Showing posts with label ஆன்மிகம். Show all posts
Showing posts with label ஆன்மிகம். Show all posts

Thursday, November 3, 2022

ஓஷோ வாசகங்கள்

 நைமி இந்த நூற்றாண்டில் மட்டுமல்ல எல்லா நூற்றாண்டிலும் மிகச்சிறந்த எழுத்தாளர்


புத்திசாலித்தனம் என்பது உலகின் எந்தப் பொருளாலும் உன் ஆசையை நிறைவேற்ற முடியாது என்பதை உணர்ந்து கொள்வதே


மரணத்தை நினைவில் வைத்திரு, வாழ்க்கை உன்னை ஏமாற்றாது


அன்பு எந்த ரகசியத்தையும் தன்னுள் வைத்திருப்பதில்லை, அது அனைத்தையும் பகிர்ந்து கொள்ளவே விரும்புகிறது


உலகிலேயே நம்பவே முடியாதது உங்கள் மனம் தான். இன்று ஒன்றை தேடும், நாளை மற்றொன்றை தேடும். காலையில் ஒன்றிற்கும் மாலையில் மற்றொன்றிற்கும் ஆசை கொள்ளும். கடந்த கணத்தில் என்ன உணர்ந்ததோ, அதற்கு முற்றிலும் மாறுபட்ட ஒன்றை இப்போது உணரும்


எவ்வளவு பெரிய மனிதனாயிருந்தாலும், அவனுடைய மொத்த வாழ்க்கை கதையை அதிக பட்சம் ஒரு மணி நேரத்திற்கு சொல்லலாம். அவ்வளவு தான் மனித வாழ்வு


நாளை முதல் நான் இப்படி இருப்பது என உறுதியான ஒரு முடிவை எடுக்கிறீர்கள் எனில் மனதின் பத்தில் ஒரு பகுதி மட்டுமே அதை ஆதரிக்கும், மற்ற ஒன்பது பகுதிகளும் அதற்கு எதிராக திரும்பும். எதுவும் இயல்பாக நடக்க வேண்டும்


ஆணவம் என்பது காலம் முழுவதும் எதையாவது ஆசைப்பட்டு கொண்டே இருக்கும் பிச்சைக்காரன், அன்பென்பது தன்னிடம் உள்ள அனைத்தையும் வாரித் தரும் பேரரசன்


மனிதன் புரிந்து கொள்ள முடியாத வித்தியாசமான மிருகம், இறந்தவர்களைப் பற்றி பேசினால் சந்தோஷமாக ஏற்றுக் கொள்கிறான், உயிரோடு இருப்பவர்களை கொலையே செய்ய ஆசைப்படுகிறான்.


எந்த ஒரு மிருகமும், பறவையும், மரமும் கூட மரணத்தை கண்டு அஞ்சுவதில்லை, மனிதன் மட்டும் தான் வீண் குழப்பம் உருவாக்கி மரணம் நிகழும் வரை நடுங்கிக் கொண்டே இருக்கிறான்


அன்பு ஒரு ஒப்பந்தம் அல்ல. இலாப நஷ்ட கணக்கை அது பார்ப்பதில்லை. இந்த பொருளியல் பூமியில் பொருளியலை கடந்த ஒளிக்கதிர் தான் அன்பு. அதுதான் அதன் அழகு


நிகழ்காலம் என்ற ஒரே அடியில் உங்கள் மிக அருகிலேயே மகிழ்ச்சி இருக்கிறது. ஆனால் அதை மறந்து கடந்த காலம், எதிர்காலம் என மாறி மாறி பல நூறு அடிகள் தாவி மகிழ்ச்சியை தேடுகிறீர்கள், அது அப்படி கிடைப்பதற்கு வாய்ப்பில்லை


பெண்ணின் முழு உயிரும் அடுத்தவர்களுக்காக துடித்து கொண்டிருக்கிறது, பெண்மையின் படைப்பே அதுதான் அவளால் தனிமையாய் இருக்க முடியாது எப்போதெல்லாம் அவள் தனியாக இருக்கிறாளோ அப்போதெல்லாம் அவள் துயரத்தில் இருக்கிறாள், எனவே தனிமை ஆனந்தம், களிப்பு என்றால் அவளால் புரிந்து கொள்ள முடியாது


என்றுமே இளமையாக இருக்க வேண்டும் என்பது அருவருக்கதக்கது, இளமையாக இருப்பதற்காக பலவந்தபடுத்தினால் பதட்டம் தான் அதிகமாகும். ஆனந்தமாக இருக்க முடியாது. வயது கூடும்போது தான் மனிதர்களிடம் அழகும் பொலிவும் பளிச்சிடுகிறது, வாழ்வின் முட்டாள்தனங்கள் அகன்று தெளிவை நோக்கி நகரும் பருவமது


உலகில் மணமானவர்கள் எல்லோருக்குமே இந்த எண்ணம் உண்டு. வேறொருவரை மணந்திருந்தால் எல்லாம் சரியாக இருக்கும் என நம்புகின்றனர், ஆனால் ஜோடியை மாற்றும் சந்தர்ப்பம் கிடைத்தால் கூட 15 நாட்களில் அவர்களின் புதிய ஜோடியும் பழையது போலவே தோன்றும். இது எதிலும் நிறைவடையா மனதின் தன்மை


ஒருவர் மீது ஒருவர் உரிமை கொள்வதால் திருமணங்கள் காதலின் மீது சமாதி எழுப்பி விடுகின்றன. ஒருவருக்கொருவர் உரிமை எனும் அடிமைச் சங்கிலியிட்டுக் கொள்ளாமல் சுதந்திரம் கொடுங்கள்.


யாரும், யாருக்காகவும் படைக்கப்படவில்லை, ஒவ்வொருவரும் தனக்கென மட்டுமே படைக்கப் பட்டிருக்கிறார்கள்


உங்கள் மனிதத் தன்மை தோலைத் தாண்டி வெளிப் படுவதில்லை, அவமதித்தாலோ, குற்றம் கூறினாலோ உடனடியாக வெளிப்படுவது உள்ளிருக்கும் மிருகத் தன்மையே அன்றி மனிதத் தன்மையல்ல


கொஞ்சம் அன்பு, கொஞ்சம் அக்கறை, கொஞ்சம் பகிர்ந்தளித்தல்... இவை சேர்ந்ததே வாழ்க்கை. எனவே கிடைத்த இந்த நொடியை கவலைப்படுவதற்கு பயன்படுத்தாமல் வாழ்வதற்கு பயன்படுத்துங்கள்


