Saturday, October 20, 2018

பரியேறும் பெருமாள் சில கேள்விகள்

பரியேறும் பெருமாளை பார்த்துவிட்டு உடனடியாக சில்லறையை சிதற விட்டதற்கு மன்னிப்பு கோருகிறேன், அதில் வரும் மிக உணர்ச்சி மிகுந்த இரு சம்பவங்கள் எப்படி திரிக்கப்பட்டிருக்கிறது என்பதை நான் சொல்லவில்லை, ஐந்து வருடங்களுக்கு முன்பு விகடனில் தொடராக வந்த மறக்கவே நினைக்கிறேன் புத்தகத்தில் இருந்து மாரி செல்வராஜே சொல்லி இருக்கிறார். நீங்களும் படித்து தெரிந்து கொள்ளலாம். முதலில் அந்த காதல் உண்மை சம்பவம் அல்ல, பூங்குழலி என்ற தன் கல்லூரியில் படித்த ஜுனியர் பெண்ணுக்கு செய்த சிறு உதவிக்காக மாரியை தனது அக்காவின் திருமணத்திற்கு அழைத்திருக்கிறாள் பூங்குழலி. அண்ணா என்று சொல்லித்தான் பழகியும் வந்திருக்கிறார். திருமணத்திற்கு தனது நண்பருடன் சென்று மேடையில் நின்றிருந்த பூங்குழலியிடம் கையை காட்டி சைகை செய்திருக்கிறார்கள், அது பிடிக்காத அவர் தகப்பன், தனியே அழைத்து இதை கண்டித்திருக்கிறார், இதைத்தான் ரூமில் வைத்து அடித்து ரத்தம் வர அடித்து தனது தெய்வீக காதலை இழந்ததாக உணர்ச்சிகரமாக சொல்லி இருக்கிறார். இரண்டாவது முக்கியமான பலரை அழ வைத்த அவர் தகப்பனின் துணிகளை அவிழ்த்தெறியும் இடம். முன்பு நிஜ சம்பவமாக அவரே எழுதியது என்னவெனில், இவருடைய தகப்பன் பெண் வேடமிட்டு சம்படி எனும் நடமாடும் கலைஞர், ஒருமுறை ஆடும்போது அவர் கால் சுளுக்கி கொண்டதால் ஓரமாக அமர்ந்திருக்கிறார், மூன்று விடலைகள் அவரை பெண் என்று நினைத்து தொந்தரவு தர முயன்றிருக்கிறார்கள், அவர் அந்த விடலைகளை தடியால் அடித்து ஊர் மக்களிடம் ஒப்படைத்திருக்கிறார். அவர்களும் இளைஞர்களை பிடித்து ஆட்டம் நடந்த இடத்திலேயே முட்டி போட வைத்து தண்டனை கொடுத்திருக்கிறார்கள். இந்த சம்பவத்தை எப்படி திரித்தார் என்பதை திரையில் கண்டிருப்பீர்கள். ஜாதி என்பது சம்பாதிக்க உதவும் போது எதுவும் தவறில்லை என்று நினைத்திருப்பாரோ இயக்குனர்? எனது தந்தை மிக மோசமான நிலையில் விபத்துக்கு உள்ளான போது அவருக்கு ரத்தம் கொடுத்தது என் நண்பர்கள் தான் அன்றிலிருந்தே எனக்கு ஜாதி மதங்களில் மேல் நம்பிக்கை இல்லை. ஆனால் கதை எழுதிய ஐந்து வருடங்களில் ஒரு சம்பவம் வெறும் காசுக்காக, சுய ஜாதியின் தூண்டுதலுடன் எப்படியெல்லாம் திரிக்கப்படுகிறது என்பது நிச்சயம் ஏற்று கொள்ள இயலாதது

No comments:

Post a Comment