Showing posts with label ட்விட்டர் நகைச்சுவை. Show all posts
Showing posts with label ட்விட்டர் நகைச்சுவை. Show all posts

Thursday, November 3, 2022

சில நகைச்சுவை ட்வீட்கள்

 இந்த குழந்தைக, பிடிச்ச பலகாரத்தை சாப்பிடும்போது எழுந்து போக வேண்டி வந்தா, தட்டையும் சேர்த்து தூக்கிட்டு போகுதுங்க... நம்ம மேல அவ்ளோ நம்பிக்கை

urs_priya

மனைவியின் மௌனத்தில் உள்ள கோபத்தை, ஊர்கூட அறியும். ஆனால், கணவனின் மௌனத்தில் உள்ள திருட்டுத்தனத்தை, மனைவி மட்டுமே அறிவாள் amuduarattai

மச்சினிச்சி வாட்சப் டீபி பார்த்து "சூப்பர்"ன்னு அனுப்பினா, "செருப்பு"ன்னு ரிப்ளை வருது. போன் அவங்க அக்காட்ட இருக்கும் போல -SriLiro

வாழ்க்கையில பழம்தின்னு கொட்டையைப் போடலாம்னு பார்த்தா, வாழைப்பழத்தைக் கையில குடுத்துட்டுப் போயிடுறாரு கடவுள் -sudhansts

இந்த வெள்ளைக்காரன்கிட்ட வேலை பார்க்கிறதுக்கு பதிலா ஊர்ல பன்னி மேய்க்கலாம். ஏதோ சொல்றானேன்னு நினைச்சிட்டு இருந்தா, அஞ்சு நிமிசமா என்னை திட்டிட்டு இருக்கான் -kattathora

திங்கள்கிழமை ஆபீஸுக்கு லீவ் போட்டுட்டு பஸ்டாண்ட்ல நின்னு ஆபீஸ் போறவங்களை வேடிக்கை பாக்குற சுகம் இருக்கே... From fb

``டேய், நிமிர்ந்து ஒக்காரு!” ஏதோ என்னாலான குழந்தை வளர்ப்பு. ThePayon

எப்பொழுதும் ஆர்ப்பாட்டமாய் ஆடிக்கொண்டிருக்கும் குழந்தை, அமைதியாய் வந்து உங்கள் அருகில் அமர்கிறது என்றால், அடுத்த ஐந்து நிமிடத்தில் வீடே ஆர்ப்பாட்டமாய் ஆகும் அளவுக்கு ஏதோ வேலையை செய்திருக்கிறான் என அர்த்தம் ItsJokker

"காதலித்து பார்" "பார்லதான்டா உட்கார்ந்திருக்கேன்" -BulletJackie

அப்பா ஒரு குறிப்பிட்ட வயசுக்கு மேல பையனை அடிக்கிறதை நிறுத்திட்டு... கல்யாணம் பண்ணிவெச்சுடுவார் -tamilhumourjoke

மனைவி: "உங்களுக்கு காபி வேணுமா?" நான்: "இல்லம்மா... வேணாம்" ம: "ஏன்?" நான்: "நீ டயர்டா இருப்பேன்னு சொன்னேன். போட்டுக் கொடுத்தா குடிப்பேன்" ம: "பால் கொஞ்சம் மிச்சம் இருக்கு. எப்படியும் கீழேதான் ஊத்தணும், அதான் கேட்டேன்" சற்றுமுன் நடந்த அசம்பாவிதம் fb/NaveenKumar Nadarajah

"டேய் குடிகாரப்பயலே" எனப் பொத்தாம்பொதுவாகக் கூவினால், பத்தில் எட்டு பேர் திரும்பிப் பார்க்கும் நிலையில் இருக்கிறது நம் தமிழ்நாடு! -killer

Friday, June 22, 2018

வலைபேசி 3

பலபெண்களின் "எக்ஸ்க்யூஸ்மீ" என்ற சொல், "நகருடா டேய்" என்பது போலவே ஒலிக்கிறது.