மற்றவர்களுக்கு என்ன நிகழ வேண்டும் என எண்ணுகிறோமோ அது நமக்கு நிகழ்ந்தே தீரும்


யாரோ போல வாழ வேண்டும், யாரோ போல சம்பாதிக்க வேண்டும், யாரோ போல மகிழ்ச்சியாக இருக்கவேண்டும் என்ற எண்ணத்தை கைவிடுங்கள்; ஏனென்றால் நீங்கள் ஏற்கனவே ஒரு தலைசிறந்த படைப்பு. உங்களை மேம்படுத்த தேவையில்லை, அதை உணருங்கள் போதும்


உங்களுக்கு காயங்கள் தருவது, மற்றவர்களை காயப்படுத்துவது, வன்முறையில் ஈடுபட தூண்டுவது, கோபம் கொள்ள செய்வது, பிறருடன் ஒப்பிட்டு சுய பரிதாபம் கொள்ள செய்வது எல்லாவற்றிக்கும் ஒரே காரணம் தான்.... உங்கள் ஈகோ


யாராவது உங்களை நேசித்தால், அவர்களிடம் நன்றியுடன் இருங்கள், அவர்களிடம் ஏதாவது எதிர்பார்த்துக் கொண்டிருக்காதீர்கள்.


என் வாழ்க்கை கொண்டாட்டமானது, அதன் பின் விளைவுகளைப் பற்றி எனக்கு அக்கறையோ கவலையோ இல்லை, நான் கொண்டாடத் தான் இந்த பூமிக்கு வந்திருக்கிறேன். அப்படித்தான் வாழ்வேன்


தியானம் என்பது உங்கள் அழகான தனிமையை அனுபவிப்பதே தவிர வேறில்லை. உங்களை கொண்டாடுங்கள்; அதுதான் தியானம்


மனிதன் மகிழ்ச்சியடையவும் கொண்டாடவும் தான் பூமிக்கு வந்திருக்கிறான், மகிழ்ச்சியை விட உயர்வானது என அவனிடம் வேறு எதுவுமே இல்லை


உலகில் மிக கவர்ச்சிகரமான விலை உயர்ந்த பொருட்களை கொடுத்தாலும் நீங்கள் நிறைவடைய போவதில்லை. மீண்டும் வேறு எதையாவது தேடுவீர்கள். அது உங்களுக்கு உள்ளேயே பொங்கிக்கொண்டிருக்கிறது என்பதை அறியாத வரை உங்களால் மகிழ்ச்சியாக வாழவே முடியாது


என்னுடைய அன்பை அள்ளிக்கொள். என்னிடமிருக்கும் ஒரே செல்வம் இதுதான். எந்த அளவுக்கு அதிகமாக கொடுக்கிறாயோ அது பெருகுகிறது என்பதே அதன் அற்புதம். உண்மையான செல்வம் அப்படித்தான், கொடுக்க கொடுக்க வளர்கிறது. மேலும் அது குறைந்தால் அது செல்வமே அல்ல. -ஒரு கோப்பை தேநீர்


புத்தர் மதத்தையோ, அறிவுரைகளையோ, சித்தாந்தங்களையோ தரவில்லை, அவை அடிமைத்தனத்தை உருவாக்கும் என்பதை நன்கு அறிந்திருந்தார், அவர் கொடுத்தது முழுமையான சுதந்திரம், யாராலும் உங்களிடமிருந்து பறிக்க முடியாத சுதந்திரம்


உங்களுடைய ஆசைகள் கனவுகள் லட்சியங்களை பாருங்கள் அவை அதிகபட்சமாக 15 வயது ஆணுடைய அல்லது பெண்ணுடைய மனதில் உள்ள எண்ணங்களின் மறு வடிவமாக பெரும்பாலும் இருக்கின்றன


சோகத்திற்கு இடமே இல்லாத இந்த உலகில் மனிதன் சோகத்தை உருவாக்கி வைத்திருக்கிறான்.



Monday, February 15, 2021

ஓஷோ சாஸ்வதம் வகுப்பு

 கடுமையான பணி சுமைகளாலும், எங்கள் பகுதியில் எட்டு நகர் மக்களை  ஒன்று சேர்த்து, அதற்காக பலவிதமாக இயங்கி, பலதரப்பட்ட மக்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் போராட்டத்திலும், சுயநலமில்லாத செயல்களாக இருந்தாலும் அரசியல் உள்ளே நுழைந்ததால் அதை சமாளிக்க திணறியும்,   குடும்ப தேவைகளை பூர்த்தி செய்யும் கடமைகளிலும் உழன்று கொண்டிருந்த நான் எனது நண்பர் ஒருவரின் வழிகாட்டுதலுக்கு உட்பட்டு ஓஷோ சாஸ்வதம் 2 நாள் வகுப்பை அணுகினேன். வகுப்புகளை பற்றி எந்தவித எதிர்பார்ப்பும் என்னிடம் இல்லை, இன்னமும் சொல்லப்போனால் நான் ஒரு பரபரப்பான மனிதன். ஒரு அமைதியான மனநிலையை நாடி சாஸ்வதம் வந்தேன். 


வெள்ளி மாலை சுமார் ஆறு மணியளவில் உள் நுழைந்தேன். ஓஷோ நிர்தோஷ் அவர்களின் வழிகாட்டுதலின் படி அன்று தொடங்கப்பட்ட முதல் வகுப்பு அறிமுகம் செய்யும் வகையிலும், வெள்ளை கயிறு (White robe) என பொருள்படும்படி வகுப்பு நடைபெற்றது. தியானமென்றால் அமைதியாக அமர்ந்திருப்பது என நினைத்த எனக்கு அதுவே மாறுதலாக இருந்தது. முதல் நாள் உணவும் சுற்றுப்புற சூழ்நிலைகளும் அருமையாக இருந்தன. சுத்தமான வெள்ளை உடைகளை கொடுத்தார்கள், செய்த பயிற்சிகளும், அந்த உடையும், பரபரப்பாக இயங்கி வந்த எனக்கு உள்ளுக்குள்ளே குறைந்த பட்ச அமைதியை கொண்டுவந்தது நிஜம். வேறொரு மனிதனாக என்னை மெல்ல உணர்ந்தேன். 

எனக்கு கொடுக்கப்பட்டிருந்த அறையில் தாராபுரத்தில் இருந்து யுவராஜ், மதன் என இரண்டு நண்பர்கள் அறிமுகமானார்கள். முதல் பழக்கத்திலேயே அவர்களை மிகவும் நெருக்கமான நண்பர்களாக உணர்ந்தேன். 

