Thursday, November 3, 2022

பிடித்த சில கவிதைகள்

 குளக்கரையில் நின்று

ரசித்துக்கொண்டிருந்தேன் இடமும் வலமுமாய் அலைகளையெழுப்பிய மீன்களை பசிக்கிறதென சைகை காட்டி நடுவில் வந்த சிறுமி பெற்றுக்கொண்ட காசில் பொரி வாங்கித் தூவுகிறாள் குளத்தில் ஆர்வமாய்க் கொறிக்கத் தொடங்குகின்றன மீன்கள். - கீர்த்தி

சரியாக முத்தமிட்டு விடாதே; அடுத்த வாய்ப்பு தவறிவிடும் -DeepaVaru

இத்தனை அழகாக கண்களில் ஒற்றிக்கொள்ளும்படி விழும் அந்திமழைக்கு ஒரு குறையும் இல்லை கொஞ்சிக் கிள்ளிட ஒரு கன்னம் இல்லையென்பதைத் தவிர. - ந.சிவநேசன்

குழந்தையை ஏமாற்றி வேலைக்கு போய்விட்டாள் அவள் அவளின் சுரிதார் ஷாலைக் கட்டிக்கொண்டு கேட்டுக்கும் வீட்டுக்குமாய் நடந்து அழுகிறது குழந்தை ‘தெரிஞ்சா வேலைக்கே போகமாட்டா’’ என்று மனதை ஆற்றிக்கொள்கிறாள் அப்பத்தா எல்லோருக்கும் கருணை இருக்கிறது அதைவிட பெரிதாய் இருக்கிறது வயிறு -சாய்மீரா

கடைசிச் சந்திப்பை முடித்துத் திரும்புமொருவனின் வெடித்து அழும் கண்ணீரை மறைக்கப் பொழிகிறது பேய்மழை எல்லாருக்கும் பெய்யும் மழைதானென்றாலும் எல்லாருக்கும் ஒன்றுபோலில்லை! - வெள்ளூர் ராஜா

No comments:

Post a Comment