Wednesday, January 13, 2016

சில பிடித்த கவிதைகள்

யாருமற்ற பாதையில்  நெடுநிழல் துணை கொண்டு 
தலையில் கோணிப்பையுடன் தளர்வாக நடந்த பெரியவர்
முகத்தில்
ஆதித் தகப்பனின் சாயல்.
- ராமலக்ஷ்மி

-------------------------
மினரல் வாட்டர்
வைத்திருப்பவர்களிடம்
தாகத்துக்கு தண்ணீர்
கேட்க தயக்கமாக இருக்கிறது!
-மணிகண்ட பிரபு
-------------------------
 ஒரு கார்த்திகை இரவில்
அகல் விளக்குகளுக்கு நடுவில்
அவளை பார்த்ததில் இருந்து
அவளை காதலிக்கவே பயமாக இருக்கிறது
#தபுசங்கர்
-------------------------
 காலை மூடுபனி
கோவில் வாசலில்
இரண்டு ஜோடிசெருப்புகள்...
-ஆங்கில மொழி பெயர்ப்பு

 -------------------------
 நாயும் பிழைக்கும் இந்த பிழைப்பு
-பாரதி
-------------------------
 மூன்று நாளில் நீ கொண்ட அன்பு மாறுமெனில் அதன் பெயர் காதல் இல்லை.... பிராந்தி
-பாரதி

-------------------------

No comments:

Post a Comment