Wednesday, June 8, 2016

பெரிய வணிக வளாகத்தில் (shopping mall) நடந்த பதைபதைக்கும் குழந்தை கடத்தல்

ஆங்கிலத்தில் எனக்கு வந்த செய்தியை தமிழில் பதிவு செய்திருக்கிறேன்
நண்பர்களே,
 கொச்சினில் மிக பெரிய வணிக வளாகத்தில் (shopping mall), கடந்த வாரம், எனது தோழிக்கு நடந்த கொடூரத்தை செய்திகள் மூடி மறைத்து விட்டன, அந்த வணிக வளாகத்தின் பெயர் கெட்டுவிடும் என்ற காரணத்தால்.

எனது தோழியும், அவரது கணவரும் ஆறு வயது பெண் குழந்தையுடன் வணிக வளாகத்தில் உள்ள விளையாட்டு இடத்தை நோக்கி  (fun zone) நடந்து கொண்டிருந்தனர், மகள் தாயின் கரம் பற்றியே நடந்து கொண்டிருந்தாள், ஒரே ஒரு நொடி கை பிரிவதை உணர்ந்த தாய், திரும்பி பார்ப்பதற்குள் மகளை காணாததை அறிந்தார், பதைத்து போனவர் உடனே சுதாகரித்து, தாமதிக்காமல் அந்த வணிக வளாகத்தின் அலுவலகத்திற்கு விரைந்து சென்று புகார் கொடுத்திருக்கிறார். அவர்கள் உடனடியாக வளாகத்தின் காவலர்களையும் உஷார் செய்து, எல்லா கதவுகளையும் அடைத்து சோதனை செய்திருக்கிறார்கள். வெளியே செல்லும் அனைத்து வாகனங்களும் நிறுத்தப்பட்டது. இதெல்லாம் பத்து நிமிடத்தில் நடந்தது, அந்த பத்தாவது நிமிடத்தில் அந்த குழந்தை, வளாகத்தின் கடைசி தளத்தில், போதை மருந்து கொடுக்கப்பட்டு, மயங்கிய நிலையில், தலை மொட்டை அடிக்கப்பட்டு, துணி மாற்றப்பட்டு கீழே கிடந்திருக்கிறது. பெற்றோர் உடனடி புகாரின் காரணமாகவும், வணிக வளாகத்தின் பாதுகாப்பு வேகம் காரணமாகவும் கண்டு பிடிக்க பட்டு அந்த குழந்தை மீட்க பட்டது.

அந்த பத்து நிமிடத்தில் இவையெல்லாம் நடந்திருக்கிறது, அப்படி என்றால் குழந்தை வெளியே சென்றிருந்தால்? அடுத்த அரை மணி நேரத்தில் அக் குழந்தை எங்கே இருக்கும், எப்படி பட்ட நிலைக்கு தள்ளப்பட்டிருக்கும்  என நினைக்கவே பதறும் இக்காரியங்களை, ஒரு மிக பெரிய கும்பல், மிக திறமையாக திட்டமிட்டு, கடத்தல்களை நடத்துகிறது.

எவ்வளவுதான் பாதுகாப்பு கருவிகள் இருந்தாலும், மனித தன்மையற்ற இது போன்ற செயல்கள் எல்லா வணிக வளாகங்களிலும் நடப்பதற்கான சாத்திய கூறு முழுமையாக உள்ளது. இது நாம் செல்லும் வணிக வளாகங்களிலும் நடக்க கூடும் இல்லையா?

குழந்தைகளை கூட்டி செல்லும் பெற்றோர்கள், உறவினர்கள் மிகுந்த விழிப்புடன் இருங்கள். தயவு செய்து அவர்களை தனியாக செல்ல அனுமதிக்காதீர்கள்.

நன்றி
மக்களின் விழிப்புணர்ச்சிக்காக
Team Swaraksha
NGO for child sexual abuse awareness.  
 
  

No comments:

Post a Comment