சனியன்று காலை டைனமிக் எனப்படும் வகுப்பு நடைபெற்றது, மிக சாதாரண மனிதர்களாக தெரிந்த வகுப்பை நடத்தும் ஆசிரியர்களின், அங்கே தங்கியிருக்கும் பெண்களின் மொத்த வலிமையை, அர்ப்பணிப்பை அங்கே நான் உணர்ந்தேன். வாழ்நாள் வரை கூட வரும் அதிஅற்புதமான பயிற்சி என்றால் இதுதான். மொத்தமான ஒரு மனிதனின் செயல்பாடுகளையே மாற்றி அமைக்கும் வல்லமை கொண்டது இந்த பயிற்சி.  



இது தவிர நட்ராஜ் ஜிப்ரிஸ், குண்டலினி வகுப்புகள் சீரான இடைவெளியில் அன்று முழுவதும் நடைபெற்றன. சிந்தனையில் உழன்று கொண்டே இருக்கும் நான் மதியம் கிடைத்த இடைவெளியில் தூங்கி விட்டேன், அங்கே எனக்கு திரு புவியரசு அவர்கள் மொழி பெயர்த்த தஸ்தயேவ்ஸ்கியின் கரமாஸவ் சகோதர்கள் புத்தகம் எனும் புதையல் கிடைத்தது. ஓஷோ பரிந்துரைத்த இது முன்னுரையிலேயே அது எவ்வளவு வலிமையான புத்தகம் என புரிந்தது, எப்படியாவது இரவு நான்கு மணிநேரமாவது படித்துவிட வேண்டும் என்ற ஆவலுடன் ஆரம்பித்த பத்தாவது நிமிடத்தில் தூங்கியிருக்கிறேன். என்னை அறியாமல் நடந்த நிகழ்வு இது.  தூங்குவதற்கு கடும் பிரயத்தனம் படும், “நானா இது?” என்பதில் எனக்கு பேராச்சர்யம். 

மைத்ரேயா ஒரு கடுமையான மாஸ்டராகவும், நல்ல நண்பராகவும் இருந்தார், எளிய விளக்கங்கள், நகைச்சுவை உணர்வு, தேவை அறிந்து உதவும் பண்பு என என்னை மிகவும் ஈர்த்தார். குறிப்பாக அவரது இளையராஜா பாடல்களில் முழு ஜீவன் இருந்தது. அவரது துணைவியாரும் அதற்கு சளைத்தவரில்லை என்பதுபோல பயிற்சிகளிலும், பாடல்களிலும் தனித்துவமாக தெரிந்தார். இரண்டு நாட்கள் குடும்பமாகவே பழகிய பிரபு, விஜயன் மற்றும் பெயர் தெரியாத அனைத்து நண்பர்களுக்கும் நன்றி. 

தோன்றும் உணர்வுகளை எல்லாம் எழுத்தால் கொண்டு வர இயலாது அல்லவா?  

நான் பாடிய பாடலுடன் அதை வெளிப்படுத்த முயல்கிறேன்.

ஓஷோ சாஸ்வதம் வகுப்பு எனக்கு

“ஏய்...

என் தலைக்கேருற

பொன் தடம் போடுற

என் உயிராடுற

என்னடி மாயாவி நீ?

என் நெலம் மாத்துற

அந்தரமாக்குற

என் நெஜம் காட்டுற

பட்டா கத்தி தூக்கி

இப்போ மிட்டாய் நறுக்குற

விட்டா நெஞ்ச வாரி

உன் பட்டா கிறுக்குற


என் தலைக்கேருற

பொன் தடம் போடுற

என் உயிராடுற

என்னடி மாயாவி நீ?”

சுற்றிலும் மனிதர்கள் இருந்தாலும் தனிமையின் பேரானந்தத்தை உணர்த்திய  சாஸ்வதம் இல்லத்திற்கு நன்றி என்ற வார்த்தை மிகவும் குறைவு.  



Monday, April 9, 2018

வெள்ளிங்கிரி பயணம்

இயற்கையின் அழகை பெற விடுமுறை சமயங்களில் NP லாரி, பேருந்து, ரயில் (அதிலும் இது மிகவும் ஸ்பெஷல்) , பைக், கார், விமானம் வரை எங்கெங்கோ பயணம் சென்றிருக்கிறேன். நடந்தும் திருப்பதி, சபரிமலை (காலில் அடி பட்டு தையல் பிரித்த ஒரு வாரத்திலேயே), கர்நாடகாவில் ராஜ்குமார் பங்களா அமைத்திருக்கும் மலைப் பகுதி, கரளயம் எனும் பழங்குடி மக்கள் வசிக்கும் பகுதி என அலைந்திருக்கிறேன்.

கடந்த வாரம் வெள்ளிங்கிரி போகலாம் என முடிவெடுத்து மூன்று பேருடன் தொடங்கியது எங்கள் பயணம், அதிலும் என் மாமன் மகன் கிருபா பத்து மாத கர்ப்பிணி போன்றே தொப்பை வைத்திருப்பவன். "நானா? வெள்ளியங்கிரியா? என்ன விளையாடுறியா?" என்றவனை "உடம்புல என்னடா இருக்கு? மனசு பலம் போதும்டா" என வர வைத்தேன். இன்னொருவன் சஞ்சீவ் பக்கத்துக்கு வீட்டு தம்பி. அவன் இதற்கு முன்பு நான்கு முறை ஏறி இருப்பதால் அவனை வரவைத்தேன்.

இரவு ஏழு மணிக்கே மலை ஏற ஆரம்பித்தோம். முதல் மலை முழுவதும் படிகள், சில உடைந்திருக்கின்றன, 1600 படிகள் என வழியில் ஒருவர் தகவல் தந்து உதவினார். முதல் மலையில் உடலில் இருக்கும் மொத்த தண்ணீரும் வெளிவந்து விடுமளவு நன்றாக வியர்க்கும்,  பொறுமையாகவே ஏறினோம், ஒன்றில் நாங்கள் தெளிவாக இருந்தோம், "இந்த மலை எப்போது முடியும் அடுத்த மலை எப்போது ஆரம்பிக்கும்" என்றெல்லாம் கவலைப்படாமல் ஒவ்வொரு படியும் அனுபவித்தே ஏறுவது என்று.
அந்த எண்ணம் இறங்கும் வரை கை கொடுத்தது.

அதற்கு முன் மலை ஏற்றத்தின் போது என்ன தேவை என்பதையும் சொல்லி விடுகிறேன். மாற்று துணி ஒரு செட், ஒரு நல்ல டார்ச், இரண்டு பாக்கெட் ஆரஞ்சு மிட்டாய்கள் (நா வறலாமல் காக்கும்), க்ளுகோஸ் ஒரு பாக்கெட், ஜெர்கின், போர்த்திக்கொள்ள ஒரு போர்வை, இரண்டு லிட்டர் தண்ணீர், சப்பாத்தி அல்லது அதிகம் எண்ணெய் இல்லாத உணவு, உலர் தீனி (திராட்சை போன்று) மலை அடிவாரத்தில் விற்கும் ஊன்றுகோல்.

