Tuesday, September 13, 2016

தேசாந்திரி புத்தக விமர்சனம்

உலகம் எனக்கு என் வீட்டு  ஜன்னல் வழியாகத்தான் ஆரம்பமானது என தொடங்கும் இப்புத்தகம், எஸ் ராமகிருஷ்ணனின் முடிவில்லாத பயணங்கள் வழியாக, தெளிந்த அருவி போல (கவனிக்க, நீர்வீழ்ச்சி அல்ல) சென்று கொண்டே இருக்கிறது.

ஏழு வயதில் ஆரம்பமாகும் ஜன்னல் வழி பார்வை பயணம், ஏறக்குறைய இந்தியாவின் முக்கியமான பகுதிகள் சென்று சேர்க்கிறது. கன்னியாகுமரியின்  கடற்கரையில் கடலை புரிந்து கொள்ளும் அவர், வெயிலோடு கொண்ட உறவுகள் பற்றியும் சிலாகிக்கிறார்.

சாரநாத்தின் பௌத்த ஸ்தலதில் புகை போன்ற பனியை, பனிக்குள் நடக்கும் பிரார்த்தனைகளை, அம்மக்களின் பரவசத்தை, அமைதியை, கண்களால் விழுங்க முடியாத ஸ்தூபியை, சிறிய புத்தர் சிலை விற்கும் சிறுமியை காட்சி பூர்வமாகவே கண் முன்நிறுத்தும் கலை எஸ் ரா விற்கு இயல்பாகவே இருக்கிறது.

 கதை வழியாக மட்டுமே கேட்டு, மறந்தும் போய் விட்ட நல்லதங்காளை, அவள் வாழ்ந்த வாழ்க்கையை, அந்த கிணறை மறக்க முடியாதபடி படைத்திருக்கிறார்.

இந்தியாவின் சிரபுஞ்சிக்கு அடுத்ததாக மழை பொழியும் இடமான லோனாவாலாவின் அறிமுகத்தை அவர் எழுத்தின் வடிவிலேயே தருகிறேன்

"நான் அங்கு சென்று இறங்கிய போதே சாரல், சாலைகள் ஈரத்தில் ஊறி இருந்தன, கட்டடங்கள், வாகனங்கள், தனியே வாலாட்டியபடி நிற்கும் குதிரைகள் என யாவிலும் மழையின் சுவடுகள்...."

"மழையோடு நட்பு கொள்ளாதவர்கள் எவர் இருக்க கூடும் சொல்லுங்கள்?"

இன்னொருமுறை மணியாச்சி ரயில் நிலையம் வழியே நீங்கள் பயணித்தீர்கள் எனில் இந்திய சுதந்திர போரின் முதல் வெடிச்சப்தம் நடந்த பகுதியை நீங்கள் உணர கூடும்.

சென்னையில் உள்ள புனித தாமஸ் மலைக்கும், எவரெஸ்ட்க்கும் என்ன தொடர்பு? 40 வருடங்களாக தொடர்ந்த பணி என்ன? அவற்றால் நிகழ்ந்த வரலாற்று நிகழ்வுகள் என்ன என்பதை படித்து முடித்த பிரமிப்பு இன்னும் அடங்கவே இல்லை.

சங்க இலக்கியம் போற்றி புகழ்ந்த காந்தள் மலர்,  குக்குருவான் பறவை, சாரலின் நெருக்கம், அருவிகளிடம் எப்படி நம்மை ஒப்படைப்பது, கஜிராகோவின் அலைந்து கொண்டே இருக்கும் குளிர், சத்னாவின் அந்த சிறிய வீடு, குஜராத்தின் சபர்மதி ஆசிரமம், கொடைக்கானலில் சாலையோரம் வாலாட்டியபடி நடக்கும் குதிரைகள், சென்னையின் உண்மையான அடையாளம், தவளைகளின் திருமணம் என சிலாகித்து சொல்லிக்கொண்டே போகலாம். வாசகனை கை பிடித்து, தான் உணர்ந்த அழகியலை அப்படியே நூலிருக்குள் கொண்டு வந்து சேர்த்திருக்கிறார் எஸ் ரா.,

 பகுதியின் ஆரம்பத்தில் அழகான கவிதைகள் அதற்க்கு அழகு சேர்க்கின்றன, எடுத்துக்காட்டாக "மழையின் பெரிய புத்தகத்தை யார் பிரித்து படித்து கொண்டிருக்கிறார்கள்,  படிக்கட்டில் நீர் வழிந்து கொண்டிருக்கிறது" என்ற தேவ தச்சன் கவிதையில் ஆரம்பித்து மழையின் முழு சுகத்தை அக் கட்டுரை கொண்டு நிரப்புகிறார், முழுதும் நனைந்து கரைய வேண்டி இருக்கிறது.

மிக பெரிய வெல்ல கட்டியை இழுத்து வந்து இப்புத்தகத்தில் நிறைத்து விட்டீர்கள் எஸ் ரா... மிகுந்த நன்றி...

கட்டாயம் வாசிக்க வேண்டிய சிறந்த புத்தகம் தேசாந்திரி  
       

இந்த விமர்சனத்திற்கு எஸ் ராவின் பதில் மின் அஞ்சல்... மகிழ்ச்சியும், நன்றிகளும்... 




Monday, September 12, 2016

ஜெயமோகனின் காடு

யானை டாக்டர், ஊமை செந்நாய், இரவு என்று இயற்கை சார் கதைகள் எனில் எங்கிருந்துதான் இந்த ஜெமோவிற்கு இத்தனை அழகியல் வந்து விடுகிறதோ.  ஆனால் அவை அத்தனையையும் தூக்கி சாப்பிட்டு விட்டது காடு.


படித்து கொண்டிருக்கும் வாசகன், சர்வ நிச்சயமாய் மலை நோக்கிய சுற்றுலாவை திட்டமிட ஆரம்பித்து, அதை எப்படி ரசிக்க வேண்டும் என சரியான விதத்தில் கணக்கிட ஆரம்பிப்பார், இதுவே நாவலின் வெற்றி,

கிரிதரன் பார்வையில் நாவல் விரிந்தாலும், நாயகன் என்னவோ குட்டப்பன் தான், காட்டின் அத்தனை மாற்றங்களையும், விதிகளையும், செய்ய கூடாதவைகளையும் அவன் குரல் வழியாகவே முழுதும் உணர முடிகிறது.   குருசு, ராசப்பன், சினேகம்மை, ரெஜினாவை விட அந்த தேவாங்கும், அயனி மரமும் முக்கியத்துவம் பெற்று விடுகிறது. மலையாளம் கலந்த தமிழ், படிப்பவர்களை அதிகம் சிரமம் கொள்ள செய்யாமல் படிப்பை தொடர செய்ததில் ஜெமோவின் கையாளல் திறமை அருமை.