-----------------------------------------------------------------------------------

கல்யாணமாகி மூணு வருடங்கள் ஆனதும் மாமனார் நம்மை ஒரு ஆச்சர்யத்தோடவே பார்ப்பார்
"எப்படி இவன் சமாளிக்கிறான்?"

-----------------------------------------------------------------------------------


நம்ம மாதிரியே உலகத்துல ஏழு பேர் இருப்பார்களாம், நம்ம நிலைமையே கேவலமா இருக்கு, மிச்ச ஆறு பேரும் எந்த நாட்ல எந்த தெருவுல அவங்கெல்லாம் பிச்சை எடுத்துட்டு இருப்பாங்களோ. 

-----------------------------------------------------------------------------------


நெல்சன் மண்டேலா வருஷம் ஜெயில்ல சித்திரவதை, அடி, மிதி எல்லாம் தாங்கிருக்கார். வெளிய வந்து ஆறே மாசத்துல டைவர்ஸ் வாங்கிருக்கார்

-----------------------------------------------------------------------------------

நமக்கு எதெல்லாம் பிடிக்கும்னு ஒரு லிஸ்ட் போட்டு வச்சிக்கிட்டு அதெல்லாம் கிடைக்காம பாத்துக்கிறது தான் கடவுளோட வேலை போல

-----------------------------------------------------------------------------------

எடிசனின் ஆயிரமாவது முயற்சியிலும் அவருக்கு பல்ப் தான் கிடைத்தது

-----------------------------------------------------------------------------------

இந்த ஜென்மத்தில் அனுபவிக்க முடியாத போது புண்ணியம் எதற்கு?

-----------------------------------------------------------------------------------

"குடிசிருக்கியா" என விசாரித்த போலீஸ்காரர் என்னை விட அதிகமாக குடித்திருந்தார்

-----------------------------------------------------------------------------------

கடவுளே நாட்டு மக்களை நீதான் காப்பாத்தணும்னு வெளிய வந்தா என் செருப்பை காணோம், கடவுள் அதை போட்டுட்டு காப்பாத்த போய்ட்டாரு போல                           

-----------------------------------------------------------------------------------


கல்யாண மாலை நிகழ்ச்சியை எதேச்சையா பார்த்தது ஒரு குற்றமாய்யா? இவ ஏன் மொறைச்சு பார்த்துட்டு போறா?

-----------------------------------------------------------------------------------

நான் கோழிக்கு குளிருதுன்னு போர்வையை போர்த்தினேன், கோழி திருடுறான்னு பஞ்சாயத்தை கூட்டிட்டாங்க

-----------------------------------------------------------------------------------


உண்மையில் அது மணற் கொள்ளை இல்லை, நதிகளின் கொலை.

-----------------------------------------------------------------------------------

சில வீடுகளில் நாய்தான் மனுஷங்களை வாக்கிங் கூட்டிட்டு போகுது

-----------------------------------------------------------------------------------

டியர் காட், என் வாழ்க்கைக்கு சப் டைட்டில் அனுப்பவும் இதுவரை ஓடியதில் ஒன்றுமே புரிய மாட்டிங்குது

----------------------------------------------------------------------------------- 

அது என்னங்கடா அடுத்தவன் காலை மிதிச்சிட்டு, உங்க கைல முத்தம் கொடுத்துட்டு போறீங்க

----------------------------------------------------------------------------------- 

டேய் வாயைக்கட்டி வைத்தக்கட்டி மேனஜர் கிட்ட திட்டு வாங்கி சம்பாதிச்ச 
காசுடா.... தட்டி விட்றாதீங்கடா!!! இன்டெர்வல் பாப்கார்ன் மொமெண்ட்

----------------------------------------------------------------------------------- 

என் பையனுக்கு டெய்லி நைட்ல புலி வந்து உறுமுதாம் ஒருவேளை என் குறட்டையைத்தான் அப்படி நினைச்சிக்கிறானோ?

