Friday, February 28, 2020

கற்றதும் பெற்றதும் பகுதி 2


சுஜாதாவின் கற்றதும் பெற்றதும் பகுதி 2.

படித்ததில் சில பிடித்த சுவாரஸ்யமான தகவல்கள் கவிதைகள் கருத்துக்கள்

குழ‌ந்தை அழும்போதெல்லாம்
நான் குதிரையாக‌
வேண்டியிருக்கிற‌து.
இம்ம‌ண்ணில்
என்னைச்ச‌வாரியாக்கி
கைகொட்டி சிரிக்க‌,
குழ‌ந்தைக்குமா ஆன‌ந்த‌ம்?
 -எஸ். வைதீஸ்வரன்

வாழ்க்கை சுருக்கமானது.
பிடிவாதத்திற்கோ, சண்டை போடவோ நேரமில்லை நண்பனே
 -லென்னன்

கண்ணீரை படைத்தது
கடவுளின் தவறா?
ஆனந்தப்பட்டு அதை வடிக்காமல்
அழுது வடிக்கும் மனிதனின் தவறா?

-நீலமணி

கடும் உழைப்பு எதிர்காலத்துக்கு நல்லது. சோம்பேறித்தனம் நிகழ்காலத்துக்கு!

சாவுக்கு இழப்பீடு என்பது நவீன வியாபார உத்திகளில் முதன்மையான இடத்தை பிடித்திருக்கிறது. அரசியல் எனும் வியாபாரத்தில் அது மிக பெரிய முதலீடு

அந்த பெண்ணுக்கு பதினெட்டு பாஷைகள் தெரியும், ஆனால் எதிலும் மாட்டேன் என்று சொல்ல தெரியாது
 -டொராதி பார்க்கர்

வாயை திறக்காமல் ஒன்றுமே தெரியாத முட்டாளை தோன்றுவது, வாயை திறந்து அதை ஊர்ஜிதம் செய்வதை விட மேல்
 -மார்க் டிவைன்

சிலர் பேனா கத்தியால் திருடுகிறார்கள்,
சிலர் பேனாவால்...
 -கத்ரி

"இறந்தவர் யாருப்பா?" என்றார் மருத்துவர்
"நான்தாங்க" என்றார் வந்தவர்         
 -மாணிக்கதாய்

தோழி, உனக்கு குழந்தை பிறந்ததற்கு வாழ்த்துக்கள் உனக்குள் இந்த திறமை இருந்தது எனக்கு அப்போதே தெரியும்.
 -டோரத்தி பார்க்கர்

பழைய மன்னருடன் நகர்வலம்
வந்ததாய்ச் சொல்லப்பட்ட
பாகனற்ற கிழ யானை
பட்டத்து ஒப்பனையோடும்
ஓசையற்ற சலங்கையோடும்
தெருவில் இறந்து கிடந்தது’.
 -யாத்ரீகன்

புகழ் வார்த்தைகளை நிஜமென்று நம்ப துவங்கும்போது உனக்கு கேடு காலம் ஆரம்பிக்கிறது
 -ஜிம் ஆலன்

உலகின் ஜனத்தொகையில் பாதிப்பேருக்கு பலாப்பழம் பிடிக்கும், மீதி பேருக்கு பிடிக்காது அவர்கள் ஒருவரை ஒருவர் திருமணம் செய்து கொள்வது வழக்கம்
-ஜிம் ஆலன்

"எல்லாமே மாயை எதுவுமே நிலையில்லை" என்ற நான் என் கார்பெட்டுக்கு அதிக விலை கொடுத்துவிட்டேன்

சாகாத இலக்கியம் படைப்பதை விட
நான் சாகாமல் இருக்கவே விரும்புகிறேன்
 -ஆலன்

அடி முட்டாள்
அயோக்கியன்
அதி புத்திசாலி
ஞானி
அனைவரையும் குளத்தில் குதித்தனர்
ஒரே மாதிரி வட்டம் வட்டமாக வந்தது
 -தென்றல்

தவறுகளுக்காக அவமானப்பட்டால் அதை குற்றங்களாக்கி விடுவீர்கள்
-கன்பூசியஸ்

பிரச்சாரம் பொய் சொல்வதன் ஒரு பிரிவு, அதனால் உங்கள் நண்பர்களை ஏமாற்றலாம் நிச்சயம் எதிரிகளை ஏமாற்ற முடியாது
 -வால்டர் லிப்மன்