முதல்மலையின் முடிவில் இருக்கிறது வெள்ளி விநாயகர் கோவில். கல்லும் முள்ளுமாக கிடந்த இந்த மலையை சீராக்கி படிகள் செய்ய உதவியவர் ஒட்டர் என்ற சித்தராம். அங்கே இரு புறமும் கடைகள் இருக்கின்றன, தர்பூசணி பீஸாக தருகிறார்கள், குளிர் பானங்களை விட அவை எடுத்துக்கொள்ளுங்கள், குளிர்பானங்கள் தாகத்தை அதிக படுத்தும்.

அங்கே பதினைந்து நிமிட நேர ஓய்வுக்கு பின் இரண்டாவது மலைக்கு ஏற ஆரம்பித்தோம், மின்சார வசதியில்லாத, சிதிலமடைந்த படிகளின் வழியே நிலவொளியில் மரங்களின் ஊடே காற்றின் தாலாட்டில் நடப்பது சுகம்.

இரண்டாவது மலை கொஞ்சம் படிக்கட்டுகள் கொஞ்சம் வன பாதைகள் என இருக்கிறது, அதன் முடிவில் பாம்பாட்டி சுனை வரும், அங்கே ஒரு சிறிய மூங்கில் வழியாக நீர் பிடித்து கொள்ளலாம், மலை வழியே வரும் அந்த மூலிகை தண்ணீர் நல்ல சுவை கொண்டது, தண்ணீர் தான் உங்களின் உயிர் தோழன், முடிந்த வரை நாக்கை நனைத்து கொள்ள உபயோக படுத்துங்கள், ஒரு மலைக்கு இரண்டு  ஆரஞ்சு மிட்டாயை உபயோகப் படுத்துங்கள்  ஐம்பது ரூபாய்க்கு ஒரு தண்ணீர் லிட்டர் விற்கிறார்கள், மலை ஏற்றத்தில் சுமந்து வருபவர்களுக்கு கூலி கொடுத்து, போலீஸ்காரர்களுக்கு (நாங்கள் கீழே இறங்கி வரும்போது கடமை மிக்க காவல் அலுவலர் கடைக்கு 300 வாங்கி கொண்டிருந்தார்)  லஞ்சம் கொடுத்து கடை வாடகையும் கொடுத்து பிழைப்பு நடத்த வேண்டுமே என கடைக்காரர் ஒருவர் புலம்பினார்.

 பாறைகளுக்கு நடுவில் படிக்கட்டுகள் செதுக்கி பாதை அமைத்திருக்கிறார்கள், வழுக்குப் பாறை என்று பெயர், சிறிது கவனத்துடன் கடக்க வேண்டிய பகுதி, இது போன்ற இடங்களிலே தான் மூன்றாவது காலான மூங்கில் குச்சி அருமையாக செயல்படும். முன்பெல்லாம் கயிறு கட்டி கடந்த இந்த பகுதியை சீராக்கி இப்போது பாதை அமைத்து தந்திருக்கிறார்கள்.

 மூன்றாவது மலை முடிவிலும் நீர் பிடிக்க இடம் உண்டு, அதன் பெயர் கைதட்டி சுனை. அதிலிருந்து குளிர் உங்களை வரவேற்று தழுவிக்கொள்ளும்.
இடையிடையே கடைகள் இருக்கும், மோர் அல்லது தர்பூசணி அல்லது மூலிகை சூப் கிடைக்கிறது, விலை ஒரு மடங்கு அதிகமாக இருக்கும், இருந்தாலும் அங்கெல்லாம் விலையை பற்றி யோசிக்காமல் வாங்குவது புத்திசாலித்தனம். பஜ்ஜி போண்டாவெல்லாம் விற்பார்கள், கீழே சென்று எவ்வளவு வேண்டுமானாலும் சாப்பிடுங்கள் அங்கே வேண்டாம், மலை ஏறுதலின் ஸ்பீட் ப்ரேக்கர்கள் அவை.

அடுத்ததாக வெள்ளை ஜிப்ஸம் மண் நிறைந்த மலையை விபூதிமலை என்று அலைகிறார்கள், திருநீறு போன்றே இருப்பதால் அதை குடைந்து எடுத்து செல்லும் முட்டாள் தனத்தை நீங்களும் செய்ய வேண்டாம், சிவ தரிசம் முடிந்த உடனேயே அங்கேயே விபூதி பொட்டணம் தருவார்கள்.

இங்கெல்லாம் குளிர் காற்றில் தாலாட்டை நன்கு உணர முடியும், வியர்வை வழிய நடக்கும் உடலுக்கு அது தரும் இதம் சுகம்.

காத்தாதி திட்டு எனப்படும் ஐந்தாவது மலை ஏற்ற இறக்கங்கள் கொண்டது. அங்கேயே ஒரு கடை அருகில் கையில் கொண்டு போயிருந்த புளி, தயிர் சாதத்தை முடித்து விட்டு, இரண்டு மணி நேரமாவது தூங்கி விட்டு செல்லலாம் என படுத்துகொண்டோம். ஜெர்கின் போர்வை தாண்டியும் குளிர் ஊடுருவுகிறது, இரண்டு மணி நேர தூக்கத்திற்கு பிறகு பக்கத்துக்கு கடையில் சுக்கு காபி கிடைத்தது, அவ்வளவு குளிரிலும் அத்தனை சூடான காபி வரம். கொதிக்க கொதிக்க ஊதி ஆனந்தமாக அனுபவித்து சாப்பிட்ட அதன் சுவை வாழ்நாள் முழுவதும் மறக்காது.

ஆறாவது மலையை காஞ்சி மாநதி என்றும், ஆண்டி சுனை என்றும் அழைக்கிறார்கள், அதிலிருந்து கீழே இறங்கி போக வேண்டும். நான்கு காலால் இறங்கும் நகைச்சுவை காட்சிகள் எல்லாம் உண்டு.
 நாங்கள் கீழே சென்ற போது நீர் வரத்து குறைவாக இருந்ததால் குளிக்க முடியவில்லை.

அதிலிருந்து ஏழாவது மலை உச்சியில் பரமன் அருகில் நெருக்கும் நேரம் ஆரம்பிக்கிறது. சிறிது தூரம் கடக்கையிலேயே கடவுளைக் காண பக்தர்கள் காத்திருக்கும் கூட்டம் தெரிய ஆரம்பிக்கும். ஏழாவது மலை சற்றே சோதித்தாலும், காணும் இடமெல்லாம் மேகம் உரசும் நிறைவும், இயற்கையின் கண் கொள்ளா பேரழகும் வாரி அணைத்துக்கொள்ளும். சிவன் அருகில் நெருங்க நெருங்க பரவசம் தொற்றிக்கொள்ளும், உச்சியில் வேல்கள் சூழ நடை பாதை அமைத்து வரிசையில் பரமனை காண நிற்க வேண்டியது தான்.