-----------------------------------------------------------------------------------

அறிவுரை என்பது தற்பெருமை

-----------------------------------------------------------------------------------

நாய்க கிட்ட இருந்து மனுசனுக கத்துகிட்ட ரெண்டாவது விஷயம் திடீர் திடீர்ன்னு ரோட்ல ஓடி வரது

-----------------------------------------------------------------------------------

பாலா, மிஸ்கின், செல்வராகவன் மூணுபேரையும் சிரிச்சா போச்சு ரவுண்டு விளையாட விடனும் #ரொம்ப நாள் ஆசை

----------------------------------------------------------------------------------- 



Friday, June 8, 2018

வலைபேசி 2

  பிடித்த ட்விட்டுகள் தொடர்கின்றன. 



குரங்கில் இருந்து வந்திருக்க வாய்ப்பில்லை அநேகமாக குரங்கு இனத்தில் இருந்து அடித்து துரத்தப்பட்டு வந்திருப்பான் மனிதன். 

------------------------------------------------------------ 



இஸ்லாமியர்களை போல் அனைத்து பெண்களும் பர்தா அணிய வேண்டும் மதுரை ஆதீனம் 

நீ முதல்ல சட்டையை போடு



------------------------------------------------------------ 


குழந்தை வளர்ப்பை குழந்தைகளிடமே கற்றுக்கொள்ளுங்கள், அவர்கள் பொம்மைகளை அழ விடுவதில்லை 

------------------------------------------------------------ 


தன்னை அறியாமல் ரஜினி பலநேரம் தனக்குள் இருக்கும் எம் எஸ் பாஸ்கரை வெளியே விட்டு விடுகிறார் 

------------------------------------------------------------ 

 வெறுப்பை உள்வாங்கி கொள்கிறோம் அன்பை அலட்சியம் செய்து தூர வைக்கிறோம்


------------------------------------------------------------ 

"காபி டே" எனப் பெயரிட்டவர் நிச்சயமாக ஒரு திருநெல்வேலிக்காரராகத்தான் இருக்க வேண்டும்!

------------------------------------------------------------ 

பிடிக்காத இடத்திலிருந்து சட்டென வெளியேறும் சுதந்திரம் பால்யத்தோடு முடிந்துவிடுகிறது 

------------------------------------------------------------ 

"பாவாயா பேரனா?" என்று முன்பு எங்கள் ஊரில் சில கிழவிகள் கேட்பார்கள், அதைத்தான் "People you may know?" என்கிறது இந்த facebook

------------------------------------------------------------ 

சீனாவில் காற்றை பாக்கெட்டுகளில் அடைத்து விற்பனை -செய்தி. 
நீ ரொம்ப லேட்டு, லேஸ் காரன் அதை பண்ணி பல வருசமாச்சு

------------------------------------------------------------  

       அசதியா இருக்குன்னு ஒரு நிமிசந்தான் கால நீட்டி உட்கார்ந்தேன்!  "கொடுத்து வச்ச வாழ்க்கையா"ன்னு ஒருத்தர் பாராட்டிட்டு போறாரு :(

------------------------------------------------------------   

மல்டிப்ளெக்ஸ் தியேட்டரில் எதுவும் சாப்பிடாமல் உட்கார்ந்திருப்பவன் கஞ்சன் அல்ல, புத்திசாலி  

------------------------------------------------------------   

திடீரென ஒருவன் நூறு எதிரிகளை சம்பாதிக்க, சிக்னலில் வண்டி ஆப் ஆவதே போதுமானதாக இருக்கிறது  

------------------------------------------------------------   

   சரக்கடித்த பின் பழைய கேர்ள் பிரெண்ட்ஸ்க்கு மெசேஜ் அனுப்பாமல் தடுக்கும் App இருந்தா எவ்வளவு நல்லா  இருக்கும் !!

------------------------------------------------------------

Saturday, June 2, 2018

வலைபேசி 1

 கடந்த சில வருடங்களுக்கு முன்பிருந்து நான் மிகவும் ரசித்து மறக்க இயலா பல ட்விட்டுகள் (கல்வெட்டுகள் அல்லது நங்கூரம்) தான் இந்த மலரும் நினைவுகள்...