ஒரு தரம் காதல் என்னை மீட்டு தந்தது
ஒரு தரம் புல்லாங்குழல் என்னை மீட்டு தந்தது
ஒரு வண்ணத்துப்பூச்சியும் என்னை மீட்டு தந்தது
நான்தான் அடிக்கடி தொலைந்து போகிறேன்
 -பூமா ஈஸ்வரமூர்த்தி

நான் எழுதிய புத்தகங்களுக்காக
குடித்த சுருட்டுகளின் காசு கூட அதிலிருந்து கிடைக்கவில்லை
 -காரல் மார்க்ஸ்

நானே வலிய சென்று எம் ஐ டி யில் ஒரு பாட்டு போட்டியில் கலந்து கொண்டு மூன்றாவது பரிசாக ஒரு சொப்பு மாதிரி கப்பு வாங்கினேன். அதில் கலந்துகொண்டவர்கள் எண்ணிக்கை மூன்று
 -சுஜாதா

என் நீண்ட ஆயுளுக்கும் ஆரோக்கியத்திற்கும் காரணம் தெளிவாக தெரிந்து விட்டது, நான் ஒரு சிகரெட் கூட பிடித்ததில்லை ஒரு பெண்ணை கூட தொட்டதில்லை என் பத்து வயதுவரை
 -ஜார்ஜ் மூர்

"தினமும் சமைக்கும் போது இந்த நீரில் தான் சாதனை செய்தோம் என நினைப்பதுண்டா?" என்று சிரித்தாள் குடும்பத்தலைவியாகி குண்டாகவும் ஆகிவிட்ட முன்னாள் நீச்சல் வீராங்கனை
 -முகுந்த் நாகராஜ்

எனக்கு சட்டமியற்றும் அதிகாரம் இருந்தால் மதமாற்றத்தை உடனடியாக தடைசெய்து விடுவேன்
-மகாத்மா காந்தி சொன்னதாக ஹிந்துமித்திரன் இதழில்

அப்பா சொன்னாரென
பள்ளிக்கு சென்றேன்
தலை சீவினேன்
சில நண்பர்களை தவிர்த்தேன்
சட்டை போட்டுக்கொண்டேன்
பல் துலக்கினேன்
வழிபட்டேன்
கல்யாணம் கட்டிகொண்டேன்
காத்திருக்கிறேன் என் முறை வருமென
 -கனிமொழி

சான் பிரான்சிகோவில் ஆப்பிள் கம்பெனியின் புதிய படைப்பான ஐ போனை வாங்க 40 வது ஆளாக க்யூவில் நின்றவர் ஸ்டீவ் வாஸ்னியாக் ஆப்பிள் கம்பெனி நிறுவனர்களில் ஒருவர்

