயிச்சாலும் வடை பாட்டிக்கு கிடைக்க போறதில்ல. நாமதான் அந்த பாட்டி #அரசியல் #வட போச்சே!"
---------------------------------------

வகுப்பறையில் டீச்சர் "வெளியே போ" என திட்டினால் வாதத்தில் வென்று விட்டாய் என்று அர்த்தம்.
---------------------------------------

கல்யாண சமையல் அண்டாவில் காயை தேடுவது போலவே இருக்கிறது ஹர்பஜன் பேட்டிங் ஸ்டைல்
--------------------------------------- 

ரூபாய் நோட்டுக்களாக மாற்றப்படாத எந்த திறமையும் ஜெயிப்பதில்லை.
---------------------------------------

"மச்சி சாம்பார் வைக்கவா? ரசம் வைக்கவா?" "
முதல்ல ஏதாவது செய்டா, அப்புறம் பேர் வைக்கலாம்" பேச்சுலர் ரூம் பேஜார்கள்.
---------------------------------------

ஆழம் தெரியவேண்டுமானால் காலை விடாதே அடுத்தவனை தள்ளிவிடு #கார்போரேட் விதி
---------------------------------------


மனைவி கஸ்டமர் கேர் ரெண்டுமே ஒண்ணு. பிரச்சனைன்னு போன் பண்ணா அவங்க சொல்றதை தான் சொல்வாங்க, நாம என்ன சொல்றோம்னு கண்டுக்கவே மாட்டாங்க
---------------------------------------

குழந்தைகளுக்கு குழந்தைகளே தடையாக இருக்கின்றன. நான் நடுவுலதான் படுப்பேன்
---------------------------------------

ரம்யா நித்யா ஓவியா பேருக்கு பின்னாடி ஆம்பளை பேரை சேத்திக்கிட்டா மட்டும் நாங்க ஒரிஜினல் ஐடின்னு நம்பிருவமா #பிளடி பேக் ஐடி ப்ராடுகளா... பிச்சு... பிச்சு
---------------------------------------

மனைவி சமையல் பழகும் முன் மனைவி சமையல் பழகி விடுகிறது.
---------------------------------------

ஆபீஸ் கேன்டீன்ல ஒருத்தி அந்த ஒயிட் சட்னி கொடுன்னான்னு கேட்குறா, ஏண்டி உனக்கு நிஜமா அது தேங்கா சட்னின்னு தெரியாது
---------------------------------------

 போண்டா வடையோடு ஒப்பிட்டால் பஃப்ஸ்ல்லாம் வெறும் பித்தலாட்டம்.
---------------------------------------

புன்னகை வழிய போன் பேசுபவன் ஒன்று புதிதாய் பெண்ணுடன் பேச வேண்டும் அல்லது புதிய பெண்ணுடன் பேசவேண்டும்.
---------------------------------------
உலக அளவில் எல்லா மனிதர்களுக்கும் ஒருமுறையாவது நம்பிக்கை துரோகம் கடவுளால் செய்யப்பட்டிருக்கும்
--------------------------------------- 

பொங்கிய பீரை அடைக்க பூந்தியை உள்ளே போடும் விங்ஞானி யார் என்று யோசித்து கொண்டிருக்கிறேன் என்ன ஒரு கண்டுபிடிப்பு
---------------------------------------  

கிரிக்கெட்டில் விளையாடுவதே பத்து நாடு, இதில் செஞ்சா எப்படி உலக சாதனைன்னு சொல்றாங்களோ 
---------------------------------------  

வலைபேசி 2,3,4 என இதன் தொடர்ச்சியை வரும் நாட்களில் பதிவிடுகிறேன். கூகுளிலோ, ட்விட்ரிலோ follow செய்யுங்கள், பதிவிடுகையில் அப்டேட் கிடைக்கும். தங்களுக்கு மிகவும் பிடித்த பழைய ட்விட்களையும் பின்னூட்டம் இடலாமே?