எங்க தாத்தா கடைசிவரை சுதந்திரத்துக்கு போராடினார் எங்க பாட்டி தரவே இல்லை
---------------------------------------

"காக்கா ஜெயிச்சாலும் நரி ஜெயிச்சாலும் வடை பாட்டிக்கு கிடைக்க போறதில்ல. நாமதான் அந்த பாட்டி #அரசியல் #வட போச்சே!"
---------------------------------------

வகுப்பறையில் டீச்சர் "வெளியே போ" என திட்டினால் வாதத்தில் வென்று விட்டாய் என்று அர்த்தம்.
---------------------------------------

கல்யாண சமையல் அண்டாவில் காயை தேடுவது போலவே இருக்கிறது ஹர்பஜன் பேட்டிங் ஸ்டைல்
--------------------------------------- 

ரூபாய் நோட்டுக்களாக மாற்றப்படாத எந்த திறமையும் ஜெயிப்பதில்லை.
---------------------------------------

"மச்சி சாம்பார் வைக்கவா? ரசம் வைக்கவா?" "
முதல்ல ஏதாவது செய்டா, அப்புறம் பேர் வைக்கலாம்" பேச்சுலர் ரூம் பேஜார்கள்.
---------------------------------------

ஆழம் தெரியவேண்டுமானால் காலை விடாதே அடுத்தவனை தள்ளிவிடு #கார்போரேட் விதி
---------------------------------------


மனைவி கஸ்டமர் கேர் ரெண்டுமே ஒண்ணு. பிரச்சனைன்னு போன் பண்ணா அவங்க சொல்றதை தான் சொல்வாங்க, நாம என்ன சொல்றோம்னு கண்டுக்கவே மாட்டாங்க
---------------------------------------

குழந்தைகளுக்கு குழந்தைகளே தடையாக இருக்கின்றன. நான் நடுவுலதான் படுப்பேன்
---------------------------------------

ரம்யா நித்யா ஓவியா பேருக்கு பின்னாடி ஆம்பளை பேரை சேத்திக்கிட்டா மட்டும் நாங்க ஒரிஜினல் ஐடின்னு நம்பிருவமா #பிளடி பேக் ஐடி ப்ராடுகளா... பிச்சு... பிச்சு
---------------------------------------

மனைவி சமையல் பழகும் முன் மனைவி சமையல் பழகி விடுகிறது.
---------------------------------------

ஆபீஸ் கேன்டீன்ல ஒருத்தி அந்த ஒயிட் சட்னி கொடுன்னான்னு கேட்குறா, ஏண்டி உனக்கு நிஜமா அது தேங்கா சட்னின்னு தெரியாது
---------------------------------------

 போண்டா வடையோடு ஒப்பிட்டால் பஃப்ஸ்ல்லாம் வெறும் பித்தலாட்டம்.
---------------------------------------

புன்னகை வழிய போன் பேசுபவன் ஒன்று புதிதாய் பெண்ணுடன் பேச வேண்டும் அல்லது புதிய பெண்ணுடன் பேசவேண்டும்.
---------------------------------------
உலக அளவில் எல்லா மனிதர்களுக்கும் ஒருமுறையாவது நம்பிக்கை துரோகம் கடவுளால் செய்யப்பட்டிருக்கும்
--------------------------------------- 

பொங்கிய பீரை அடைக்க பூந்தியை உள்ளே போடும் விங்ஞானி யார் என்று யோசித்து கொண்டிருக்கிறேன் என்ன ஒரு கண்டுபிடிப்பு
---------------------------------------  

கிரிக்கெட்டில் விளையாடுவதே பத்து நாடு, இதில் செஞ்சா எப்படி உலக சாதனைன்னு சொல்றாங்களோ 
---------------------------------------  

வலைபேசி 2,3,4 என இதன் தொடர்ச்சியை வரும் நாட்களில் பதிவிடுகிறேன். கூகுளிலோ, ட்விட்ரிலோ follow செய்யுங்கள், பதிவிடுகையில் அப்டேட் கிடைக்கும். தங்களுக்கு மிகவும் பிடித்த பழைய ட்விட்களையும் பின்னூட்டம் இடலாமே?



