Thursday, February 11, 2016

எங்கள் சேர்க்கையின் பிண்டமெனப்படலாம்

எங்கள் சேர்க்கையின் பிண்டமெனப்படலாம்
நீ.....
எனக்கு அப்படியில்லை.
உன் முற்றுபெறாத வார்த்தைகளுக்குள் நீட்சிபெறுகிறது எனக்கான வாழ்க்கை.....
உன் ஸ்பரிசங்களின் பூரிப்பில் இலகுவாகிறேன்
காற்றுவெளியில் மிதக்கும் பறவையின்
இறகென.....
நீ மட்டுமே அறிந்திருக்கிறாய்
நான் எப்போது சிறுவனாவேனென்று.....
சொல்வதெனக்கொண்டால்
மறுபிறப்பொன்று வேண்டும்.
அதில் எனக்கு நம்பிக்கையில்லை.
ஆனால்,
என் மரணம் உன் மடியில் வேண்டும்
மகளே.

-சதா 

No comments:

Post a Comment