மிளாவை என்னை போல பலருக்கும் அறிமுகம்  செய்திருக்கிறார் ஜெமோ, கீறக்காதன் வழியாக ஒற்றை யானையின் பலத்தை, அதன் தவிப்பை, இயல்பை, அது கிரிதரனை உதவி கேட்டு யாசிக்கையில் பரிதாபத்தையும் கொள்ள செய்து விடுகிறது. யானை என்றால் பிரம்மாண்டம்  மட்டுமே என்ற மாயை உடைபடுகிறது.    

நீலியை காமக்கார, வீரியம் மிக்க, ஒரு நகரையே அழிக்க செய்யும் கொடூர காமப் பேயாய் வழிவழியாய் வரும் கதை மூலம்  அறிமுகம் செய்து விட்டு, அதே நினைவுடன் வாசகனை தொடர செய்து,

பின் அவளை மலையத்தியாய் மாற்றி, கிரியின் மூலம் தகிக்கும் அவள் நினைவுகளை சொல்வதிலும், அவளின் அழகை முழுதும் விவரித்து தேவதையாக மாற்றி விட்டத்திலும் ஜெமோ இருவேறு கோணங்களிலும் ஆளுமை காட்டியிருக்கிறார்.

காமம் நாவல் நெடுக வந்தாலும், அதில் வாசகனை இளைப்பாற விடாமல், பட்டென திசை திருப்பி, அதன் உண்மை தன்மையை மட்டுமே புரிந்து கொள்ள வரிகள் அமைத்திருப்பது பெரும் தனித்துவம்.

காலத்தின் மாற்றங்கள் அந்த கதை பாத்திரங்கள் வழியாக உணர்த்தபட்டிருக்கிறது.

அய்யர் பாத்திரம் நொடி நொடியாய் கணங்களை அனுபவித்து வாழ்ந்த மனிதரை பற்றியது. காட்டின் மீது அதிக மோகம் கொண்ட ஒருவர் எடுத்த அழகிய முடிவை பற்றிய வாழ்க்கைப்  பயணம்.  அதை ஒரு தனி நாவல் போலவே எழுதலாம்.

ஏதாவது ஒரு பகுதியில் அவர் உணர்ந்த நெருப்பை வாசகனுக்கு பற்ற வைத்து விடுகிறார் ஜெமோ. நான் அதை கடைசி நாற்பது பக்கங்களில் உணர்ந்தேன்.

சாரலும், பெருமழையும், வன அழகும், அயனி மரமும், நீலியும், உயர மலைகளும், குறுக்கிடும் ஆறுகளும், வெள்ளி நீர் வீழ்ச்சிகளும், மலையத்தியின் வீடும், கடும் காப்பி சுவையும், "மாங்காயை பிளந்து மிளகு உப்பு வைத்து அடுப்பில் கருக்கி கொதிக்கும் மென் குழம்பை இலையில் பிதுக்கி தருகிறான் குட்டப்பன்" என்ற காட்சி சுவை கொண்ட அழகியலுக்காகவும் மீண்டும் மீண்டும் படிக்கலாம்.

காட்டை பற்றிய முழு காட்சி அழகுடன், அறத்தை மீறாத வசனங்களுடனும், காட்டின் இரகசியங்களையும், அதை எப்படி ரசிக்க வேண்டும் என்ற பாடங்களையும் நடத்தும் ஒரு சிறப்பான திரைக்கதை ஜெமோவிடம் எப்போதும் தயாராகவே இருக்கும்,

ஏதாவது நல்ல இயக்குனரும், சரியான ஒளிப்பதிவாளரும் அதை படமாக மாற்றினால் அது நிச்சயம் தமிழின் காலத்தை வெல்லும் படைப்பாய் அமையும்.

பெருங்களியாட்டம் இந்த காடு. நிச்சயம் வாசிக்க வேண்டிய ஒரு நல்ல படைப்பு.


காடு -ஒரு பார்வை என தன் வலைதளத்தில் இதை சுட்டி காட்டி இருந்த ஜெமோ அவர்களுக்கு மிக்க நன்றி .

Saturday, September 10, 2016

OLA / UBER நிறுவனத்துடன் இணையும்போது உங்களால் எவ்வளவு சம்பாதிக்க முடியும்?

இந்த கார் நிறுவனங்கள் தங்களுடன் உங்கள் காரை இணைத்து கொள்ளும் போது 1,00,000 ரூபாய் மாதம் சம்பாதிக்கலாம் என்று சொல்கிறார்கள் உண்மையா?

சற்று விரிவாக பார்ப்போம்....

தினமும் இந்த நிறுவனங்களுக்கு கார்கள் புதிது புதிதாய் இணைந்த வண்ணம் இருக்கின்றன, UBER தனது வாடிக்கையாளர்களை உருவாக்க அல்லது தக்க வைக்க விலையை OLA கார்களின் வாடகை விலையை விட குறைத்து போட்டிக்கு நிற்கிறது,

கார்களின் எண்ணிக்கை அதிகமாக அதிகமாக வாடகை குறைவாகவே வருகிறது என கார்களின் டிரைவர்கள் சொல்வதை நீங்கள் கேட்டு அறியலாம். அடுத்தது நீங்களே ஓனர் எனும்போது ஓரளவு பணம் கிடைக்கும், இருந்தாலும் அவர்கள் குறிப்பிடும் பெரிய தொகை அல்ல.

அதற்க்கு உங்கள் கார் நல்ல மைலேஜ் கொடுக்க வேண்டும், இரண்டு டிரைவர் வைத்து 24 மணி நேரமும் ஓட்ட வேண்டும், வாடிக்கையாளர்களிடம் நல்ல முறையில் பழக வேண்டும், map, navigation பற்றிய போதுமான அறிவு இருக்க வேண்டும், கவனமாக காரை கையாள வேண்டும், மிக முக்கியமாக டீசல் திருடாமல் இருக்க வேண்டும்.

