நேற்று ஏரியாவில் இரண்டு சீர், அதிலும் ஒன்று கறி விருந்து என இவள் சொன்னதால் உற்சாகமாகி விட்டேன். இரண்டு விழாவும் ஒரே சமயத்தில் இருந்தது, வெஜ் இவள் சாப்பிடவும், கறி விருந்தை நான் சாப்பிடவும் திட்டமிட்டுக் கொண்டோம்,
அடுத்த விழாவில் சடங்குக்காக நிறுத்தப்பட்டிருந்த பெண்ணை பார்த்தேன். கொஞ்சம் அதிர்ச்சியாக இருந்தது
சிறிய குழந்தை, நேற்று தெருவில் தனது தம்பி மற்றும் சில சிறுமிகளுடன் ஓடி விளையாடிக்கொண்டிருந்தது.
1. ஒரு சில பிரிவுகள் தனது பொருளாதார வசதியை காட்ட இதை செய்கிறார்கள்
2 நான் படித்த வரையிலோ கேள்விப்பட்ட வரையிலோ எந்த ஒரு நாட்டிலும் கூட்டமாக வந்து பேனர் வைத்து பெண் வயதுக்கு வந்ததை கொண்டாடும் மக்கள் இருக்கிறார்கள் என்றே கேள்விப்பட்டதில்லை.
3. கறி விருந்து இல்லை, முதலில் செய்வதாக இருந்து பின்னர் சைவத்திற்கு மாற்றி விட்டார்களாம் (எவண்டா மாத்தினது? பாவிப்பயலுகளே)
4. யாரோ யாரையோ "டேய் குடிகாரா" என்று அழைத்தார்கள், கிட்டத்தட்ட 90 சதவீத ஆண்கள் திரும்பி பார்த்தார்கள். அந்த நிலைமையில் இருக்கிறது தமிழகம்
No comments:
Post a Comment