Wednesday, February 1, 2017

செங்"குட்டுவன்"

தேனி மாவட்டத்தில் உள்ள ஆட்சியர் அலுவலகத்தில் ஒவ்வொரு மாதமும் நான்காவது வெள்ளிக்கிழமை விவசாயிகள் குறை தீர்ப்பு கூட்டம் நடைபெறுவது வழக்கம். அதன்படி, இன்று நடைபெற்ற கூட்டத்தில் செங்குட்டுவன் என்ற விவசாயி போட்ட கணக்கில் மாவட்ட ஆட்சியருக்கு தலைசுற்றியது. இதையடுத்து அவரால் பதில் எதுவும் பேசமுடியாமல், சிரித்து மழுப்பி விவசாயியிடமிருந்து தப்பிச் சென்றார்.
விவசாயின் பட்டியல்
1970 ஆண்டுகளில்..
எம்.எல்.ஏ. சம்பளம் - ரூ.150
பேங்க் மானேஜர் - ரூ.250
ஆசிரியர் சம்பளம் - ரூ..90
60 கிலோ நெல் மூடைக்கு - ரூ.40
கரும்பு டன் ஒன்றுக்கு - ரூ.90
ஆனால் இன்று..
எம்.எல்.ஏ. சம்பளம் - ரூ.55,000
பேங்க் மானேஜர் - ரூ.66,000
ஆசிரியர் சம்பளம் - ரூ.39,000
60 கிலோ நெல் மூடைக்கு - ரூ.880
கரும்பு டன் ஒன்றுக்கு - ரூ.2850
மத்திய அரசு 7-வது ஊதியக்குழு மூலம் அரசு ஊழியர்களுக்கு சம்பளத்தை அதிகரித்துள்ளது. அதேபோல், விவசாயிகளுக்கு இந்த விகிதாச்சார அடிப்படையில் கரும்பு டன்னுக்கு ரூ.39 ஆயிரமும், 60 கிலோ நெல் மூடைக்கு ரூ.18 ஆயிரமும் வழங்க வேண்டும் என்று விவசாயி செங்குட்டுவன் வலியுறுத்தினார். இல்லையெனில், கரும்பு ஆலையில் பங்குதாரராக சேர்த்துக்கொள்ளவேண்டும் என்ற மாற்று யோசனையையும் மாவட்ட ஆட்சியரிடம் முன்மொழிந்தார்.
Karuna Murthy fb

Thursday, June 9, 2016

நகைச்சுவை

சமீபத்தில் whatsAppல் நான் ரசித்த நகைச்சுவை ஒன்று

பக்கத்துக்கு வீட்டு பொண்ணு ஒரு கிண்ணத்துல வச்சு என்னமோ மூஞ்சில தேச்சுட்டு இருந்துச்சு,

"என்ன?"ன்னு கேட்டதுக்கு
"தக்காளி, உருளைக்கிழங்கு, கொத்தமல்லி, புதினா, தயிர் கலந்து மிக்சில அரைச்சு ஃபேசியல்" பண்ணுதாம்.

"சரி கொடு, நான் கொஞ்சம் தேச்சுக்குறேன்"னு பொய் சொல்லி, வாங்கிட்டு வந்து....

தோசைக்கு தொட்டு தின்னுட்டேன்..

#பசங்களுக்கு_சோறுதான்_முக்கியம். 

Tuesday, February 23, 2016

பள்ளிக்கூடம் to கல்லூரி

"இனி நான் பள்ளிக்கூடம் போவதாக இல்லை"
என  பத்தாம் வகுப்பை முடித்த உடனேயே என் வீட்டில் என் முடிவை அறிவித்து விட்டேன். அது நிச்சயமாக என்னை டாக்டர் ஆக்கி பார்க்கும் கனவுடன் இருந்த என் பாட்டிக்கு தலையில் பாறாங்கல்லை நாலு முறை கொட்டியதற்கு ஈடாக இருந்திருக்கும்.

"ராசா அப்பிடில்லாம் சொல்லகூடாது, பள்ளிக்கோடம் போ" தாத்தா ஒரு பக்கம் பேந்த பேந்த விழித்தவாறு அறிவுரை சொல்லி கொண்டிருந்தார்.