இவை இருந்தால் ஓரளவு வருமானம் வரும் என்றாலும், செலவுகளை கணக்கில் எடுத்து கொண்டால், நீங்களே ஓனர் மற்றும் டிரைவர் என்றால் சம்பளம் மிச்சம், நல்ல டிரைவர் எனில் மாதம் 15000 தர வேண்டும், 10சதவீத கமிசன் நிறுவனங்களுக்கு போகும், டீசல், பராமரிப்பு செலவு, எதிபாராத விபத்து செலவு, காரின் emi, போன்றவை இருக்கும், அதிக பட்சம் மூன்று வருடங்களுக்கு புதிய வாகனம் எனில் ஓட்ட முடியும், அதற்க்கு பின் நிச்சயம் புது கார் வாங்க வேண்டி வரும். இப்போது வியாபார வாகனங்களுக்கான அரசின் கெடுபிடிகளும் அதிகம், வெளி மாநில பயணம் எனில் பர்மிட் எடுத்திருக்க வேண்டும்.

உங்களுக்கு தெரிந்திருக்கும் கடந்த மாதம் இவர்கள் தங்களது இன்சென்ட்டிவ், போனஸ் சரிவர கிடைப்பதில்லை எனவும், மற்ற பல பிரச்சனைகளை முன் வைத்து போராடினார்கள் எனவும், நல்ல இலாபம் எனில் இது போன்ற சம்பவங்கள் இருக்காதல்லவா?

எனது போனில் இரண்டு appகளுமே உண்டு, நான் அதிக முறை பயணம் செய்பவன், "கடந்த ஆறு மாதத்தில், இப்போது எப்படி உணர்கிறீர்கள்?" என்று அவர்களிடம் கேட்ட போது, ஆச்சர்யமான விஷயம் என்னவெனில் ஒருவர் கூட இலாபம் என்றோ  திருப்தி என்றோ சொல்லவில்லை, இவர்களின் தொழில் போட்டியினால் நாளுக்கு நாள் நிலைமை மோசமாகி கொண்டே வருகிறது  என்பதே. அவர்கள் பதில். OLA மற்றும் UBER வாடிக்கையாளர்களை திருப்தி செய்கிறது, தங்களை நம்பி முதலீடு செய்யும் பார்ட்னர்களை அல்ல என்பதே இதன் தெளிவு.

Monday, August 22, 2016

வண்ணதாசன்

ஞாபகமிருக்கிறதா?
பத்து இருபது நாட்களுக்கு முன்பு சென்னையிலே மழை பெய்தது.
மழைக்கு என்ன அது எல்லா ஊரிலும்தான் பெய்யும்.
எல்லோருக்காகவும் பெய்யும்.
அன்று சென்னையில் மழை பெய்யது அவ்வளவுதான்.
மழை தான் பெய்கிற நேரத்தை அழகாகத் தானே தேர்ந்தெடுத்துக் கொள்கிறது.
சிலசமயம் இரவு முழுவதும் விடியவிடிய.
சிலசமயம் விடியும்போது அதிகாலையில்.
நான் பார்த்த சென்னை மழை மாலையில் பெய்தது.
இரவுக்கு முன்பு வருகிற மாலையில்.
ஒரு மோசமான கோடைகாலத்திற்கு பின்பு பெய்த முதல் மழையது. தொடர்ந்து கனமாக பெய்து கொண்டிருந்தது.
நான் வாசல் பக்கம் வந்து மழை பார்த்துக்கொண்டிருந்தேன்.
மழையைப் பார்க்கவும் செய்யலாம்,
கேட்கவும் செய்யலாம்.
உங்களுக்கு பிடித்த நீர்வண்ண ஓவியத்தை அது உங்களுக்கு பார்க்கத்தரும். உங்களுக்கு பிடித்த நீராலான ஒரு பாடலை அது இசைத்து பெய்யும். உங்களை ஒரு ஈர நடனத்திற்கு மழை இடைவிடாமல் அழைக்கும்.
மழையின் திருவிழாவில் குழந்தைகள் உடனடியாகவும், நாம் சற்று தாமதமாகவும் தொலைந்து போவோம்.
ஆனால், அன்று என்னைத் தவிர யாருமே தொலையக் காணோம்.
ஒரு வாடகைக்கார் ஓட்டுனர் புகைபிடித்தபடி நிற்கிறார்.
ஒரு தையல்காரர் வாகை மரத்தின் கீழ் தன் தையல் இயந்திரத்தை மூடி அவர் மட்டும் நனைந்து கொண்டிருக்கிறார்.
வேறு யாரும் தெருவிலே இல்லை.
நான் எதிர்பார்த்தது மழையில் நனைகிற குழந்தைகளை,
வீட்டிற்குள்ளிலிருந்து தெருவிற்கு ஓடிவந்து கைகளை உயர்த்தி மழைநடனம் ஆடுகிற குழந்தைகளை.
அந்த நடனத்தில் மழை எப்போது குழந்தைகள் ஆகிறது என்றும்,
குழந்தைகள் எப்போது மழையாகிறார்கள் என்றும் நமக்குத் தெரியாது. ஆனால், ஆகிவிடுவார்கள்.
அன்று மழை மட்டுமே பெய்து கொண்டிருந்தது.
ஒரு தனித்த பூனைக்குட்டி போல மழை தன் வருத்தமான குரலில் குழந்தைகளையெல்லாம் கூப்பிட்டுக் கொண்டேயிருந்தது.
தானியங்கள் இல்லாத இடத்திற்கு குருவிகள் வருவதில்லை.
குழந்தைகள் நனையாத தெருவிற்கு மழை வராமல் போகும் சாத்தியங்களும் உண்டு.
ஒரே ஒரு காகதக்கப்பல் விடுவதற்காகவும், அது சற்றுதூரம் போய் சாய்ந்து விழுவதற்காகவுமாவது மழைத்தண்ணீர் தெருவில் ஓட வேண்டும்.
குழந்தைகளை மழை பார்க்க சொல்லுங்கள்.
நீங்கள் அப்படி சொல்லவே வேண்டாம்.
எப்போதும்போல மழை பெய்யும் போதும் நீங்கள் அசையாமல் அமர்ந்து பார்க்கிற தொலைக்காட்சியை அணைத்துவிட்டு உங்கள் வாசலுக்கு அல்லது உங்கள் அடுக்ககங்களின் விளிம்புகளுக்கு எழுந்துவந்து நில்லுங்கள். குழந்தைகளும் உங்களோடு வந்து நின்று மழைபார்க்கத் துவங்கிவிடுவார்கள். உங்கள் கைகளை நீட்டி மழைத்தாரையை ஏந்துங்கள்.
ஒரு தலைவாழையின் பக்கக்கன்றுகள் போல உங்கள் குழந்தைகளும் தன்னுடைய கைகளை நீட்டி மழையை ஏந்தும்.
இதுவரையில் வந்த பண்டிகைகளில் கொளுத்திய மத்தாப்புகளைவிடவும் கூடுதலான அழகுடன் அந்த பிஞ்சு உள்ளங்கைகளில் மழைத்துளி விழுந்து தெறித்து பிஞ்சு வானவில்களை உண்டாக்கும்.
மழை பாருங்கள்,
மழையும் உங்களைப் பார்க்க விரும்புகிறது.
– வண்ணதாசன்
பிறந்த நாள் வாழ்த்துக்கள் ஐயா.