நன்றி வணக்கம் 


Friday, February 14, 2020

குறுங்கதை-10 சண்டைச்சேவல்

அவனது சண்டைச்சேவல் தோற்றதேயில்லை. அவன் சேவலைச் சண்டைக்குப் பழகுவதற்கு முன்பாக அது ஒரு சேவல் இல்லை என்பதை உணரச் செய்வான். இதற்காக அதிகாலையில் சேவல் தன்னை அறியாமல் கூவும் போது சிறிய மூங்கில் கழியால் அடித்து அது கூவுவதைக் கட்டுப்படுத்துவான். நாட்படச் சேவல் கூவுவதை நிறுத்திக் கொண்டுவிடும். பின்பு சேவலை இன்னொரு சேவலுடன் சண்டைக்குப் பழக்குவதற்குப் பதிலாகத் தண்ணீரை பீய்ச்சியடித்து சேவலை அதோடு சண்டையிடச் செய்வான். தண்ணீர் எந்தத் திசையிலிருந்து பீறிடும் எனத் தெரியாமலும் நனைந்து கண்ணை மறைக்கும் தண்ணீரை எப்படிச் சமாளிப்பது எனத் தெரியாமலும் சேவல் தடுமாறும். பின்பு மெல்லத் தண்ணீரை எதிர்கொள்ளச் சேவல் பழகிவிடும்.
பின்பு சேவலுடன் சண்டையிட பல்வேறு தீப்பந்தங்களை ஏற்பாடு செய்திருப்பான். நெருப்புக் கண் முன்னே சீற்றம் கொள்வதையும் ரெக்கையில் நெருப்பு பற்றிக் கொள்வதையும் கண்டு சேவல் ஆவேசம் கொள்ளும். பின்பு பயந்தெளிந்து நெருப்பைக் கண்டு சேவல் விலகியோடாது. அதன்பிறகு சேவலின் கண்களைக் கறுப்புத் துணியால் கட்டி கிணற்றில் போட்டுவிடுவான். தட்டுத்தடுமாறி அது மேலேறி வர எத்தனிக்கும். ஆனால் சில நாட்களில் கண்களைக் கட்டினாலும் சேவல் திசையறிந்துவிடும்.
அதன்பிறகு சேவலுக்கு உணவு தராமல் பட்டினி போடுவான். அது பசியில் குரல்கொடுத்தபடியே இருக்கும். மண்ணைக் கொத்தித் தின்னும். பின்பு மெல்லச் சேவல் பசியைக் கடந்து போகும். முடிவில் மரத்தில் செய்யப்பட்ட இயந்திர சேவல் ஒன்றை அத்தோடு சண்டையிடச் செய்வான். மரச்சேவலை கொத்தும் நிஜசேவல் ஏன் அச்சேவல் கத்துவதில்லை எனத் திகைத்துப் போகும். பின்பு தானும் அது போலவே கத்தக்கூடாது என்பதை உணர்ந்து கொள்ளும்.
இந்தப் பயிற்சிகள் யாவும் முடிந்தபிறகு அவன் சேவலைச் சண்டைக்குக் கொண்டு வருவான். போட்டியில் அவனது சேவல் எதிராளியின் சேவலை ஒரே அடியில் வீழ்த்திவிடும். ஆனால் வென்ற சேவலுக்கான கொக்கரிப்போ, சிறகடிப்போ எதுவும் இருக்காது. ஒரு துறவி மடாலயம் திரும்புவது போல நிதானமாக அச்சேவல் அவனை நோக்கித் திரும்பிவரும். அவன் சேவற்கட்டில் வென்ற பரிசினை ஒருபோதும் பெற்றுக்கொள்வதில்லை.
வீடு திரும்பும் வழியில் தோளில் சேவலை நிற்கச் செய்தபடியே உற்சாகமாகப் பாடிக் கொண்டு வருவான்.
அவ்வளவு தான் அவனது மகிழ்ச்சி. 

From s.raa's website (Sharing from S Ramakrishnan's FB page)

Friday, February 7, 2020

கொரோனோ வைரஸ்


சைனா மொழியை கூகுள்ல போட்டு தேடினதுல கொரானா வைரஸ்ன்னா என்ன, அங்க இப்போ என்ன அப்டேட் இருக்குன்னு எனக்கு புரிந்தவரை விளக்குகிறேன்....

汉肺炎新型冠状病毒 இதுதான் கொரானா வைரஸ்கான சைனா வார்த்தை, இதை காபி பேஸ்ட் பண்ணி தேடுங்க, நம்மூரு செய்திகள்ல வெளிவராத தகவல்கள்  நிறைய கிடைக்கும்

பின்வரும் இந்த இரண்டு ட்வீட் கள் தான் கொரானாவின் கொடூரத்தை உலகிற்கு உணர்த்தியது, சமூக வலைதளங்களை  பரபபபாக்கிய முதலில் வந்த செய்தி

"ஒரு ஏஜென்ஸ் பிரான்ஸ் செய்தியாளர் 31 ஆம் தேதி தெருவில் விழுகிறார் அவருக்கு வுஹான் நிமோனியா இருப்பதாக சிலர் கூறுகின்றனர். அதே காலங்களில் இன்னும் சிலர் மர்மமான முறையில் உயிரிழக்கிறார்கள் யாருடைய சடலத்தையும் பரிசோதனை செய்ய கொண்டு செல்ல படவில்லை 

அப்படியே தகனம் செய்கிறார்கள், எனவே இறப்புகளின் உண்மையான காரணம் யாருக்கும் தெரியாது"

அடுத்தது கீழே

"என் அம்மாவுக்கும் எனக்கும் உடல்நிலை சரியில்லை,  இங்கே யாரும் உணவு அல்லது மருந்து அனுப்பவில்லை. இன்று என் நண்பர் அனுப்பிய வீடியோ, இப்போது நான் மரணத்தைப் பார்க்கிறேன், உணர்ச்சியற்றவனாக உணர ஆரம்பிக்கிறேன், என் வெப்பநிலை குறையத் தொடங்குகிறது"