அழுவதெல்லாம் அவமான சின்னமாக நினைக்கும் எனக்கு சிவனை பார்த்த உடனே ஏனோ கண்ணில் நீர் வழிந்து கொண்டே இருந்தது, நிச்சயம் அதில் துக்கமில்லை, பரவசமா, ஆனந்தமா, உச்ச நன்றி உணர்ச்சியா சொல்ல தெரியவில்லை.

சிவனை தரிசித்து விட்டு வந்து அமர்ந்தீர்கள் எனில் அட்டகாசமான சூரிய உதயம் பார்க்கலாம், அதையெல்லாம் எவ்வளவு எழுத்துக்கள் போட்டு எழுதினாலும் நிரப்பவே முடியாது. சோலை சூழ பனிக்காற்று உடல் மீது பரவ, ஆனந்தம் நிரம்பி வழிய, சூரியன் தன் கிரகணத்தை விரிக்கும் நேரம் சொர்க்கம். அந்த அழகின் மயக்கம் தீர மூன்று மணி நேரம் ஆனது.

நீங்கள் ஆத்திகரோ, நாத்திகரோ, இந்துவோ, வேறு மதத்தினரோ அதெல்லாம் ஒரு பொருட்டே இல்லை, உங்கள் உடலையும், மனதையும் வலுப்படுத்த, இயற்கையின் முழு வீச்சை அனுபவிக்க ஏதாவது ஒரு சாதனையை நிகழ்த்தி விட்டதுபோல் பெருமை சொல்ல நிச்சயம் ஒரு முறை வெள்ளியங்கிரி சென்று வாருங்கள்... என் வாழ்நாளில் நான் சென்ற பயணங்களில் மிக சிறப்பான பயணம் என இதைத்தான் கூறுவேன்.

பின் குறிப்பு: எனது மாமன் மகன் கடைசி மலை இறங்கும் பொழுது மிகவுமே சிரமப்பட்டான், மிக மிக மெதுவாக இறங்கினால் போதும் என்றே வந்தோம்... அதிசயம் என்னவெனில் என்னை விட சீக்கிரமாக அவன் இறங்கி விட்டான்.
காலையில் போன் செய்து "என்ன நடந்தாலும் வருடாவருடம் இந்த அற்புதமான பேரழகை தவற விடக்கூடாது, இனி உடல் எடையை குறைத்து விட வேண்டியதுதான்" என தீர்மானமாக சொன்னான்.

சில அறிவுரைகள்:
தயவு செய்து பிளாஸ்டிக் குப்பைகளை, தண்ணீர் பாட்டில்களை போட கடைகளிலேயே ஒரு சாக்கு வைத்திருக்கிறார்கள், அதிலேயே போடுங்கள்.

நடைபாதை நடப்பதற்கு மட்டுமே. மனிதன் என்ற பெயரில் ஒரு சில மிருகங்கள் அதை கழிப்பறையாக உபயோகப் படுத்துகின்றன. அந்த ஆபாச செயலை தயவு செய்து செய்ய வேண்டாம்.

சக மனிதர்களிடம் சண்டை போடும் இடமோ, கெத்துக் காட்டும் இடமோ அதுவல்ல என உணருங்கள்.

 முடிந்தவரை மலை ஏற சிரமப்படும் மனிதர்களுக்கு ஆறுதலாக இருங்கள், என் மாமன் மகன் அதில் சிறப்பு நானே ஏறுறேன் உங்களுக்கு என்ன பாஸ் என குறைந்தது முப்பது பேரிடமாவது சொல்லி உந்துதல் தந்தான்.

கூடுதல் தகவல்கள் :
1) பிப்ரவரி மாத தொடக்கத்தில் (1ம் தேதி)  இருந்து மே மாத இறுதி வரை (30) மட்டுமே செல்ல அனுமதி உண்டு. மற்ற மாதங்களில் வெள்ளிங்கிரி செல்ல இயலாது.

2) ஆண்களுக்கு வயது வரம்பு கிடையாது, பெண்கள் எனில் 13 வயதிற்கு கீழும் 45 வயதிற்கு மேலும் அனுமதிக்கப்படுகிறார்கள்.

கீழ்கண்ட லிங்கில் இந்த மலையை பற்றி முழு தகவலும் ஆங்கிலத்தில் உள்ளது படித்து பயன்பெறுக
https://tamilnadu-favtourism.blogspot.com/2015/10/velliangiri-mountains-coimbatore.html

-நன்றி

Monday, August 8, 2016

வரலட்சுமி பூஜை சிறப்பாக செய்ய வழிமுறைகள்.

சகல வளங்களையும் தரும் இந்த வரலட்சுமி விரத பூஜையை, ஆவணி மாத பௌர்ணமிக்கு முன்வரும் வெள்ளிக்கிழமை அன்று செய்ய வேண்டும். முக்கியமாகச் செய்ய வேண்டியவர்கள் பெண்கள்! சுமங்கலிகள், தாலி பாக்கியத்துக்காகவும், சுபிட்சம், சௌபாக்கியம் போன்றவற்றுக்காகவும் இந்த விரதத்தை மேற்கொள்ள வேண்டும்.

கேட்கும் வரங்களைத் தரும் லட்சுமிதேவியை பூஜித்தல் இதன் சிறப்பு . திருமணமான பெண்கள், தங்கள் திருமணத்தை அடுத்துவரும் வரலட்சுமி பூஜையிலிருந்து இதை ஒவ்வொரு வருடமும் செய்யவேண்டும். வரலட்சுமி விரதத்தின் போது வீட்டுக்கு விலக்காக இருந்தால் அடுத்துவரும் வெள்ளிக்கிழமை இந்த பூஜையைச் செய்யலாம். இதைச் செய்யும்போது, சிறு பெண்களும் உடனிருந்து சரடைக் கட்டிக் கொள்ளலாம். மறுநாள் அம்மனுக்கு ஆரத்தி எடுத்த பின்னர் கலசத்தை அரிசி வைத்திருக்கும் பானையில் வைக்கவேண்டும்.

எல்லோராலும் மிக விரிவாகச் செய்ய இயலாவிட்டாலும், ஈடுபாட்டோ டு தெரிந்த பாடல்களைப் பாடி, மகாலட்சுமி அஷ்டோ த்திரம் சொல்லி, பூக்களால் அர்ச்சனை செய்து, நிவேதனம் செய்து, நோன்பு சரடை கையில் கட்டி நிவேதனத்தை எல்லோருக்கும் கொடுத்து, வயதான சுமங்கலிப் பெண்களை வணங்கி தானங்கள் செய்து இந்த விரத பூஜையை நிறைவு செய்யலாம்.