முகநூலில் ஞாபகம் கொண்ட புஹாரி ராஜாவுக்கு நன்றி.

Tuesday, August 9, 2016

சார்லி அற்புதமான ஒரு மலையாள திரைப்படம்.

இயற்கையை, அழகை, பயணங்களை, புத்தகங்களை, வித்யாசமான கதைகளை நேசிப்பவரா நீங்கள் அப்படியெனில் உங்களுக்கு ஒரு நல்ல படம் ரசித்து பார்க்கும் வாய்ப்பை சார்லி கொடுக்கும்.

2015ம் ஆண்டு மார்டின் இயக்கத்தில் வெளிவந்த துல்கர் சல்மான், பார்வதி, அபர்ணா கோபிநாத், கல்பனா, சுபின் நடித்த அட்டகாசமான திரைப்படம்.
வண்ணங்கள் நிறைந்த கண்ணுக்கு முழு திருப்தி தரும் படம் இது.
படம் முழுக்க பயணம், வண்ணங்கள் மற்றும் கொண்டாட்டங்கள் தான், துல்கர் கதா பாத்திரத்தை ஒரே வரியில் சொல்வதென்றால், மற்றவர்களை  சந்தோஷ படுத்தி பார்த்து விட்டு காணாமல் போகும் மனிதன், அவனை தேடி வரும் பெண் பார்வதி, அபர்ணா தற்கொலை செய்து கொள்ள போகும் டாக்டர், கல்பனா ஒரு எயிட்ஸ் நோயாளி. படத்தில் வரும் சிறிய சிறிய பாத்திரங்கள் கூட மனதை தொட்டு செல்கின்றன.
 ஒரு சிறிய அறையில் எத்தனை வண்ணமயமான பொருட்கள், கலை இயக்குனரின் உழைப்பு மிக அபாரமானது. பாடல்கள் கதையோடு பொருந்தி வருவதால் மிக மிக அழகாகவே இருக்கின்றன. கண்கள் நனைய வைக்கும் காட்சிகள், இதயம் தொடும் உணர்வுகள், கண்ணுக்கு இனிமையான நகரங்கள், பாலைவனங்கள், ஆறுகள், மலைகள், குளிர் பிரதேசங்கள், புது வருட கொண்டாட்டங்கள், கடைசியில் தசரா காட்சிகள், விருந்தோம்பல்கள், விதவிதமான வாகனங்கள், அதிலும் அந்த ஸ்கூட்டர் காட்சிகள்... சொல்லிக்கொண்டே போகலாம் போல ஒரு நினைவில் தங்கும் படம் இது.
தமிழில் இப்படி எப்போது சிந்திப்பார்கள் என்ற பொறாமை வருகிறது. இப்போதைக்கு நமது மொழியில் இது போல் சாத்தியமே இல்லை. காட்சி அமைப்பிலும், கேமரா கோணங்களிலும், மணிரத்னம் படத்திருக்கு அடுத்து ரசித்து பார்த்த படம் இதுதான். இன்னும் இரண்டு மூன்று முறை பார்க்கும் எண்ணம் உள்ளது    
மிக திருப்தி தந்த படங்களுள் இதுவும் ஒன்று.                            
 நிச்சயம் பாருங்கள், இது உங்களை கண்டிப்பாக ஏமாற்றாது.

Monday, August 8, 2016

வரலட்சுமி பூஜை சிறப்பாக செய்ய வழிமுறைகள்.

சகல வளங்களையும் தரும் இந்த வரலட்சுமி விரத பூஜையை, ஆவணி மாத பௌர்ணமிக்கு முன்வரும் வெள்ளிக்கிழமை அன்று செய்ய வேண்டும். முக்கியமாகச் செய்ய வேண்டியவர்கள் பெண்கள்! சுமங்கலிகள், தாலி பாக்கியத்துக்காகவும், சுபிட்சம், சௌபாக்கியம் போன்றவற்றுக்காகவும் இந்த விரதத்தை மேற்கொள்ள வேண்டும்.

கேட்கும் வரங்களைத் தரும் லட்சுமிதேவியை பூஜித்தல் இதன் சிறப்பு . திருமணமான பெண்கள், தங்கள் திருமணத்தை அடுத்துவரும் வரலட்சுமி பூஜையிலிருந்து இதை ஒவ்வொரு வருடமும் செய்யவேண்டும். வரலட்சுமி விரதத்தின் போது வீட்டுக்கு விலக்காக இருந்தால் அடுத்துவரும் வெள்ளிக்கிழமை இந்த பூஜையைச் செய்யலாம். இதைச் செய்யும்போது, சிறு பெண்களும் உடனிருந்து சரடைக் கட்டிக் கொள்ளலாம். மறுநாள் அம்மனுக்கு ஆரத்தி எடுத்த பின்னர் கலசத்தை அரிசி வைத்திருக்கும் பானையில் வைக்கவேண்டும்.

எல்லோராலும் மிக விரிவாகச் செய்ய இயலாவிட்டாலும், ஈடுபாட்டோ டு தெரிந்த பாடல்களைப் பாடி, மகாலட்சுமி அஷ்டோ த்திரம் சொல்லி, பூக்களால் அர்ச்சனை செய்து, நிவேதனம் செய்து, நோன்பு சரடை கையில் கட்டி நிவேதனத்தை எல்லோருக்கும் கொடுத்து, வயதான சுமங்கலிப் பெண்களை வணங்கி தானங்கள் செய்து இந்த விரத பூஜையை நிறைவு செய்யலாம்.

கொஞ்சம் சாஸ்திரோக்தமாக விரதமிருந்து பூஜையைச் செய்ய விரும்பினால், விக்னேஸ்வர பூஜை தொடங்கி, சங்கல்பம், கலச பூஜை, பிராணப்ரதிஷ்டை, தியானம், ஷோடசோபசாரம், அங்க பூஜை, லட்சுமி அஷ்டோ த்ரம், தோரக்ரந்தி பூஜை, பிரார்த்தனை, ஆரத்தி என்று விரிவாகச் செய்ய வேண்டும்.



