குளக்கரையில் நின்று
ரசித்துக்கொண்டிருந்தேன் இடமும் வலமுமாய் அலைகளையெழுப்பிய மீன்களை பசிக்கிறதென சைகை காட்டி நடுவில் வந்த சிறுமி பெற்றுக்கொண்ட காசில் பொரி வாங்கித் தூவுகிறாள் குளத்தில் ஆர்வமாய்க் கொறிக்கத் தொடங்குகின்றன மீன்கள். - கீர்த்திசரியாக முத்தமிட்டு விடாதே;
அடுத்த வாய்ப்பு தவறிவிடும்
-DeepaVaru
இத்தனை அழகாக
கண்களில்
ஒற்றிக்கொள்ளும்படி
விழும்
அந்திமழைக்கு
ஒரு குறையும் இல்லை
கொஞ்சிக் கிள்ளிட
ஒரு கன்னம்
இல்லையென்பதைத் தவிர.
- ந.சிவநேசன்
குழந்தையை ஏமாற்றி வேலைக்கு போய்விட்டாள் அவள்
அவளின் சுரிதார் ஷாலைக் கட்டிக்கொண்டு
கேட்டுக்கும் வீட்டுக்குமாய் நடந்து
அழுகிறது குழந்தை
‘தெரிஞ்சா வேலைக்கே போகமாட்டா’’
என்று மனதை ஆற்றிக்கொள்கிறாள் அப்பத்தா
எல்லோருக்கும் கருணை இருக்கிறது
அதைவிட பெரிதாய் இருக்கிறது
வயிறு
-சாய்மீரா
கடைசிச் சந்திப்பை
முடித்துத் திரும்புமொருவனின்
வெடித்து அழும் கண்ணீரை
மறைக்கப் பொழிகிறது பேய்மழை
எல்லாருக்கும் பெய்யும் மழைதானென்றாலும்
எல்லாருக்கும் ஒன்றுபோலில்லை!
- வெள்ளூர் ராஜா
No comments:
Post a Comment