கொஞ்சம் சாஸ்திரோக்தமாக விரதமிருந்து பூஜையைச் செய்ய விரும்பினால், விக்னேஸ்வர பூஜை தொடங்கி, சங்கல்பம், கலச பூஜை, பிராணப்ரதிஷ்டை, தியானம், ஷோடசோபசாரம், அங்க பூஜை, லட்சுமி அஷ்டோ த்ரம், தோரக்ரந்தி பூஜை, பிரார்த்தனை, ஆரத்தி என்று விரிவாகச் செய்ய வேண்டும்.



பூஜைக்குத் தேவையானவை :

 மஞ்சள் பொடி (பிள்ளையார் பிடிக்க), நுனிவாழை இலை, அரிசி, தேங்காய், எலுமிச்சம்பழம், குங்குமம், சந்தனம், புஷ்ப வகைகள், வெற்றிலை, பாக்கு, பழம், கற்பூரம், ஊதுபத்தி, சாம்பிராணி, அட்சதை, வஸ்திரம், மஞ்சள் சரடுகள், பஞ்சாமிர்தம், குத்துவிளக்கு, திரிநூல், நல்லெண்ணெய், தீப்பெட்டி, தாம்பாளம், பஞ்சபாத்ரம், உத்தரிணி, கிண்ணம், கற்பூரத் தட்டு, தூபக்கால், தீபக்கால், மணி ஆகியவை.



நிவேதனப் பொருள்கள்:

பொங்கல், பாயசம், அப்பம், வடை, கொழுக்கட்டை, லட்டு, தயிர், பசும்பால், நெய், தேன், கற்கண்டு.



பழ வகைகள்:

ஆரஞ்சு, மாதுளை, விளாம்பழம், மாம்பழம், வாழை, திராட்சை...



பூஜைக்கான முன்னேற்பாடுகள்:

வீட்டின் கிழக்கு திசையில் ஈசான்ய மூலையில், பூஜைக்கான இடத்தை அமைத்து, நன்றாக மெழுகி, கோலமிட்டு, மண்டபம் அமைத்து, அலங்கரிக்கவும். மண்டபத்தின் கீழ் நுனி வாழை இலையில் நெல்லைப் பரப்பி, அதன் மீது ஒரு தட்டில் அரிசியை வைக்க வேண்டும். அதன் மேல் கலச கும்பத்தை வைக்க வேண்டும். அரிசி, தங்கம், ரத்தினம் ஆகியவற்றை கும்பத்தில் நிரப்பவும் (தீர்த்தத்தையும் நிரப்பலாம்). மேலே மாவிலைக் கொத்தும் தேங்காயும் வைத்து அலங்கரித்து, புதிய வஸ்திரம் சாற்றி, தங்கம் அல்லது வெள்ளியால் செய்யப்பட்ட நான்கு கரங்கள் கொண்ட மகாலட்சுமியின் பிரதிமை பிம்பத்தை (முக பிம்பத்தையும் வைக்கலாம்) மேலே வைத்து பூக்கள் சூட்டி அலங்கரிக்கவும்.

(சில இடங்களில் வீட்டின் பூஜை அறை ஒட்டிய சுவரில் வெள்ளை அடித்து அம்மனின் திருவுருவத்தை எழுதி ஆவாஹணம் செய்கிறார்கள். பூஜைக்காக வைக்கப்படும் கலசத்தில் காதோலை, கருமணி, எலுமிச்சம்பழம் முதலியவையும் போடப்படுகிறது.)

பூஜையின் முடிவில் மஞ்சள் கயிறை(சரடு) கையில் கட்டிக் கொள்கிறார்கள். மஞ்சள் கயிறு மங்கலத்தின் அறிகுறி. அஷ்ட லட்சுமிகளுடன் வரலட்சுமியையும் சேர்த்து ஒன்பது லட்சுமிகள் என்று சாஸ்திரம் சொல்கிறது. எனவே, ஒன்பது நூல் இழைகளால் ஆன, ஒன்பது முடிச்சுகள் போடப்பட்ட நோன்புக் கயிறை (சரடை) பூஜையில் வைக்க வேண்டும்.

விரதம் மேற்கொள்ளும் வெள்ளிக்கிழமை காலை 10.30க்கு முன் & ராகு காலத்துக்கு முன் (சிலர் மாலை வேளையிலும் செய்வர்) ஒரு தாம்பாளத்தில் அரிசி பரப்பி, அதன் மேல் கலசம் வைத்து, பழம் வெற்றிலை பாக்கு நிவேதனம் வைத்து, வாசலின் உள் நிலைப் படி அருகே நின்று கற்பூரம் காட்டி, ஆரத்தி எடுத்து மகாலட்சுமித் தாயை வீட்டுக்கு அழைத்து வருவதாக பாவனை செய்து, பயபக்தியுடனும் அழைத்து வந்து, அலங்கரிக்கப்பட்ட மண்டபத்தில் உள்ள கலசத்தில் வைத்திருக்கும் மகாலட்சுமி பிரதிமை பிம்பத்தில் இருந்து விரத பூஜையை ஏற்று அருள் புரியுமாறு மகாலட்சுமியை வேண்டிக் கொண்டு, ஆவாஹணம் செய்ய வேண்டும். அப்போது, மங்களகரமான தோத்திரங்களைச் சொல்லி, பாடல்களைப் பாட வேண்டும்.

பூஜைக்குத் தேவையானவற்றை அருகில் வைத்துக்கொண்டு பூஜையைத் தொடங்கவும். பஞ்சாங்கம் பார்த்து, நாள், திதி, வருடம், பட்சம், மாதம் ஆகியவற்றை அறிந்து குறித்துக் கொள்ளவும்.

மேற்கொள்ளப்படும் விரத பூஜை எந்தவித இடையூறுகளும் இல்லாமல் நன்கு நடைபெற வேண்டும் என்பதற்காக, விக்னங்களைக் களையும் விநாயகரை பூஜித்து, பிறகு வரலட்சுமி பூஜையைத் தொடங்க வேண்டும்.



விக்னேஸ்வர பூஜை
உத்தரணியில் தீர்த்தம் எடுத்து, வலது உள்ளங்கையில் விட்டுக் கொண்டு, ஓம் அச்சுதாய நம: / ஓம் அனந்தாய நம: / ஓம் கோவிந்தாய நம: என்று சொல்லி, மூன்றுமுறை உட்கொள்ள வேண்டும். இது ஆசமனம்.

கையில் அட்சதை, புஷ்பம் எடுத்துக் கொண்டு, சங்கல்பம் செய்யவும்.