"பாதுகாப்பு துறை நான் வாயை மூட வேண்டும் என எதிர்பார்க்கிறது, வுஹானில் ஏற்பட்ட தொற்றுநோய் ஒரு பெரிய மனிதாபிமான பேரழிவை ஏற்படுத்தியுள்ளது. மனசாட்சி உள்ள நான் எப்படி அமைதியாக இருக்க முடியும், தொலை தொடர்பே இல்லை இந்த டிவீட்டை மட்டுமே செய்ய முடிகிறது, அதிகாரியால் மட்டுமே கொரோனா பாதிப்பு   செய்திகளை வெளியிட முடியும்", என்றது அடுத்த பிரபலமான ட்விட்

கொரானா விலங்குகள் மூலம் அசாத்தியமான முறையில் பரவியது என்று கண்டுபிடித்திருக்கிறார்கள். முதலில் கண்டு பிடித்த லீ வென்லியாங் என்ற 34 வயது டாக்டரை தவறான தகவல் பரப்புவதாக கூறி கைது செய்து, பின்னர் விடுதலை தந்து நோயாளிகளுக்கு சிகிச்சை தர சொன்னது சீனா அரசு, அவர் கொரோனோ பாதிப்பால் நேற்று இறந்தார்.

"உலகளாவிய சுகாதார அவசரநிலை" என்று அறிவித்தும் தொற்றுநோயைக் கையாள்வதற்கான அரசாங்கத்தின் நடவடிக்கைகள் குறித்து ஹாங்காங் மக்கள்  கடுமையான அதிருப்தி அடைந்துள்ளனர்.

பாக்டீரியாவுக்கு வளர்ச்சி குறைவு, மருந்து சீக்கிரம் கண்டுபிடிக்கலாம், கட்டுப்படுத்தலாம், அழிக்கலாம். கொரோனோவை போன்ற வைரஸ் அப்படியல்ல, நேற்று ஆறு மாத குழந்தையாக இருந்த ஒருவன் இன்று 20 வயது வாலிபனாக மாறி நாளை 60 வயதுடையவனாக மாறுவது போன்றது, ஏன் இப்படி என கண்டுபிடிக்கவே மாதங்கள் தேவை, பின்னரே மருந்து சாத்தியம். ஆகவே நிலவேம்பு கசாய வதந்திகளை நம்பாதீர்கள், சீனாவில் இணைய கட்டுப்பாடு உண்டு, உண்மை தாமதமாக வெளிவரும் அல்லது வராது, கிட்டத்தட்ட ஒரு கோடி பேரை வுவான் நகரில் தனிப்படுத்தி செத்தாலும் பரவாயில்லை என வைத்திருக்கிறது அவ்வரசு. கொரோனோவை கட்டுப்படுத்தவோ தடுக்கவோ முடியவில்லை என உலகத்துக்கு சொல்லி விட்டார் அந்த அதிபர்.

இந்தியாவிற்கு பயணிகள் மூலம் உள்ளே வருவது தடுக்க படலாம், சீன-நேபாள-இந்திய எல்லைப் பகுதிகளில் பாதுகாப்பு குறைவு, அங்கிருந்து பரவ வாய்ப்பு உண்டு. இவ்வளவு மக்கள் தொகைக்கு போதுமான மருத்துவ வசதிகள் சீனாவிலோ, இந்தியாவிலோ மிகக்குறைவு. தற்போது தமிழ்நாடு கொரானாவால் பாதிக்கப்படவில்லை, அதனால் நமக்கு வரும்போது கவலைப்படலாம்,
பாஸிடிவ் பக்கங்கள்

சீன நர்ஸ்களின் பணி மிகவும் போற்றத்தக்கது, நேரம், காலம் பார்க்காமல் பணிபுரிகிறார்கள், அவர்கள் முகமூடிகள் முகத்தையே சிதைத்த போதிலும். தேவதைகள்.

பல நாடுகள் சீனாவில் இருக்கும் தன் நாட்டு மக்கள் திரும்பி வருவதை விரும்பாத போது, இந்தியா தனி விமானத்தில் நம் சகோதரர்களை அழைத்து வந்திருக்கிறது.