பூஜைக்குத் தேவையானவை :

 மஞ்சள் பொடி (பிள்ளையார் பிடிக்க), நுனிவாழை இலை, அரிசி, தேங்காய், எலுமிச்சம்பழம், குங்குமம், சந்தனம், புஷ்ப வகைகள், வெற்றிலை, பாக்கு, பழம், கற்பூரம், ஊதுபத்தி, சாம்பிராணி, அட்சதை, வஸ்திரம், மஞ்சள் சரடுகள், பஞ்சாமிர்தம், குத்துவிளக்கு, திரிநூல், நல்லெண்ணெய், தீப்பெட்டி, தாம்பாளம், பஞ்சபாத்ரம், உத்தரிணி, கிண்ணம், கற்பூரத் தட்டு, தூபக்கால், தீபக்கால், மணி ஆகியவை.



நிவேதனப் பொருள்கள்:

பொங்கல், பாயசம், அப்பம், வடை, கொழுக்கட்டை, லட்டு, தயிர், பசும்பால், நெய், தேன், கற்கண்டு.



பழ வகைகள்:

ஆரஞ்சு, மாதுளை, விளாம்பழம், மாம்பழம், வாழை, திராட்சை...



பூஜைக்கான முன்னேற்பாடுகள்:

வீட்டின் கிழக்கு திசையில் ஈசான்ய மூலையில், பூஜைக்கான இடத்தை அமைத்து, நன்றாக மெழுகி, கோலமிட்டு, மண்டபம் அமைத்து, அலங்கரிக்கவும். மண்டபத்தின் கீழ் நுனி வாழை இலையில் நெல்லைப் பரப்பி, அதன் மீது ஒரு தட்டில் அரிசியை வைக்க வேண்டும். அதன் மேல் கலச கும்பத்தை வைக்க வேண்டும். அரிசி, தங்கம், ரத்தினம் ஆகியவற்றை கும்பத்தில் நிரப்பவும் (தீர்த்தத்தையும் நிரப்பலாம்). மேலே மாவிலைக் கொத்தும் தேங்காயும் வைத்து அலங்கரித்து, புதிய வஸ்திரம் சாற்றி, தங்கம் அல்லது வெள்ளியால் செய்யப்பட்ட நான்கு கரங்கள் கொண்ட மகாலட்சுமியின் பிரதிமை பிம்பத்தை (முக பிம்பத்தையும் வைக்கலாம்) மேலே வைத்து பூக்கள் சூட்டி அலங்கரிக்கவும்.

(சில இடங்களில் வீட்டின் பூஜை அறை ஒட்டிய சுவரில் வெள்ளை அடித்து அம்மனின் திருவுருவத்தை எழுதி ஆவாஹணம் செய்கிறார்கள். பூஜைக்காக வைக்கப்படும் கலசத்தில் காதோலை, கருமணி, எலுமிச்சம்பழம் முதலியவையும் போடப்படுகிறது.)

பூஜையின் முடிவில் மஞ்சள் கயிறை(சரடு) கையில் கட்டிக் கொள்கிறார்கள். மஞ்சள் கயிறு மங்கலத்தின் அறிகுறி. அஷ்ட லட்சுமிகளுடன் வரலட்சுமியையும் சேர்த்து ஒன்பது லட்சுமிகள் என்று சாஸ்திரம் சொல்கிறது. எனவே, ஒன்பது நூல் இழைகளால் ஆன, ஒன்பது முடிச்சுகள் போடப்பட்ட நோன்புக் கயிறை (சரடை) பூஜையில் வைக்க வேண்டும்.

விரதம் மேற்கொள்ளும் வெள்ளிக்கிழமை காலை 10.30க்கு முன் & ராகு காலத்துக்கு முன் (சிலர் மாலை வேளையிலும் செய்வர்) ஒரு தாம்பாளத்தில் அரிசி பரப்பி, அதன் மேல் கலசம் வைத்து, பழம் வெற்றிலை பாக்கு நிவேதனம் வைத்து, வாசலின் உள் நிலைப் படி அருகே நின்று கற்பூரம் காட்டி, ஆரத்தி எடுத்து மகாலட்சுமித் தாயை வீட்டுக்கு அழைத்து வருவதாக பாவனை செய்து, பயபக்தியுடனும் அழைத்து வந்து, அலங்கரிக்கப்பட்ட மண்டபத்தில் உள்ள கலசத்தில் வைத்திருக்கும் மகாலட்சுமி பிரதிமை பிம்பத்தில் இருந்து விரத பூஜையை ஏற்று அருள் புரியுமாறு மகாலட்சுமியை வேண்டிக் கொண்டு, ஆவாஹணம் செய்ய வேண்டும். அப்போது, மங்களகரமான தோத்திரங்களைச் சொல்லி, பாடல்களைப் பாட வேண்டும்.

பூஜைக்குத் தேவையானவற்றை அருகில் வைத்துக்கொண்டு பூஜையைத் தொடங்கவும். பஞ்சாங்கம் பார்த்து, நாள், திதி, வருடம், பட்சம், மாதம் ஆகியவற்றை அறிந்து குறித்துக் கொள்ளவும்.

மேற்கொள்ளப்படும் விரத பூஜை எந்தவித இடையூறுகளும் இல்லாமல் நன்கு நடைபெற வேண்டும் என்பதற்காக, விக்னங்களைக் களையும் விநாயகரை பூஜித்து, பிறகு வரலட்சுமி பூஜையைத் தொடங்க வேண்டும்.



விக்னேஸ்வர பூஜை
உத்தரணியில் தீர்த்தம் எடுத்து, வலது உள்ளங்கையில் விட்டுக் கொண்டு, ஓம் அச்சுதாய நம: / ஓம் அனந்தாய நம: / ஓம் கோவிந்தாய நம: என்று சொல்லி, மூன்றுமுறை உட்கொள்ள வேண்டும். இது ஆசமனம்.

கையில் அட்சதை, புஷ்பம் எடுத்துக் கொண்டு, சங்கல்பம் செய்யவும்.

