Monday, July 2, 2018

குடியின்றி அமையாது உலகு

முத்தமிழ் அறிஞர் டாக்டர்கலைஞருக்கு என்னுடைய கவிதையோ, என்னுடைய இருப்போ தெரியாது. தலித் போராளி தொல்.திருமாவளவனுக்கும் தெரியாது. இனமான காவலர் கி.வீரமணிக்கும் தெரியாது. தமிழ்க் குடிதாங்கி மருத்துவர் ராமதாசுக்கும் தெரியாது. புரட்சித் தலைவி ஜெயலலிதாவுக்கு சுத்தமாகத் தெரியாது. இன்னொரு பக்கம் சினிமாவில் இருக்கிற சூர்யாவுக்கோ, விஜய்க்கோ, விக்ரமுக்கோ, என்னைத் தெரியாது. என்னோட பக்கத்து வீட்டுக்காரனுக்கும் என்னைத் தெரியாது. இவர்களைத்தான் ஜனங்களுக்குத் தெரிந்திருக்கிறது. நானும் ஜனங்களுக்குத்தான் கவிதை எழுதுகிறேன். இந்த ஒரு காரணமே குடிப்பதற்குப்போதுமானது. 

-விக்கிரமாதித்யன்

No comments:

Post a Comment