Thursday, June 21, 2018

எல்லா நாளும் கார்த்திகை புத்தக விமர்சனம்

வம்சியில் புத்தகங்களின் பெயரை அலைபேசியில் அனுப்பினால் கூட அடுத்தநாளே வீடு வந்து சேர்ந்து விடுகிறது.
சைலஜா அவர்களுக்கு, அன்பும் நன்றியும்.

பவாவின் மேல் சத்தியமாக பொறாமையாக இருக்கிறது, மனிதர் எல்லோருடைய வாழ்வில் இருந்தும் எப்படி நிறைகளை மட்டும் எடுத்து நிரப்பி கொள்கிறார் என. அன்பென்பதை வாழ்வின் பாதையாகவே மாற்றிக் கொண்ட அபூர்வ பிறவி. எனது தாத்தாவிற்கு பின்னர் அவர்தான் கதை எனக்கு சொல்லி, நீடூழி வாழ்க.

எல்லா நாளும் கார்த்திகையில் இந்தியாவில் தலைசிறந்த மனிதர்களாக போற்றப்படும் 24 பேரின் மறுபக்கத்தை பகிர்ந்திருக்கிறார்.

இந்த ஆளுமைகளுக்கான சில வரிகளை, சில குறிப்புகளை பவா எழுத்தின் மூலமாகவே உங்களுக்கு பகிர தருகிறேன். இவர் சொன்ன படைப்பாளிகள் யார் என்று புத்தகம் படிக்கும் போது மிகுந்த சுவாரஸ்யத்தை கூட்டும் என்பதால் பெயர்களை மறைத்திருக்கிறேன்.

இதில் வரும் ஒவ்வொரு வரியும் ஒரு பிரபலங்களை பற்றியது அல்லது அவர்கள் சொன்னது...

"நான் புலி பவா"

"முதுகு குனிந்து நடக்கும் சமூகத்தில் நான் நிமிர்ந்து நடக்கிறேன்.
ஆம், நான் திமிர் பிடித்தவன் தான்"

"நீங்கள் உடன்பட வேண்டாம், ஆனால் இது என் கருத்து"

 அவர் உரையாற்ற தொடங்கியதுமே எல்லா அரசு ஊழியர்களின் முகங்களும் வெளிறி போயின

"சார் எத்தனை வருடமா குடிக்கிறீங்க?"
"அநேகமா ஒன்றரை வருடத்தில் இருந்து"

படைப்பின் உச்சத்தில் ஒளிரும்போதே கீழே விழுந்து கருகி விட வேண்டும் அதுதான் அவருக்கு நிகழ்ந்தது

இவர் இயக்கிய "குற்றவாளி" எனும் குறும்படம் என்றென்றும் பேச தக்கது

கமல்ஹாசன் தன் வாழ்வில் காண துடிக்கும் படைப்பாளி இவர்

இரு பெரும் ஆளுமையின் முன் ஒரு உள்ளூர் கவிஞன் வெட்கமாக நின்ற தருணம்.

"எனக்கொன்றும் இல்லை சார், அவரின் பெயர் இவ்வருட நோபல் பரிந்துரைக்கு போயிருப்பதாக சொல்கிறார்கள், அவ்வளவு பெரிய எழுத்தாளரை தமிழ்நாட்டின் தமிழ் வளர்ச்சி மற்றும் பண்பாட்டு துறை அமைச்சருக்கே யாரென்று தெரியவில்லை என பதிவு செய்து கொள்ளட்டுமா?"

"என்ன வேணும் ***** உனக்கு?"
"ஒன்றுமே இல்லை"

"தமிழ் மக்களின் ரசனையை இத்தனை படம் எடுத்த அப்புறமும் புரிஞ்சிக்க முடியல பவா"


"ஒவ்வொரு தேசத்திலும் ஏதோ ஒன்று மட்டும்தான் என்னுள் பிரவேசிக்கிறது, மற்றதெல்லாம் பொருட்படுத்ததக்கவை அல்ல, ஸ்வீடனில் ஏரி, எகிப்தில் வீடு, இந்தியாவில் சாதுக்கள்'

"படைப்பிழந்து நின்ற அந்த தலைமை வரலாற்று சோகம்"

"எனக்கு அடுத்தவாரம் புதன் வியாழன் படப்பிடிப்பு இல்லை திருவண்ணாமலை வரட்டா? உங்க பிரண்ட் காலேஜில பிலிம் பத்தி சின்னதா ஒரு ஒர்க்க்ஷாப் நடத்தி தரேனே?"

"அவரோடு இருந்த பல தருணங்களை என் அப்பாவோடு இருந்த கதகதப்பை மனம் உணர்ந்திருக்கிறது"

"ரொம்ப குளிருதுப்பா, சிதையில் வச்சாத்தான் இந்த குளிர் போகும் போல"

"அம்பது குழந்தைகளுக்கு கேமரா கற்று தர வரமுடியுமா சார்?"
"அதை விட எனக்கு என்ன புடுங்கற வேலை?"

"அப்பா... உங்ககிட்ட ஒரு பாராட்டு வாங்க எனக்கு எட்டு வருஷம் ஆச்சு"

"மேடம், நான் உங்களை படம் எடுத்து பொழப்பு நடத்துற தேர்ட் ரேட் வியாபாரி இல்ல"

"அதை விடும்மா இன்னைக்கு ஒரு படம் எடுக்கலாம் எடுக்காம போகலாம் என் அப்பாவை நல்லா பார்த்துக்கறீங்கல்ல அது போதும் எனக்கு"

 "எழுத்தாளனாக இருப்பதை விட தமிழக அரசில் ஒரு கடை நிலை பணி ஊழியனாக பணி கிடைத்து உள்ளூரிலேயே இருக்கும் வாய்ப்பு கிடைத்திருந்தால் இதைவிட சந்தோசமாக இருந்திருப்பேன்"

"எந்த அகாலத்திலும் போக  இரண்டு வீடுகள் எனக்கு உண்டு என்பதை நம்புகிறேன், ஒன்று என் வீடு மற்றது பவா வீடு"

"இந்த ஜோயல் இருக்கானே இவன்தான் என் தாய், தகப்பன், நண்பன் எல்லாம்... மத்தியானம் அவன் பட்டினி கிடந்தது எனக்கு பத்து ரூபாய்க்கு சோறு வாங்கி போட்ருக்கான் அவன் கணக்கையே அடைக்க முடியல"

பிரியங்களும், மனித நேயமும், ஆளுமையும் கொட்டி கிடக்கிறது இந்த புத்தகத்தில். காலம் கடந்து நிற்கபோகும் ஒரு அருமையான படைப்பு. இது நமக்கு நன்கு தெரிந்த ஒளி வட்டமும், பெருமையும், புகழும் நிறைந்திருக்கும் மனிதர்களின் மறுபக்கம். இந்த புத்தகம் மூடப்படும் தருணம் மனித நேயமேனும் வாசல் திறக்கிறது. நன்றி பவா.

கண்டீப்பாக வாசிக்க பட வேண்டிய புத்தகம்.

வெளியீடு: வம்சி புக்ஸ்


No comments:

Post a Comment