சுக்லாம் பரதரம் விஷ்ணும் சசிவர்ணம் சதுர்புஜம்|

ப்ரசன்ன வதனம் த்யாயேத் ஸர்வ விக்னோப சாந்தயே||

மமோபாத்த ஸமஸ்த துரித க்ஷயத்வாரா ஸ்ரீ பரமேஸ்வர ப்ரீத்யர்த்தம் கரிஷ்யமாணஸ்ய கர்மண: நிர்விக்னேன பரிஸமாப்த்யர்த்தம் ஆதௌ ஸ்ரீ

விக்னேஸ்வர பூஜாம் கரிஷ்யே||

- என்று சொல்லி, அட்சதை, புஷ்பத்தை முன்னால் சேர்க்கவும். விக்னேஸ்வரரை எழுந்தருளச் செய்யும் ஆசனத்தையும் மணியையும் பிரார்த்தனை செய்து புஷ்பத்தை சமர்ப்பிக்கவும். மணி அடிக்கவும். பின், பிடித்து வைத்த மஞ்சள் பிள்ளையாரை, விக்னேஸ்வரராக பாவனை செய்து, அதில் விக்னேஸ்வரர் எழுந்தருள பிரார்த்தனை செய்யவேண்டும்.

அஸ்மின் ஹரித்ரா பிம்பே ஸ்ரீ விக்னேஸ்வரம் த்யாயாமி / ஸ்ரீ மஹாகணபதிம் ஆவாஹயாமி & என்று சொல்லி, புஷ்பத்தை மஞ்சள் பிள்ளையாரிடம் சேர்ப்பிக்கவும்.

 இனி ஒவ்வொரு முறையும் ஸ்ரீ மஹாகணபதயே நம: என்று சொல்லி, கீழ்க்காணும் மந்திரம் சொல்லி அந்தந்த செயல்களைச் செய்ய வேண்டும்.

ஓம் ஸ்ரீ மஹாகணபதயே நம: ஆஸநம் சமர்ப்பயாமி|

பாதயோ: பாத்யம் சமர்ப்பயாமி| (உத்தரிணி தீர்த்தம் விடவும்)

அர்க்யம் சமர்ப்பயாமி| (உத்தரிணி தீர்த்தம் விடவும்)

ஆசமநீயம் சமர்ப்பயாமி| (உத்தரிணி தீர்த்தம் விடவும்)

ஸ்நபயாமி| (ஸ்நானம் செய்வதாக பாவித்து தீர்த்தம் விடவும்)

ஸ்நானானந்தரம் ஆசமனீயம் சமர்ப்பயாமி| (தீர்த்தம் விடவும்)

வஸ்த்ரம் சமர்ப்பயாமி| (தீர்த்தம் விடவும்)

உபவீதம் சமர்ப்பயாமி| (தீர்த்தம் விடவும்)

திவ்ய பரிமள கந்தான் தாரயாமி| (குங்குமம், சந்தனம் போடவும்)

அட்சதான் சமர்ப்பயாமி| (அட்சதை போடவும்)

புஷ்பை: பூஜயாமி| (புஷ்பத்தை சேர்க்கவும்)

புஷ்பத்தை எடுத்துக்கொண்டு, விக்னேஸ்வர பிம்பத்துக்கு அர்ச்சனை செய்யவும்.

ஓம் சுமுகாய நம: |

ஓம் ஏகதந்தாய நம: |

ஓம் கபிலாய நம: |

ஓம் கஜகர்ணாய நம: |

ஓம் லம்போதராய நம: |

ஓம் விகடாய நம: |

ஓம் விக்னராஜாய நம: |

ஓம் விநாயகாய நம: |

ஓம் தூமகேதவே நம: |

ஓம் கணாத்யக்ஷாய நம: |

ஓம் பாலசந்த்ராய நம: |

ஓம் கஜானனாய நம: |

ஓம் வக்ரதுண்டாய நம: |

ஓம் சூர்ப்பகர்ணாய நம: |

ஓம் ஹேரம்பாய நம: |

ஓம் ஸ்கந்த பூர்வஜாய நம: |

ஓம் ஸித்திவிநாயகாய நம: |

ஓம் ஸ்ரீ மஹாகணபதயே நம:

அர்ச்சனை செய்த பின், தூபம், தீபம் காட்டி, நிவேதனம் செய்ய வேண்டும்.

அம்ருதோபஸ்தரணமஸி |

ஓம் ப்ராணாய ஸ்வாஹா |

ஓம் அபாநாய ஸ்வாஹா |

ஓம் வ்யாநாய ஸ்வாஹா |

ஓம் உதாநாய ஸ்வாஹா |

ஓம் ஸமாநாய ஸ்வாஹா |

ஓம் ப்ரஹ்மணே ஸ்வாஹா |

மஹாகணபதயே நம:

அம்ருதம் நைவேத்யம் நிவேதயாமி |

அம்ருத பிதாநமஸி என்று நைவேதனம் செய்வித்து, கற்பூர நீராஜனம் செய்ய வேண்டும்...

 பின், எல்லாக் காரியங்களிலும் எப்போதும் இடையூறுகள் இல்லாமல் செய்தருள வேண்டும் என்று விக்னேஸ்வரரை பிரார்த்திக்க வேண்டும்.

வக்ர துண்ட மஹாகாய சூர்ய கோடி ஸமப்ரப|

நிர்விக்னம் குரு மே தேவ ஸர்வ கார்யேஷு ஸர்வதா||

- என்று சொல்லி பிரார்த்தித்து நமஸ்காரம் செய்துவிட்டு, சங்கல்பம் செய்யவும். அடைப்புக் குறிக்குள்() இருப்பவை இந்த வருடத்துக்கான ( ) நாள் நட்சத்திரங்கள்...

சங்கல்பம்
சுபே சோபனே முஹூர்த்தே ஆத்ய ப்ரஹ்மண: த்விதீயபரார்த்தே, ச்வேதவராஹ கல்பே, வைவஸ்வத மன்வந்தரே, அஷ்டாவிம்சதிதமே, கலி யுகே, ப்ரதமே பாதே, ஜம்பூ த்வீபே, பாரத வர்ஷே, பரத கண்டே, மேரோர்& தக்ஷிணே பார்ச்வே, சகாப்தே அஸ்மின் வர்த்தமானே வ்யாவஹாரிகே, ப்ரபவாதி& ஷஷ்டி ஸம்வத்ஸராணாம் மத்யே, (  )நாம ஸம்வத்ஸரே, (  )அயனே, (  )ருதௌ, (  )மாஸே, (  )பக்ஷே, ()சுபதிதௌ, (  )வாஸரயுக்தாயாம், (  )நக்ஷத்ர யுக்தாயாம், சுபயோக சுபகரண ஸகல விசேஷண விசிஷ்டாயாம் அஸ்யாம் சுப திதௌ,

