Thursday, November 3, 2022

சில நகைச்சுவை ட்வீட்கள்

 இந்த குழந்தைக, பிடிச்ச பலகாரத்தை சாப்பிடும்போது எழுந்து போக வேண்டி வந்தா, தட்டையும் சேர்த்து தூக்கிட்டு போகுதுங்க... நம்ம மேல அவ்ளோ நம்பிக்கை

urs_priya

மனைவியின் மௌனத்தில் உள்ள கோபத்தை, ஊர்கூட அறியும். ஆனால், கணவனின் மௌனத்தில் உள்ள திருட்டுத்தனத்தை, மனைவி மட்டுமே அறிவாள் amuduarattai

மச்சினிச்சி வாட்சப் டீபி பார்த்து "சூப்பர்"ன்னு அனுப்பினா, "செருப்பு"ன்னு ரிப்ளை வருது. போன் அவங்க அக்காட்ட இருக்கும் போல -SriLiro

வாழ்க்கையில பழம்தின்னு கொட்டையைப் போடலாம்னு பார்த்தா, வாழைப்பழத்தைக் கையில குடுத்துட்டுப் போயிடுறாரு கடவுள் -sudhansts

இந்த வெள்ளைக்காரன்கிட்ட வேலை பார்க்கிறதுக்கு பதிலா ஊர்ல பன்னி மேய்க்கலாம். ஏதோ சொல்றானேன்னு நினைச்சிட்டு இருந்தா, அஞ்சு நிமிசமா என்னை திட்டிட்டு இருக்கான் -kattathora

திங்கள்கிழமை ஆபீஸுக்கு லீவ் போட்டுட்டு பஸ்டாண்ட்ல நின்னு ஆபீஸ் போறவங்களை வேடிக்கை பாக்குற சுகம் இருக்கே... From fb

``டேய், நிமிர்ந்து ஒக்காரு!” ஏதோ என்னாலான குழந்தை வளர்ப்பு. ThePayon

எப்பொழுதும் ஆர்ப்பாட்டமாய் ஆடிக்கொண்டிருக்கும் குழந்தை, அமைதியாய் வந்து உங்கள் அருகில் அமர்கிறது என்றால், அடுத்த ஐந்து நிமிடத்தில் வீடே ஆர்ப்பாட்டமாய் ஆகும் அளவுக்கு ஏதோ வேலையை செய்திருக்கிறான் என அர்த்தம் ItsJokker

"காதலித்து பார்" "பார்லதான்டா உட்கார்ந்திருக்கேன்" -BulletJackie

அப்பா ஒரு குறிப்பிட்ட வயசுக்கு மேல பையனை அடிக்கிறதை நிறுத்திட்டு... கல்யாணம் பண்ணிவெச்சுடுவார் -tamilhumourjoke

மனைவி: "உங்களுக்கு காபி வேணுமா?" நான்: "இல்லம்மா... வேணாம்" ம: "ஏன்?" நான்: "நீ டயர்டா இருப்பேன்னு சொன்னேன். போட்டுக் கொடுத்தா குடிப்பேன்" ம: "பால் கொஞ்சம் மிச்சம் இருக்கு. எப்படியும் கீழேதான் ஊத்தணும், அதான் கேட்டேன்" சற்றுமுன் நடந்த அசம்பாவிதம் fb/NaveenKumar Nadarajah

"டேய் குடிகாரப்பயலே" எனப் பொத்தாம்பொதுவாகக் கூவினால், பத்தில் எட்டு பேர் திரும்பிப் பார்க்கும் நிலையில் இருக்கிறது நம் தமிழ்நாடு! -killer

No comments:

Post a Comment