Friday, June 22, 2018

வலைபேசி 3

பலபெண்களின் "எக்ஸ்க்யூஸ்மீ" என்ற சொல், "நகருடா டேய்" என்பது போலவே ஒலிக்கிறது.

-----------------------------------------------------------------------------------

கல்யாணமாகி மூணு வருடங்கள் ஆனதும் மாமனார் நம்மை ஒரு ஆச்சர்யத்தோடவே பார்ப்பார்
"எப்படி இவன் சமாளிக்கிறான்?"

-----------------------------------------------------------------------------------


நம்ம மாதிரியே உலகத்துல ஏழு பேர் இருப்பார்களாம், நம்ம நிலைமையே கேவலமா இருக்கு, மிச்ச ஆறு பேரும் எந்த நாட்ல எந்த தெருவுல அவங்கெல்லாம் பிச்சை எடுத்துட்டு இருப்பாங்களோ. 

-----------------------------------------------------------------------------------


நெல்சன் மண்டேலா வருஷம் ஜெயில்ல சித்திரவதை, அடி, மிதி எல்லாம் தாங்கிருக்கார். வெளிய வந்து ஆறே மாசத்துல டைவர்ஸ் வாங்கிருக்கார்

-----------------------------------------------------------------------------------

நமக்கு எதெல்லாம் பிடிக்கும்னு ஒரு லிஸ்ட் போட்டு வச்சிக்கிட்டு அதெல்லாம் கிடைக்காம பாத்துக்கிறது தான் கடவுளோட வேலை போல

-----------------------------------------------------------------------------------

எடிசனின் ஆயிரமாவது முயற்சியிலும் அவருக்கு பல்ப் தான் கிடைத்தது

-----------------------------------------------------------------------------------

இந்த ஜென்மத்தில் அனுபவிக்க முடியாத போது புண்ணியம் எதற்கு?

-----------------------------------------------------------------------------------

"குடிசிருக்கியா" என விசாரித்த போலீஸ்காரர் என்னை விட அதிகமாக குடித்திருந்தார்

-----------------------------------------------------------------------------------

கடவுளே நாட்டு மக்களை நீதான் காப்பாத்தணும்னு வெளிய வந்தா என் செருப்பை காணோம், கடவுள் அதை போட்டுட்டு காப்பாத்த போய்ட்டாரு போல                           

-----------------------------------------------------------------------------------


கல்யாண மாலை நிகழ்ச்சியை எதேச்சையா பார்த்தது ஒரு குற்றமாய்யா? இவ ஏன் மொறைச்சு பார்த்துட்டு போறா?

-----------------------------------------------------------------------------------

நான் கோழிக்கு குளிருதுன்னு போர்வையை போர்த்தினேன், கோழி திருடுறான்னு பஞ்சாயத்தை கூட்டிட்டாங்க

-----------------------------------------------------------------------------------


உண்மையில் அது மணற் கொள்ளை இல்லை, நதிகளின் கொலை.

-----------------------------------------------------------------------------------

சில வீடுகளில் நாய்தான் மனுஷங்களை வாக்கிங் கூட்டிட்டு போகுது

-----------------------------------------------------------------------------------

டியர் காட், என் வாழ்க்கைக்கு சப் டைட்டில் அனுப்பவும் இதுவரை ஓடியதில் ஒன்றுமே புரிய மாட்டிங்குது

----------------------------------------------------------------------------------- 

அது என்னங்கடா அடுத்தவன் காலை மிதிச்சிட்டு, உங்க கைல முத்தம் கொடுத்துட்டு போறீங்க

----------------------------------------------------------------------------------- 

டேய் வாயைக்கட்டி வைத்தக்கட்டி மேனஜர் கிட்ட திட்டு வாங்கி சம்பாதிச்ச 
காசுடா.... தட்டி விட்றாதீங்கடா!!! இன்டெர்வல் பாப்கார்ன் மொமெண்ட்

----------------------------------------------------------------------------------- 

என் பையனுக்கு டெய்லி நைட்ல புலி வந்து உறுமுதாம் ஒருவேளை என் குறட்டையைத்தான் அப்படி நினைச்சிக்கிறானோ?

-----------------------------------------------------------------------------------

அறிவுரை என்பது தற்பெருமை

-----------------------------------------------------------------------------------

நாய்க கிட்ட இருந்து மனுசனுக கத்துகிட்ட ரெண்டாவது விஷயம் திடீர் திடீர்ன்னு ரோட்ல ஓடி வரது

-----------------------------------------------------------------------------------

பாலா, மிஸ்கின், செல்வராகவன் மூணுபேரையும் சிரிச்சா போச்சு ரவுண்டு விளையாட விடனும் #ரொம்ப நாள் ஆசை

----------------------------------------------------------------------------------- 



No comments:

Post a Comment