மமோபாத்த ஸமஸ்த துரித க்ஷயத்வாரா ஸ்ரீ பரமேச்வர ப்ரீத்யர்த்தம், அஸ்மாகம் ஸஹகுடும்பானாம், க்ஷேம ஸ்தைர்ய வீர்ய விஜய ஆயுராரோக்ய ஐச்வர்ய அபிவ்ருத்யர்த்தம், ஸமஸ்த துரிதோப சாந்த்யர்த்தம், உசிதகாலே ஆயுஷ்மத்ஸுரூப சுகுணபுத்ர அவாப்த்யர்த்தம், தீர்க்க ஸௌமாங்கல்ய அவாப்த்யர்த்தம், அரோக திடகாத்ரதா ஸித்யர்த்தம் ஸ்ரீ வரலக்ஷ்மி ப்ரஸாத ஸித்த்யர்த்தம், யாவச்சக்தி த்யான&ஆவாஹனாதி ஷோடச உபசாரை: ஸ்ரீ வரலக்ஷ்மி பூஜாம் கரிஷ்யே| &

- என்று சங்கல்பித்து, அட்சதையை வடக்குப் புறம் சேர்க்கவும். உத்தரணி தீர்த்தத்தால் கையை துடைத்துக் கொண்டு, கையில் புஷ்பத்தை எடுத்துக்கொண்டு,



ஸ்ரீ விக்னேஸ்வரம் யதாஸ்தானம் பிரதிஷ்டாபயாமி |

சோபனார்த்தே க்ஷேமாய புனராகமனாய ச ||

என்று சொல்லி மஞ்சள் பிள்ளையார் மீது சேர்த்து, மஞ்சள் பிள்ளையாரை வடக்குப் புறம் நகர்த்தி வைக்கவும்.

பின் கலச பூஜை செய்யவும். பஞ்சபாத்திரத்தை சந்தனம் குங்குமம் இட்டு, நீர் விட்டு, புஷ்பம் சேர்த்து, வலது கையால் மூடிக்கொண்டு,

கங்கே ச யமுனே சைவ கோதாவரி சரஸ்வதி

நர்மதே ஸிந்து காவேரி தாம்ரவர்ணீ

ஜலே அஸ்மின் ஸந்நிதிம் குரு||

என்று, புஷ்பார்ச்சனை செய்யவும்.



கங்காயை நம:|

யமுனாயை நம:|

கோதாவர்யை நம:|

ஸரஸ்வத்யை நம:|

நர்மதாயை நம:|

ஸிந்தவே நம:|

காவேர்யை நம:|

தாம்ரவர்ண்யை நம:

என்று பூஜித்து, தீர்த்தத்தை, பூஜைப் பொருள்கள், கும்பம் மற்றும் தங்கள் மீது தெளிக்கவும்.

குருர் ப்ரஹ்மா குருர் விஷ்ணுர் குருர் தேவோ மஹேச்வர:|

குருஸ்ஸாக்ஷாத் பரம்ப்ரஹ்ம தஸ்மை ஸ்ரீகுரவே நம:||

- என்று, குருவை தியானித்த பிறகு, ப்ராணப்ரதிஷ்டை செய்யவும்.



அஸ்ய ஸ்ரீ வரலக்ஷ்மி ப்ராணப்ரதிஷ்டா மஹாமந்த்ரஸ்ய,

ப்ரம்ம-விஷ்ணு -மஹேச்வரா ருஷய: (வலது கையை தலை உச்சியில் வைக்கவும்)

ருக் யஜூஸ் ஸாம அதர்வாணிச் சந்தாம்ஸி (கையால் மூக்கு நுனியில் தொடவும்)

ஸகல ஜகத் ஸ்ருஷ்டி ஸ்திதி ஸம்ஹார காரிணீ ப்ராணா சக்தி: பரா தேவதா (ஹ்ருதயத்தில் தொடவும்)

ஆம் பீஜம், ஹ்ரீம் சக்தி:, க்ரோம் கீலகம்||

பிறகு, அங்கந்யாச கரந்யாசங்கள் செய்து தியானித்து, புஷ்பம் அட்சதையை தீர்த்தத்துடன் பின்வரும் மந்திரம் சொல்லி, கும்பத்திலுள்ள லக்ஷ்மி பிம்பத்தில் சேர்க்கவும்.

ஆவாஹிதோ பவ|

ஸ்தாபிதோ பவ|

ஸந்நிஹிதோ பவ|

ஸந்நிருத்தோ பவ|

அவகுண்டிதோ பவ|

ஸுப்ரீதோ பவ|

ஸுப்ரஸன்னோ பவ|

ஸுமுகோ பவ|

வரதோ பவ|

ப்ரஸீத ப்ரஸீத|

தேவி ஸர்வ ஜகன்நாயிகே யாவத் பூஜாவஸானகம்|

தாவத் த்வம் ப்ரீதி- பாவேன பிம்பே அஸ்மின் ஸந்நிதிம் குரு||

இப்படி ப்ராணப்ரதிஷ்டை செய்து, புஷ்பம் அட்சதை, தீர்த்தம் விட்டு, பால் பழம் நிவேதித்து, வரலக்ஷ்மி பூஜையைத் தொடங்கவும்.



கும்பத்தில் வரலக்ஷ்மியை தியானிக்கவும்.

பத்மாஸனாம் பத்மகராம் பத்மமாலா விபூஷிதாம்|

க்ஷீர ஸாகர ஸம்பூதாம் க்ஷீரவர்ண ஸமப்ரபாம்|

க்ஷீரவர்ணஸமம் வஸ்த்ரம் ததானாம் ஹரிவல்லபாம்|

பாவயே பக்தி யோகேன கலசே அஸ்மின் மனோஹரே|

வரலக்ஷ்ம்யை நம:|

என்று சொல்லி புஷ்பத்தை சேர்க்க வேண்டும்.



பாலபானு பரதீகாசே பூர்ண சந்த்ர நிபானனே ஸூத்ரேஸ்மின் ஸுஸ்திதா பூத்வா ப்ரயச்ச பஹுலான் வரான்||

என்று, 9 முடிச்சுகள் போட்ட சரடில் பூ முடித்து, கும்பத்தில் சாற்ற வேண்டும்.

ஸர்வ மங்கல மாங்கல்யே விஷ்ணு வக்ஷ: ஸ்தலாலயே|

ஆவாஹயாமி தேவித்வாம் அபீஷ்ட பலதா பவ||

வரலக்ஷ்மீம் ஆவாஹயாமி|

- என்று சொல்லி புஷ்பத்தை கும்பத்தில் சேர்த்து ஆவாஹனம் செய்யவும்.