கேரளாவில் கொரானாவுடன் வந்தவர்கள் பூரண குணமாகி விட்டதாக கேரள அரசு தெரிவித்துள்ளது.

பொதுவாக இந்தியர்களின் மரபணு, கொரானாவிற்கு எதிரான தன்மையுடன் காணப்படுகிறது எனவும், பாதிப்பு குறைவாக இருக்கும் எனவும் மரபணு வல்லுநர்கள் கூறுகின்றனர்.

Friday, January 31, 2020

கோவை கார்ப்பரேட் நிறுவனமும் ஏஞ்சலும்

கடந்த சில நாட்களுக்கு முன்பு இங்கே  கோவையில் மிக மிக பிரபலமான ஒரு கார்ப்பரேட் நிறுவனம் ஒன்றில் பணி புரியும் பெண் ஊழியை (வசதிக்காக ஏஞ்சல் என வைத்துக்கொள்வோம்)  இரவு பணி முடிந்து நிறுவன வாகனத்தில் வீட்டுக்கு சென்றுள்ளார், வீடு வரும் முன்னே தொலைபேசியில் யாருடனோ உரையாடிவிட்டு பாதியில் நிறுத்த சொல்லி எனது கணவர் இங்கிருக்கிறார் என சொல்லி இறங்கி அவருக்காக காத்திருந்தவருடன் சென்றுவிட்டார், ஒரு மணி நேரம் கழித்து அந்த நிறுவனத்திற்கு ஏஞ்சலின் கணவர் போன்
செய்து "ஏஞ்சலின் செல்போன் வேறு அணைத்து வைக்கப்பட்டிருந்திருக்கிறது, இன்னும் வீட்டுக்கு வரவில்லை ஏன் தாமதம்?" என கேட்டாராம், அலுவலகத்திலும் வாகனத்திலும் விசாரித்து விட்டு திரும்பவும் ஏஞ்சலின் கணவருக்கு அழைத்து கணவர் தான் பாதியில் அழைத்து கொண்டு போனதாக கூறியிருக்கிறார்.  பதறிப்போன கணவர் நேராக காவல் நிலையம் சென்று விட்டாராம். டிரைவர், கூட வரும் தனியார் நிறுவன காவலர் மற்றும் ஒருங்கிணைப்பாளர் மூவரையும் போலீஸ் தொலைபேசியில் அழைத்து அங்கே வர வைத்து விட்டது. டிரைவர்,  தனியார் நிறுவன காவலர் இருவரையும் சட்டையை கழற்ற சொல்லி கீழே அமர வைத்து, ஏஞ்சலை என்ன செய்தீர்கள் என மிரட்ட ஆரம்பித்ததாம் காவல்துறை. காலை நான்கு மணி வரை இந்த நிலை தொடர, நான்கு மணிக்கு ஏஞ்சலின் செல்போன் உயிர்ப்பித்திருக்கிறது, கணவர் ஏஞ்சலை அழைக்க "நான் வீட்டுக்கு வந்துட்டேன் நீங்க எங்க போனீங்க?" என அன்பொழுக கேட்டிருக்கிறார் .   "ஏஞ்சல் இன்னும் அரை மணி நேரத்தில் இங்கே வரவில்லை எனில் உங்களையும் விட மாட்டோம்" என  கணவரையும் உட்கார வைத்து விட்டதாம் காவல் துறை. ஏஞ்சல் அவசர அவசரமாக கால் டாக்ஸி பிடித்து காவல் நிலையத்தில் கால் வைத்ததும் ட்ரைவர் தனக்கு தெரிந்த எல்லா கெட்ட வார்த்தைகளையும் ஏஞ்சலின் மேல் உபயோக படுத்தினாராம். கணவரும் காவல்துறையும் ட்ரைவரை ஆச்சர்யத்துடன் பார்த்து கொண்டிருந்தார்களாம். ஏஞ்சல் எங்கே போனார், யார் கூட்டி போனது, நான்கு மணி வரை என்ன நடந்தது என நான் அந்த டிரைவரிடம் கேட்கவில்லை   அதெல்லாம் உங்கள் கற்பனைக்கே விட்டு விடுகிறேன்.
அடுத்த நாள் வழக்கம் போல ஏஞ்சல் தன் கடைமையை செய்ய அலுவலகம் சென்றார். 

