Monday, November 7, 2016

உங்களில் யாராவது ஒருவராவது நவீனின் வாழ்க்கையை வாழ்ந்தது உண்டா?

"உங்க அம்மா எப்படி செத்து போனாங்க?", என்ற கேள்விக்கு "தற்கொலை செய்துகொண்டு", என்று பதில் சொல்வதற்கு கூசி இருக்கிறேன், சிறு வயதில் இதை யாராவது கேட்டவுடன் கண்ணீர் வரும் , பின்னர் அதுவே வெறுப்பாக மாறி கடும் கோபம் கொள்ள செய்யும் கேள்வியாகவும் மாறி, கொஞ்ச காலம் திசை மாறிக்கூட மிருகமாய் இருந்திருக்கிறேன்.... அப்படி இருக்கையில் இந்தியாவின் பெரிய நோயானா எய்ட்ஸ்க்கு தன் தந்தையையும், தாயையும் பறி கொடுத்து விட்டு, தனி மனிதனாக போராடி தனக்கான வாழ்க்கையை மீட்டு, தன் தம்பிக்கும் வாழ்வளித்து விட்டான் தம்பி நவீன், எத்தனை அவமானங்களை கடந்து வந்திருக்க கூடும், என நினைக்கையிலேயே பதறுகிறது மனது. கண்ணீர் நிறைந்த தூக்கமில்லா இரவுகளை அவன் மட்டுமே அறிவான், இதை அவன் அடைய, மிக மிக நேர்மையாய் இருந்திருக்கிறான் என்பதே என் ஆச்சர்யங்களில் ஒன்று, அனைவரும் கைவிட்ட பிறகு, காசு பணம் இல்லாமல் நேர்மையாய் மட்டுமே இருப்பது என்பது, 99 சதவீதம் சாத்தியம் இல்லை என்பதே நிதர்சனம். ஆனால் அதை அவன் வாழ்ந்திருக்கிறான் என்பதை நினைக்கையில் பெருமை கொள்கிறேன்... இன்று அவன் திருமணம் முடிந்தது... 
என்னிடம் அவனுக்காய் சொல்ல சில வார்த்தைகள் இருக்கிறது...

"உனக்கான துயரங்கள் முடிவடைந்து விட்டது, இனி எல்லாம் சுகமே",
"நீடூழி சிறப்புடன் வாழடா, நவீன்"

No comments:

Post a Comment