சுக்லாம் பரதரம் விஷ்ணும் சசிவர்ணம் சதுர்புஜம்|

ப்ரசன்ன வதனம் த்யாயேத் ஸர்வ விக்னோப சாந்தயே||

மமோபாத்த ஸமஸ்த துரித க்ஷயத்வாரா ஸ்ரீ பரமேஸ்வர ப்ரீத்யர்த்தம் கரிஷ்யமாணஸ்ய கர்மண: நிர்விக்னேன பரிஸமாப்த்யர்த்தம் ஆதௌ ஸ்ரீ

விக்னேஸ்வர பூஜாம் கரிஷ்யே||

- என்று சொல்லி, அட்சதை, புஷ்பத்தை முன்னால் சேர்க்கவும். விக்னேஸ்வரரை எழுந்தருளச் செய்யும் ஆசனத்தையும் மணியையும் பிரார்த்தனை செய்து புஷ்பத்தை சமர்ப்பிக்கவும். மணி அடிக்கவும். பின், பிடித்து வைத்த மஞ்சள் பிள்ளையாரை, விக்னேஸ்வரராக பாவனை செய்து, அதில் விக்னேஸ்வரர் எழுந்தருள பிரார்த்தனை செய்யவேண்டும்.

அஸ்மின் ஹரித்ரா பிம்பே ஸ்ரீ விக்னேஸ்வரம் த்யாயாமி / ஸ்ரீ மஹாகணபதிம் ஆவாஹயாமி & என்று சொல்லி, புஷ்பத்தை மஞ்சள் பிள்ளையாரிடம் சேர்ப்பிக்கவும்.

 இனி ஒவ்வொரு முறையும் ஸ்ரீ மஹாகணபதயே நம: என்று சொல்லி, கீழ்க்காணும் மந்திரம் சொல்லி அந்தந்த செயல்களைச் செய்ய வேண்டும்.

ஓம் ஸ்ரீ மஹாகணபதயே நம: ஆஸநம் சமர்ப்பயாமி|

பாதயோ: பாத்யம் சமர்ப்பயாமி| (உத்தரிணி தீர்த்தம் விடவும்)

அர்க்யம் சமர்ப்பயாமி| (உத்தரிணி தீர்த்தம் விடவும்)

ஆசமநீயம் சமர்ப்பயாமி| (உத்தரிணி தீர்த்தம் விடவும்)

ஸ்நபயாமி| (ஸ்நானம் செய்வதாக பாவித்து தீர்த்தம் விடவும்)

ஸ்நானானந்தரம் ஆசமனீயம் சமர்ப்பயாமி| (தீர்த்தம் விடவும்)

வஸ்த்ரம் சமர்ப்பயாமி| (தீர்த்தம் விடவும்)

உபவீதம் சமர்ப்பயாமி| (தீர்த்தம் விடவும்)

திவ்ய பரிமள கந்தான் தாரயாமி| (குங்குமம், சந்தனம் போடவும்)

அட்சதான் சமர்ப்பயாமி| (அட்சதை போடவும்)

புஷ்பை: பூஜயாமி| (புஷ்பத்தை சேர்க்கவும்)

புஷ்பத்தை எடுத்துக்கொண்டு, விக்னேஸ்வர பிம்பத்துக்கு அர்ச்சனை செய்யவும்.

ஓம் சுமுகாய நம: |

ஓம் ஏகதந்தாய நம: |

ஓம் கபிலாய நம: |

ஓம் கஜகர்ணாய நம: |

ஓம் லம்போதராய நம: |

ஓம் விகடாய நம: |

ஓம் விக்னராஜாய நம: |

ஓம் விநாயகாய நம: |

ஓம் தூமகேதவே நம: |

ஓம் கணாத்யக்ஷாய நம: |

ஓம் பாலசந்த்ராய நம: |

ஓம் கஜானனாய நம: |

ஓம் வக்ரதுண்டாய நம: |

ஓம் சூர்ப்பகர்ணாய நம: |

ஓம் ஹேரம்பாய நம: |

ஓம் ஸ்கந்த பூர்வஜாய நம: |

ஓம் ஸித்திவிநாயகாய நம: |

ஓம் ஸ்ரீ மஹாகணபதயே நம:

அர்ச்சனை செய்த பின், தூபம், தீபம் காட்டி, நிவேதனம் செய்ய வேண்டும்.

அம்ருதோபஸ்தரணமஸி |

ஓம் ப்ராணாய ஸ்வாஹா |

ஓம் அபாநாய ஸ்வாஹா |

ஓம் வ்யாநாய ஸ்வாஹா |

ஓம் உதாநாய ஸ்வாஹா |

ஓம் ஸமாநாய ஸ்வாஹா |

ஓம் ப்ரஹ்மணே ஸ்வாஹா |

மஹாகணபதயே நம:

அம்ருதம் நைவேத்யம் நிவேதயாமி |

அம்ருத பிதாநமஸி என்று நைவேதனம் செய்வித்து, கற்பூர நீராஜனம் செய்ய வேண்டும்...

 பின், எல்லாக் காரியங்களிலும் எப்போதும் இடையூறுகள் இல்லாமல் செய்தருள வேண்டும் என்று விக்னேஸ்வரரை பிரார்த்திக்க வேண்டும்.

வக்ர துண்ட மஹாகாய சூர்ய கோடி ஸமப்ரப|

நிர்விக்னம் குரு மே தேவ ஸர்வ கார்யேஷு ஸர்வதா||

- என்று சொல்லி பிரார்த்தித்து நமஸ்காரம் செய்துவிட்டு, சங்கல்பம் செய்யவும். அடைப்புக் குறிக்குள்() இருப்பவை இந்த வருடத்துக்கான ( ) நாள் நட்சத்திரங்கள்...