Tuesday, January 21, 2020

புற்றுநோய் கேரளா மூலிகை வைத்தியசாலை

நேற்று நண்பர் ஒருவரின் உறவினருக்கு புற்றுநோய் உள்ளது மருந்து வாங்க போக வேண்டும் என்றார். சரி என்று இருவரும் கேரளாவுக்கு கிளம்பினோம். கோவையில் இருந்து தடாகம் வழியில் சென்று ஆனைக்கட்டி சென்று அங்கிருந்து முக்காலி செல்ல வேண்டும்.. முக்காலியில் இருந்து நம் சிறியரக செடான் கார்கள் செல்ல முடியாது. ஜீப் வகைகள் வண்டியில் செல்வதே உத்தமம். மிக மோசமான வனதுறை சாலையில் போனால் இருக்கின்றது வள்ளியம்மாள் குருகுலம்.
பாதுகாக்கப்பட்ட வனபகுதியில் பிரம்மாண்ட கட்டிடங்களுடன் உள்ளது இந்த ஒற்றை மூலிகை வைத்தியசாலை. இது எப்படி சாத்தியம் அதுவும் கேரளத்தில் என்று சேட்டன்மார்களிடம் சம்சாரித்தால்.
பிரிட்டிஸ் அரசு வள்ளியம்மாள் என்கின்ற ஆதிகுடி இருளர் பெண்ணுக்கு 112ஏக்கரை பட்டயம் போட்டு தந்துள்ளார்கள். அரிய வகை மூலிகை வளர்க்க அன்று வந்த பிரிட்டிஸ் கவர்னர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சாகும் நிலையில் இருந்தவரை இருளர் பெண் வைத்திச்சிகள் சில கிழங்கு, மரபட்டை, வேர்களை பொடி செய்து கொடுக்க அவர் மீண்டு நீண்ட காலம் உயிர் வாழ்ந்திருக்கின்றார். அவர் பட்டயம் செய்து கொடுத்த உரிமையில் இவர்கள் வாழ்ந்து பயன்படுத்தி வருகின்றனர். மூன்று பரம்பரை ஆட்கள் இடங்கள் இங்கு உள்ளது. அவ்வகையில் வள்ளியம்மாள், பொன்னியம்மாள், லட்சுமியம்மாள் என மூவர் உள்ளனர். முக்கியமானவர் வள்ளியம்மாள் ரவீந்திரன் வைத்தியர்.
பெயரை கொடுத்து விட்டு வைத்தியரை பார்க்க காத்திருந்தால் நிறைய பேர் அமர்ந்திருந்தார்கள். அவர்களிடம் விசாரித்தால் மிகப்பெரிய ஆச்சர்யம்.
கும்பகோணத்தை சேர்ந்த ஒருவர் தஞ்சை மீனாட்சியில் கைவிடப்பட்டவர் மூன்று மாதம்தான் உங்கள் ஆயுள் என்று சொல்லப்பட்டவராம் எட்டு லட்சம் வரை செலவு செய்தவராம். சாகத்தானே போறோம் கடைசி முயற்சியாக இதை பார்ப்போம் என்று வந்தவர் பதினாறு மாதங்களாக வருகின்றேன் என்றார்.
இங்கு பெரும்பாலும் அலோபதி கைவிடப்பட்ட நிலையில் வருகின்றார்கள். பொள்ளாச்சியை சேர்ந்த முரளி என்பவர் சொல்கின்றார். ராமகிருஸ்ணாவுல பதினைந்து லட்சம் செலவு செஞ்சேனுங்க வீட்டை காட்டை வித்து பாத்தணுங்க கடைசில சாவு உனக்கு கன்பார்முடான்டானுக.. தென்னை மரத்து மாத்திரைய வாங்கி வச்சுட்டுத்தானுங்க இங்க வந்தேன்... இதை ஒரு மாசம் பாப்போம். சரியாகுலையா இருக்கற சொத்தை பொண்டாட்டி பேர்ல எழுதி வச்சுட்டு நாம செத்தரலாம்முன்னுதான் வந்தேன். இன்னிக்கு மூணு வருசம் ஆச்சுங்க..என்னோட நோய் குணமாயிருச்சு ஆனாலும் மருந்தை நிறுத்தலை இன்னும் பத்து வருசம் வாழ்ந்தா போதுங்க எம் பையனை கரையேத்திருவேன் என்று தன் மகனை கட்டியணைத்து கண்ணீர் விடுகின்றார்.
இப்படி பல பேரின் கதை சொல்ல...ஆச்சரியமாக உள்ளது. வைத்தியரிடம் கேட்ட போது இந்த வைத்தியம் முதல் ஸ்டேஜ்ல இருந்தால் 100%குணப் படுத்தி விடலாம். ஆனால் நம்பிக்கையிருப்பதில்லை... சுற்றிவிட்டுதான் இங்கு வருகின்றார்கள். நான்காவது ஸ்டேஜ்ஜில் 80%பேரை பிழைக்க வைத்திருக்கின்றேன்... அதற்கு மேல் இறைவன் கருணை என்றார்.
இது சாத்தியமா? உண்மையா? என்று அவநம்பிக்கையோடுதான் சென்றேன். அங்கு இருந்த மருந்து வாங்க வந்த 100பேர்களின் கதைகளை கேட்ட போது நம்பிக்கையுள்ளது.
யாராவது உங்களுக்கு தெரிந்தவர்கள் கை விடப்பட்ட நிலையில் இருந்தால் இங்கு அனுப்புங்கள் இன்னும் கொஞ்சம் காலம் வாழட்டும்.
Address :
VALLIYAMMAL GURUKULAM,
Tribal Traditional Ottamooli Cancer Treatment Center,
CHINDAKKI,
AGALI
MUKKALI,
ATTAPADY,
PALAKKAD-678581
Ph: 09946097562

