Tuesday, January 12, 2016

ட்விட்டரில் நான் கிறுக்கியவைகள் 4

தான் வெறுக்கப்படுவது தெரிந்தால் ஒரு பெண் பலவீனமடைகிறாள், ஆண் மேலும் பலமுள்ளவனாகிறான்
-------------------------

பறவையை கொஞ்சிக்கொண்டிருந்த சிறுமி எனை பார்த்ததும் வெக்கத்தை வழியவிடுகிறாள், நியாயமாய் நான்தான்  நாணவேண்டும்,ஒரு பறவையை கூட கொஞ்சதெரியாததற்கு
-------------------------

 செத்து வெகு நாட்கள் ஆன போதும்சிரிப்பு மறையவில்லை சுடுகாட்டில் கிடந்த மண்டை ஓட்டுக்கு
-------------------------

 அழுதுதான் தீர்க்க முடியும் என்ற சோகத்தில் நிற்பவர்களிடம், உங்கள் வார்த்தைகள் வேண்டாம்.....  
சாய தோள்களை கொடுங்கள்
-------------------------

 மிகவும் பிடித்தது கிடைத்தே ஆகவேண்டும் என்பதில்லை, கிடைக்க கூடும் என்ற நம்பிக்கையே போதுமானதாக இருக்கிறது மிச்சமிருக்கும் வாழ்கையை வாழ்வதற்கு
-------------------------

 மனதின் வார்த்தைகள் வெளியே கேட்குமெனில் பைத்தியத்திற்க்கும், நமக்கும் வேறுபாடே இருக்காது...

-------------------------

No comments:

Post a Comment