"துரை வேறென்ன பண்ண போறீங்க?" அப்பா
"லாரில போய், வண்டி ஓட்டி பழக போறேன்" சற்றும் மனம் தளராத விக்கிரமாதித்தனாகிய நான்.
ஏற்கனவே பத்தாம் வகுப்புக்கு 2 அட்டம்ப்டுகள் முயற்சி செய்து தோற்ற என்னை சிறிது நேரம் வெறிக்க பார்த்து விட்டு,  என்ன யோசித்தாரோ கிளம்பி வெளியே போய் விட்டார் அப்பா.

அன்றே நாக்பூர் கிளம்புவதாக இருந்த என் மாமன் நல்லாக்**ண்டனின் (** வரது ஜாதி பேருங்க, அதான் தடை பண்ணி வச்சிருக்கேன் ) வண்டியை மறித்து "மாமா ஐ ஆம் கம்மிங்" என வலுக்கட்டாயமாக ஏறிக்கொண்டேன்.

பெங்களூர், கோவா போன்ற அழகான நகரங்கள், பஞ்சாபி சாப்பாடு, ஹோஸ்பெட் போன்ற அணைகளில் ஆனந்த குளியல், கொல்லம் பீச், கேரளா பீப், (மாட்டுக்கறின்னு சொல்லவே இல்லயே மாமா நீ!)  அரை பீர் (இதை குடிச்சா செத்து போக மாட்டேன்ல) எல்லாம் ஆரம்பத்தில் சுகமாகவே இருந்தது. அரைகுறை டிரைவர் வேறு ஆகிவிட்டேன்.

ஆனால் அதுவே ஏப்ரல், மே மாதத்தில் மிக கொடுமையாக மாறியது. வெயில் தாக்கு பிடிக்க முடியவில்லை, அதுவும் மத்திய பிரதேசங்களில் கடும் அனலடிக்கும், சிறுநீர் கூட ரத்தம் மாதிரி ஒவ்வொரு சொட்டாகத் தான் போகும், லாரியில் இருக்கும் குடி தண்ணீர் தீயை வாயில் ஊற்றினால் போல் இருக்கும்.

இந்த சூழ்நிலையில் என் கூட படித்தவர்கள் பதினொன்றாம் வகுப்பை முடித்தால், மீண்டும் படிக்கும் ஆசை வந்தது. ஆனால் பள்ளியில் சென்று படித்தால் கௌரவ குறைச்சல் ஆகி விடுமல்லவா? ஒரு டுடோரியலில் சேர்வதாக முடிவு செய்து, "இனி நான் லாரிக்கு போக போறதில்ல" என்றேன், என் அப்பாவிற்க்கு இப்போதுதான் உண்மையான அதிர்ச்சியாக இருந்திருக்க வேண்டும், "ஒரு லாரி வாங்கீறலாம்னு இருக்கேன்",னு ஊரெல்லாம் சொல்லிக்கொண்டு இருந்திருக்கிறார்    

அவரது நினைப்பிலும் மண்ணை போட்டாகி விட்டது, அடுத்த அட்டேம்டில் பத்தாவது, அதற்கு அடுத்த மூன்று அட்டேம்ப்டுகளுக்கு பிறகு பனிரெண்டாம் வகுப்பை முடித்து விட்டேன்.
("என்ன சின்னராசு பெரிய படிப்பெல்லாம் படிச்சு முடிசிட்டே போல? இனி அடுத்தது டாக்டர் ஆயிருவே " இது மணி தாத்தா.
"பாட்டி  போய் பத்து வருஷம் ஆச்சு, டிக்கெட் வாங்குற அபிபிராயம் இருக்கா? இல்லையா! தாத்தா" இது நான்)

என் தந்தை லாரி வாங்கியே விட்டார், லாரியில் போவதா இல்லை ஏதாவது ஒரு பல்கலை கழகம் (அண்ணாமலை பல்கலைகழகம் தொலைதூர கல்வி) மூலம் மேல்படிப்பு படிப்பதா என்ற கடும் யோசனையில் காலம் தள்ளி கொண்டிருந்த போது,
என் தங்கையை (சித்தி மகள்) கல்லூரியில் சேர்க்குமாறு (தண்டமாவே தின்னுட்டு சுத்தாதடா, அவளை காலேஜ்ல சேர்த்தி விட்டுட்டு வா) வந்த அன்பு கட்டளையை மீற முடியாமல், ஈரோடு அருகே இருக்கும் ஒரு கல்லூரிக்கு படை எடுத்தோம்.