ஸ்ரீவரலக்ஷ்ம்யை நம:| பாத்யம் ஸமர்ப்பயாமி (தீர்த்தம் விடவும்)

ஸ்ரீவரலக்ஷ்ம்யை நம:| அர்க்யம் ஸமர்ப்பயாமி (புஷ்பத்துடன் தீர்த்தம் விடவும்)

ஸ்ரீவரலக்ஷ்ம்யை நம:| ஆசமனீயம் ஸமர்ப்பயாமி (தீர்த்தம் விடவும்)

ஸ்ரீவரலக்ஷ்ம்யை நம:| மதுபர்க்கம் ஸமர்ப்பயாமி (தேன் கலந்த தயிர் நிவேதனம்)

ஸ்ரீவரலக்ஷ்ம்யை நம:| பஞ்சாம்ருதம் ஸமர்ப்பயாமி (பஞ்சமிர்த நிவேதனம்)

ஸ்ரீவரலக்ஷ்ம்யை நம:| ஸ்நானம் ஸமர்ப்பயாமி (தீர்த்த ப்ரோக்ஷணம்)

ஸ்ரீவரலக்ஷ்ம்யை நம:| வஸ்த்ரம் ஸமர்ப்பயாமி (வஸ்திரம் அல்லது அட்சதை)

ஸ்ரீவரலக்ஷ்ம்யை நம:| கண்டஸூத்ரம் ஸமர்ப்பயாமி (கருகமணி/பனைஓலை அணிவிக்க)

ஸ்ரீவரலக்ஷ்ம்யை நம:| ஆபரணானி ஸமர்ப்பயாமி (ஆபரணங்கள் அணிவிக்கவும்)

ஸ்ரீவரலக்ஷ்ம்யை நம:| கந்தம் ஸமர்ப்பயாமி (சந்தனம் இடவும்)

ஸ்ரீவரலக்ஷ்ம்யை நம:| அக்ஷதான் ஸமர்ப்பயாமி ( அட்சதை சேர்க்கவும்)

ஸ்ரீவரலக்ஷ்ம்யை நம:| புஷ்பமாலாம் ஸமர்ப்பயாமி (புஷ்பம், மாலை சேர்க்கவும்)

பிறகு அங்க பூஜை செய்யவும்.

முழுதாகச் செய்யாவிடினும், மகாலட்சுமி பிம்பத்தின் பாதம் முதல் சிரசு வரை பூஜிப்பதாக பாவனை செய்து, ஓம் ஸர்வமங்களாயை நம: ஸர்வாண் அங்காநி பூஜயாமி என்று சொல்லி புஷ்பம் அட்சதை ஸமர்ப்பிக்கவும்.

பின், நூற்றியெட்டு போற்றி அல்லது அஷ்டோ த்ரசத நாமம் சொல்லி, புஷ்பம் அல்லது குங்கும அர்ச்சனை செய்யவும்.

ஸ்ரீ லக்ஷ்மி அஷ்டோத்ர சத நாமாவளி
(ஒவ்வொரு நாமாவளிக்கு முன்னும் ஓம் என்றும், பின்னர் நம: என்றும் சேர்த்துச் சொல்லவும்)

ஓம் ப்ரக்ருத்யை நம:

விக்ருத்யை

வித்யாயை

ஸர்வபூத ஹிதப்ரதாயை

ச்ரத்தாயை

விபூத்யை

ஸுரப்யை

பரமாத்யை

வாசே

பத்மாலயாயை

பத்மாயை

சுசயே

ஸ்வாஹாயை

ஸ்வதாயை

ஸுதாயை

தன்யாயை

ஹிரண்ம்யை

லக்ஷ்ம்யை

நித்யபுஷ்டாயை

விபாவர்யை

அதித்யை

தித்யை

தீப்தாயை

வஸுதாயை

வஸுதாரிண்யை

கமலாயை

காந்தாயை

காமாக்ஷ்யை

க்ரோதஸம்பவாயை

அனுக்ரஹப்ரதாயை

புத்தயே

அநகாயை

ஹரிவல்லபாயை

அசோகாயை

அம்ருதாயை

தீப்தாயை

லோகசோக விநாசின்யை

தர்மநிலயாயை

கருணாயை

லோகமாத்ரே

பத்மப்ரியாயை

பத்மஹஸ்தாயை

பத்மாக்ஷ்யை

பத்மஸுந்தர்யை

பத்மோத்பவாயை

பத்மமுக்யை

பத்மநாபப்ரியாயை

ரமாயை

பத்மமாலாதராயை

தேவ்யை

பத்மகந்தின்யை

புண்யகந்தாயை

ஸுப்ரஸன்னாயை

ப்ரஸாதாபிமுக்யை

ப்ரபாயை

சந்த்ரவதனாயை

சந்த்ராயை

சந்த்ரஸஹோதர்யை

சதுர்ப்புஜாயை

சந்த்ரரூபாயை

இந்திராயை

இந்துசீதளாயை

ஆஹ்லாத ஜனன்யை

புஷ்ட்யை

சிவாயை

சிவகர்யை

ஸத்யை

விமலாயை

விச்வஜனன்யை

துஷ்ட்யை

தாரிர்ய நாசின்யை

ப்ரீதிபுஷ்கரிண்யை

சாந்தாயை

சுக்லமால்யாம்பராயை

ச்ரியை

பாஸ்கர்யை

பில்வநிலயாயை

வராரோஹாயை

யசஸ்வின்யை

வஸுந்தராயை

உதாராங்காயை

ஹரிண்யை

ஹேமமாலின்யை

தனதான்யகர்யை

ஸித்தயே

ஸ்ரைண ஸெளம்யாயை

சுபப்ரதாயை

ந்ருபவேச்ம கதானந்தாயை

வரலக்ஷ்ம்யை

வஸுப்ரதாயை

சுபாயை

ஹிரண்யப்ராகாராயை

ஸமுத்ரதனயாயை

ஜயாயை

மங்களாதேவ்யை

விஷ்ணுவக்ஷஸ்தல ஸ்திதாயை

விஷ்ணுபத்ன்யை

ப்ரஸன்னாக்ஷ்யை

நாராயண ஸமாச்ரிதாயை

தாரிர்ய த்வம்ஸின்யை

தேவ்யை

ஸர்வோபத்ரவ வாரிண்யை

நவதுர்காயை

மஹாகாள்யை

ப்ரஹ்மவிஷ்ணு சிவாத்மிகாயை

ஸம்பன்னாயை

புவனேஸ்வர்யை


(108 அஷ்டோத்திர சத நாமாவளி முற்றும்)

நன்றி Ssivf, and Dinamani