Saturday, February 10, 2018

கவிதாயினி தாமரை


 ஆண் கவிஞர்கள் கோலோச்சி கொண்டிருந்த தமிழ் சினிமாவில் 1998ல் இனியவளே மூலம் அறிமுகமாகி, "காதலெனும் முடிவிலியில் கடிகார நேரம் கிடையாதே.... வசீகரா என் நெஞ்சினிக்க" என தனது வரிகளில் சிக்ஸர் அடிக்க ஆரம்பித்தார்.

வேறு மொழி கலப்பே இல்லாமல் தமிழில் மட்டுமே எழுதும் கொள்கை கொண்ட ஒரே பாடலாசிரியரும் இவர்தான்.
 இது அவருக்கு திரைத்துறையில் இருபதாம் ஆண்டு தொடக்கம்.  இதுவரை மூன்று பிலிம் பேர் விருதுகளையும், தமிழ்நாடு அரசின் சிறந்த பாடலாசிரியர் விருதை இரண்டு முறையும் பெற்றுள்ளார்.

கெளதம்கெசுதேவ் மேனனின் ஆஸ்தான பாடலாசிரியர் தாமரை தான். "வசீகரா என் நெஞ்சினிக்க, உயிரின் உயிரே, ஒன்றா ரெண்டா ஆசைகள், பார்த்த முதல் நாளே, உன் சிரிப்பினில், நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை, முன் தினம் பார்த்தேனே, ஓ சாந்தி சாந்தி, ஓ சாந்தி, உனக்கென்ன வேணும் சொல்லு, பறக்கும் ராஜாளியே, அவளும் நானும்" என உச்ச காதலை அட்டகாசமாக சொல்லும் பாடல்கள் நமக்கு கிடைக்கும்.

இதயத்தை குறிவைத்து அதில் நுழைந்து நிரந்தர இடம் பிடிக்கும் எழுத்துகளுக்கு சொந்தக்காரி தாமரை.

 தற்போது என்னை நோக்கி பாயும் தோட்டாவில் வெளிவந்த "மறுவார்த்தை பேசாதே" பாடல் தற்போதைய வைரல். எனது மிக விருப்ப பாடல் பட்டியலில் முதலிடமும் அதுதான்.

காதலை தொலைக்காத வண்ணம் தன் பாடல்களில் வாழ்க்கையை தொடரும் தாமரைக்கும், அதை அழகாக்கி தரும் கெளதம் வாசுதேவ் மேனனுக்கும் நன்றிகள்.

 தனி வாழ்க்கையின் கடும் பாதிப்புக்கு உள்ளானாலும் அதை வெளிக்காட்டி கொள்ளாது மீண்டும் தன் கலை மூலம் விஸ்வரூபம் எடுத்தவர் பாடகி ஸ்வர்ணலதா, அவர் மறைந்து பல ஆண்டுகள் கடந்தாலும், "இன்னிசை மட்டும் இல்லையென்றால் நான் என்றோ இருந்திருப்பேன்" போன்ற   உருக்கும் குரலுக்கு நான் எப்போதும் அடிமை.

இப்போது தாமரை அந்த இடத்தை நிரப்பிக் கொண்டிருக்கிறார்

No comments:

Post a Comment