அவள் என்னுடன் சேராமல் இருந்ததால் சற்று நல்ல மார்க் எடுத்திருப்பதை கொஞ்சம் பெருமையாகவே வீட்டில் சொல்லி கொள்வார்கள். (உன்னால தாண்டி என் மானமே போகுது)

அவளுக்கு கேட்கும் சீட் தருவதாக சொன்ன பின்பும் இடத்தை காலி செய்யாமல் "சார்ர்ர்ர்ர்ர்ர்ர்", என பம்பி கொண்டிருந்தாள். "போலாம் வாடி", என்ற என்னை மதிக்காமல், "இன்னொரு சீட் வேணும்", என்றாள்.

"யாருக்கும்மா?", என்றார் துணை தலைவர்.
"இவனுக்கு தாங்க",, என்று என்னை கைகாட்டினாள், எனக்கு பேரதிர்ச்சி, என்னைவிட துணை தலைவருக்கு மருத்துவ மனையில் அனுமதியாகும் அளவு அதிர்ச்சி இருந்திருக்க வேண்டும். ஒரு பாட்டில் விஷம் முன்னால் வைக்க பட்டு இருந்தால் அதை அவர் தயங்காமல் குடித்திருப்பார்.

இருக்காதா பின்னே?

என் சட்டையில் மேல் இரண்டு பட்டன்கள் போடப்படவில்லை, எண்ணெய் வைத்து ஒரு வருடமே இருக்கும் பரட்டை தலை, கழுத்தில் கத்திபோல் தொங்கும் ஒரு செயின், சோலாப்பூர் செருப்பு (அரை கிலோ மீட்டருக்கு முன்பே சத்தம் வரும்), மயில் மார்க் லுங்கி. (ஆடுகளம் தனுஷ்?)

"என்னம்மா சொல்றே?", எனற அவர் கத்திய கத்தலில் அந்த அலுவலக கட்டிடமே கொஞ்சம் தூர் விட்டிருக்கும்.                    

அலுவலகத்தில் இருந்த யாரோ ஒருவர் வந்து அவரை சமாதான படுத்த வேண்டி வந்தது, நீண்ட ஆசுவாசத்திற்கு பின் "இவன் மார்க் சீட் குடு", என்றார் என்னை மேலும் கீழும் பார்த்தபடி.(என்ன ஒரு மன உறுதி?)
"ஹே ஹே அதை வீட்டில் வச்சிருக்கேன்", என்று சொல்லிய என் நம்பிக்கையில் வெடிகுண்டு வைத்தாள் என் அன்பு சகோதரி, அவள் கைப்பையில் (என்னை திட்டம் போட்டு குடும்பமே ஏமாத்தி போட்டீங்களேடி) இருந்து எனது மார்க் சீட் கற்றைகளை எடுத்து கொடுத்தாள்.

"உங்கப்பா என்ன தொழில் பண்றாருப்பா?" என்று திடீரென அன்பொழுக கேட்டார்.
"விவசாயம் பண்றார், ஒரு லாரி கூட வச்சிருக்காருங்க"
"நீங்க எதுல இங்க வந்தீங்க?"
"டீசல் புல்லட்லங்க"
"மார்க் ஷீட் ரொம்ப வெயிட்டா இருக்கேப்பா? எதுக்கு கஷ்டப்பட்டு பைக்ல கொண்டு வந்தீங்க? லாரில போட்டு எடுத்திட்டு வந்திருக்கலாம்ல!"

இதற்கு பிறகு எனக்கும், அவருக்கும் நடந்த பேச்சு வார்த்தைகளும், என் தங்கை பியூன் வரைக்கும் போய் கெஞ்சியதையும் (ஆளுதான் இப்படி, மத்தபடி இவன் ரொம்ப நல்லவன்ங்க)  நான் எழுதுவது உங்களுக்கு அவ்வளவு நல்லதல்ல.