பகிர்வு 
அமுதல்ஃவரை முகநூல் பக்கங்கள் 

Tuesday, December 31, 2019

மெல்பர்ன் உலாத்தல் அழகான வாழ்க்கை கதை

ட்விட்டரில் இருந்து கானா பிரபா

25 வருடங்களுக்கு முன் மெல்பர்னில் நான் வேலை பார்த்த எரிபொருள் நிரப்பு நிலையம். (அதன் படம் கீழே) 
அப்போது அதன் பெயர் Liberty Oil.
AVI என்ற இஸ்ரேலியர் தான் அதன் உரிமையாளர். 


திங்கள், புதன், வெள்ளி, சனிக்கிழமைகளில் இரவு எட்டு மணி முதல் காலை எட்டு மணி வரை வேலை பார்ப்பேன். பின்னர் வீட்டுக்கு வந்து குளித்து விட்டுப் பல்கலைக்கழகம் போக வேண்டும். இப்படியாக நான்கு ஆண்டுகள் தூக்கமில்லா இரவுகள் வேலையோடு கழிந்தது இங்கே தான்.

ஒரேயொரு பீட்சா போன்ற உணவுவகை (meat pie) மட்டும் தான் வயிறை நிரப்பும். தேநீர் குடிப்பதற்குக் கூட சரியான நேரமிருக்காது. வாடிக்கையாளர்கள் வந்து விடுவார்கள். தனியனாகத் தான் இந்த நிலையத்தைப் பார்த்துக்கொண்டேன். பேச்சு துணைக்கு என்று கூட  யாருமில்லை.

நான் இங்கே  பணியிலிருக்கும் போது கூட எதிர்த்திசையில் இருந்த எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இரண்டு முறை துப்பாக்கி முனையில் களவு போனது,

அந்தக் கடையில் வேலை செய்த சகோதரர்கள் கொள்ளையர் போன கையோடு எனக்கு அழைத்துப் பேசியதும், என் நெஞ்சம் படபடவென்று அடித்ததும் இப்பவும் நினைப்பிருக்கு.

கடவுள் புண்ணியத்தில் இங்கே வேலை பார்த்த அந்த நான்கு ஆண்டுகளும் இரவுக் கொள்ளையர்கள் யாரும் வரவில்லை

அதிகாலை இரண்டு மணிக்கு கண்ணைச் சுழற்றும். நித்திரை வரக்கூடாது என்பதற்காகவே வெளியில் அந்தக் கடும் குளிரில் நடுங்கிக் கொண்டே அனைத்து பெட்ரோல் பம்புகளையும் எண்ணெய் போக அழுத்தி அழுத்தித் துடைப்பேன்.