எனக்கு நல்லது செய்ய முயன்ற (?) என் தங்கைக்கும், என் குடும்பத்திற்கும் நான் கொடுத்த வாழ்நாள் பரிசு அந்த கல்லூரியில் அவளுக்கும் சீட் இல்லை என்று துணை முதல்வர் எங்களை துரத்தி விட்டதே.

யாருகிட்ட?

அதன் பின் பக்கத்தில் இருந்த இன்னொரு சிறப்பு வாய்ந்த தனியார் கல்லூரி எங்கள் இருவருக்கும் இடம் கொடுத்தது.
ஏன்னா அவங்க அப்பத்தான் கட்டடம் கட்ட ஆரம்பிச்சு இருந்தாங்க....


    

Wednesday, January 13, 2016

நகைச்சுவை

பீஸ் வேண்டாம், கிரேவி மட்டுமே ஊத்துங்க...
புரட்டாசி போராட்டங்கள்
--------------------------------------

நானும்,அன்பழகனும் இன்னும்,10,15 ஆண்டுகள் வாழ்வோம்.
-கலைஞர்
'சட்ட கிழிஞ்சிருந்தா தச்சி முடிச்சிடலாம் நெஞ்சி கிழிஞ்சிருச்சே '
ஸ்டாலின்
--------------------------------------

மதிப் 'பெண்கள்' ன்னு பேர வச்சிட்டு ஆண்கள மார்க் வாங்குன்னா நாங்க எப்படி வாங்குவோம், மதிப் ஆண்கள் ன்னு மாத்துங்க டிரை பண்றோம்
--------------------------------------

பள்ளியில் படிக்கையில் நமக்கு கேட்கப்பட்ட கேள்விக்கு அருகினில் அமர்ந்திருந்தவன் பதில் சொன்னதை விடவா ஒரு பெரிய நம்பிக்கை துரோகம் இருந்துவிட போகிறது?
--------------------------------------

யுவனோட பெஸ்ட் ஆல்பம்னா, அது யுவனோட கல்யாண ஆல்பம்தான்..எத்தனை வெரைட்டீஸ்

--------------------------------------
மளையாளி கடையில டீ நல்லாயிருக்கும்னு சொல்றவன் மனுசன், சேச்சி நல்லாயிருக்கும்னு சொல்றவன் பெரிய மனுசன்... ஓணம் வாழ்த்துகள்

--------------------------------------

Saturday, December 12, 2015

நகைச்சு வை

"பிரிங் ஒன் பக்கெட் சிக்கன்" மாச முதல் ஞாயிறு
"டீ குடுன்னே! பன் புதுசா?" இடை ஞாயிறு
"இலவச நீர்மோர் எங்கங்க ஊத்தறாங்க?" கடைசி வாரம்
-------------------------


92 வயசு கொள்ளு தாத்தாவ வண்டில கூட்டிட்டு போவேன், இனி முடியாது, அவரு தலையில ஹெல்மெட் போட்டு வெயிட் தாங்காம மண்டைய போட்டாருன்னா?
-------------------------

"ஸ்டாலின் என்னை அடிக்கவேயில்லை", சர்ச்சையின் மையமான இளைஞர்
-இத அவர்கிட்ட சொல்ல வைக்கிறக்குள்ள எத்தன பேர் சேர்ந்து மிதிசாங்களோ
#அய்யோபாவம்
-------------------------

3000ருபாய்க்கு ஹெல்மெட் விக்கறாங்கலாம், மக்கள் விழிப்புணர்வை காட்ட வேண்டிய நேரம் வந்துருச்சு, இப்பவாவது சைக்கிள் வாங்கி ஆரோக்கியமா இருங்க
-------------------------

"பசிக்கிது"
"இட்லி வாங்கி தரவா?"
"சிக்கென் வாங்கு"
"அடிங்க, நானே இட்லி திங்கலாம்னு இருக்கேன்"
"வெயிட் பண்ணு... நான் பிச்சை எடுத்து தரேன்"
-------------------------