அதிகாலை ஐந்து மணிக்கு உள்ளே வந்து குளிர் பதன அறைக்குள் நின்று சோடாப் பாட்டில்களை அடுக்குவேன். பிறகு கடைக்குள் தரையைச் சுத்தம் செய்து நுரை கொண்டு கழுவித் துடைத்து விட்டு, தின்பண்டப் பெட்டிகளை அழகாக அடுக்கி வைப்பேன்.

வெளியிலே இருக்கும், பொது கழிவறையையும் அழுக்குப் போகக் கழுவி வைப்பேன். சில நேரம் மலக் கழிவுகள் வெளியே நிறைந்து கிடக்கும், மாதவிடாய் இரத்தம் ஊறிய கூடமாக இருக்கும். நீர் பாய்ச்சும் கருவியைக் கொண்டு கழுவி, மெல்லிய கையுறையை கைகளில் போட்டுக் கொண்டு அசுத்தம் போக முழுவதும் கழுவிப் பளீர் வெண்மை ஆக்கி விடுவேன்

இடைக்கிடை கார்ச் சத்தம் கேட்டால் போட்டது போட்டபடி போட்டு 
விட்டுக் கடைக்குள் போய்காசை வாங்கிப் பெட்டியில் போடுவேன்
பல சமயம் சில கார்க்காரர்கள் காசு கொடுக்காமல் ஓடி அநீதி செய்திருக்கிறார்கள்.

அந்த இளம் வயதில் எனக்கு இந்த வேலை போய் விடுமோ என்ற 
பயத்தில் என் சட்டைப்பையில் இருந்த காசைப் பணப் பெட்டியில் 
என்னை ஏமாற்றி ஓடிப்போன கார்க்காரர்களின்  கணக்காக வரவில் 
வைத்த சந்தர்ப்பங்கள் பல உண்டுஅதாவது எட்டு மணி நேர 
வேலையை இலவசமாகச் செய்து விட்டு  வருவேன்
இதெல்லாம் முதலாளிக்குத் தெரியாது.

பார்த்தீர்களா பிரபா எவ்வளவு அழகாகக் கடையைச் சுத்தம் செய்திருக்கிறார் 
நீங்களும் இருக்கிறீர்களே?” என்று என்னை பற்றி நான் அங்கு இல்லாத நேரம் கடையில் பணிபுரிந்த சக நண்பர்கள் முதலாளி சொன்னதாகச் 
சொல்லி என்னைத் திட்டியிருக்கிறார்கள். 

ஆனால் அந்தக் கஷ்டத்திலும் படித்து முடிக்க வேண்டும் என்ற 
வீறாப்போடு பல்கலைக்கழகக் கல்வியைத் தொடர்ந்து 
கற்று முடித்தேன்.

இன்று 21 வருடங்கள் கழித்து முதன் முறையாக அந்தப் 
பழைய நிலையம் இருந்த இடத்துக்குப் போய்உள்ளே 
சிறிது நேரம் நின்றேன்

புதுப் பெயர்புது உரிமையாளர்புது வேலையாட்கள் 
ஒன்றுக்கு மூன்றாக

ஏனோ அவர்களிடம் எதுவும் பேசத் தோன்றவில்லை.




 

நான் முன்னர் சென்ற அதே பேருந்திற்க்கு காத்திருந்து, அதில் அமர்ந்து கொண்டே இவற்றை அசை போடுகிறேன். #மெல்பர்ன்_உலாத்தல்

By @kanapraba



Saturday, December 14, 2019

இஞ்சி ஏலக்காய் டீ

இஞ்சி ஒரு சிறிய  துண்டையும், இரண்டு ஏலக்காயையும் நன்றாக பொடித்து  தண்ணீர் ஊற்றி அதன் சாறு முழுவதும் உள்ளே இறங்கும் படி ஐந்து நிமிடம் நன்றாக கொதிக்க வைத்து  பின்  சர்க்கரை சேர்த்து கொதிக்க வைத்து, அதன்பின்
 டீத்தூள் நுரை வரும் வரை கொதிக்க வைத்து கடைசியில்  பால் ஊற்றி அது பொங்கும் வரை அடுப்பில் வைத்து, பின் இறக்கி வடி கட்டினால் அட்டகாசமான தேநீர் கிடைக்கிறது.
அதுவும் இந்த மழை நேரத்தில் அற்புதம். முயற்சி செய்து பாருங்கள்