சங்கல்பம்
சுபே சோபனே முஹூர்த்தே ஆத்ய ப்ரஹ்மண: த்விதீயபரார்த்தே, ச்வேதவராஹ கல்பே, வைவஸ்வத மன்வந்தரே, அஷ்டாவிம்சதிதமே, கலி யுகே, ப்ரதமே பாதே, ஜம்பூ த்வீபே, பாரத வர்ஷே, பரத கண்டே, மேரோர்& தக்ஷிணே பார்ச்வே, சகாப்தே அஸ்மின் வர்த்தமானே வ்யாவஹாரிகே, ப்ரபவாதி& ஷஷ்டி ஸம்வத்ஸராணாம் மத்யே, (  )நாம ஸம்வத்ஸரே, (  )அயனே, (  )ருதௌ, (  )மாஸே, (  )பக்ஷே, ()சுபதிதௌ, (  )வாஸரயுக்தாயாம், (  )நக்ஷத்ர யுக்தாயாம், சுபயோக சுபகரண ஸகல விசேஷண விசிஷ்டாயாம் அஸ்யாம் சுப திதௌ,

மமோபாத்த ஸமஸ்த துரித க்ஷயத்வாரா ஸ்ரீ பரமேச்வர ப்ரீத்யர்த்தம், அஸ்மாகம் ஸஹகுடும்பானாம், க்ஷேம ஸ்தைர்ய வீர்ய விஜய ஆயுராரோக்ய ஐச்வர்ய அபிவ்ருத்யர்த்தம், ஸமஸ்த துரிதோப சாந்த்யர்த்தம், உசிதகாலே ஆயுஷ்மத்ஸுரூப சுகுணபுத்ர அவாப்த்யர்த்தம், தீர்க்க ஸௌமாங்கல்ய அவாப்த்யர்த்தம், அரோக திடகாத்ரதா ஸித்யர்த்தம் ஸ்ரீ வரலக்ஷ்மி ப்ரஸாத ஸித்த்யர்த்தம், யாவச்சக்தி த்யான&ஆவாஹனாதி ஷோடச உபசாரை: ஸ்ரீ வரலக்ஷ்மி பூஜாம் கரிஷ்யே| &

- என்று சங்கல்பித்து, அட்சதையை வடக்குப் புறம் சேர்க்கவும். உத்தரணி தீர்த்தத்தால் கையை துடைத்துக் கொண்டு, கையில் புஷ்பத்தை எடுத்துக்கொண்டு,



ஸ்ரீ விக்னேஸ்வரம் யதாஸ்தானம் பிரதிஷ்டாபயாமி |

சோபனார்த்தே க்ஷேமாய புனராகமனாய ச ||

என்று சொல்லி மஞ்சள் பிள்ளையார் மீது சேர்த்து, மஞ்சள் பிள்ளையாரை வடக்குப் புறம் நகர்த்தி வைக்கவும்.

பின் கலச பூஜை செய்யவும். பஞ்சபாத்திரத்தை சந்தனம் குங்குமம் இட்டு, நீர் விட்டு, புஷ்பம் சேர்த்து, வலது கையால் மூடிக்கொண்டு,

கங்கே ச யமுனே சைவ கோதாவரி சரஸ்வதி

நர்மதே ஸிந்து காவேரி தாம்ரவர்ணீ

ஜலே அஸ்மின் ஸந்நிதிம் குரு||

என்று, புஷ்பார்ச்சனை செய்யவும்.



கங்காயை நம:|

யமுனாயை நம:|

கோதாவர்யை நம:|

ஸரஸ்வத்யை நம:|

நர்மதாயை நம:|

ஸிந்தவே நம:|

காவேர்யை நம:|

தாம்ரவர்ண்யை நம:

என்று பூஜித்து, தீர்த்தத்தை, பூஜைப் பொருள்கள், கும்பம் மற்றும் தங்கள் மீது தெளிக்கவும்.

குருர் ப்ரஹ்மா குருர் விஷ்ணுர் குருர் தேவோ மஹேச்வர:|

குருஸ்ஸாக்ஷாத் பரம்ப்ரஹ்ம தஸ்மை ஸ்ரீகுரவே நம:||

- என்று, குருவை தியானித்த பிறகு, ப்ராணப்ரதிஷ்டை செய்யவும்.



அஸ்ய ஸ்ரீ வரலக்ஷ்மி ப்ராணப்ரதிஷ்டா மஹாமந்த்ரஸ்ய,

ப்ரம்ம-விஷ்ணு -மஹேச்வரா ருஷய: (வலது கையை தலை உச்சியில் வைக்கவும்)

ருக் யஜூஸ் ஸாம அதர்வாணிச் சந்தாம்ஸி (கையால் மூக்கு நுனியில் தொடவும்)

ஸகல ஜகத் ஸ்ருஷ்டி ஸ்திதி ஸம்ஹார காரிணீ ப்ராணா சக்தி: பரா தேவதா (ஹ்ருதயத்தில் தொடவும்)

ஆம் பீஜம், ஹ்ரீம் சக்தி:, க்ரோம் கீலகம்||

பிறகு, அங்கந்யாச கரந்யாசங்கள் செய்து தியானித்து, புஷ்பம் அட்சதையை தீர்த்தத்துடன் பின்வரும் மந்திரம் சொல்லி, கும்பத்திலுள்ள லக்ஷ்மி பிம்பத்தில் சேர்க்கவும்.

ஆவாஹிதோ பவ|

ஸ்தாபிதோ பவ|

ஸந்நிஹிதோ பவ|

ஸந்நிருத்தோ பவ|

அவகுண்டிதோ பவ|

ஸுப்ரீதோ பவ|

ஸுப்ரஸன்னோ பவ|

ஸுமுகோ பவ|

வரதோ பவ|

ப்ரஸீத ப்ரஸீத|

தேவி ஸர்வ ஜகன்நாயிகே யாவத் பூஜாவஸானகம்|

தாவத் த்வம் ப்ரீதி- பாவேன பிம்பே அஸ்மின் ஸந்நிதிம் குரு||

இப்படி ப்ராணப்ரதிஷ்டை செய்து, புஷ்பம் அட்சதை, தீர்த்தம் விட்டு, பால் பழம் நிவேதித்து, வரலக்ஷ்மி பூஜையைத் தொடங்கவும்.



கும்பத்தில் வரலக்ஷ்மியை தியானிக்கவும்.

பத்மாஸனாம் பத்மகராம் பத்மமாலா விபூஷிதாம்|

க்ஷீர ஸாகர ஸம்பூதாம் க்ஷீரவர்ண ஸமப்ரபாம்|

க்ஷீரவர்ணஸமம் வஸ்த்ரம் ததானாம் ஹரிவல்லபாம்|

பாவயே பக்தி யோகேன கலசே அஸ்மின் மனோஹரே|

வரலக்ஷ்ம்யை நம:|

என்று சொல்லி புஷ்பத்தை சேர்க்க வேண்டும்.



பாலபானு பரதீகாசே பூர்ண சந்த்ர நிபானனே ஸூத்ரேஸ்மின் ஸுஸ்திதா பூத்வா ப்ரயச்ச பஹுலான் வரான்||

என்று, 9 முடிச்சுகள் போட்ட சரடில் பூ முடித்து, கும்பத்தில் சாற்ற வேண்டும்.

ஸர்வ மங்கல மாங்கல்யே விஷ்ணு வக்ஷ: ஸ்தலாலயே|

ஆவாஹயாமி தேவித்வாம் அபீஷ்ட பலதா பவ||

வரலக்ஷ்மீம் ஆவாஹயாமி|

- என்று சொல்லி புஷ்பத்தை கும்பத்தில் சேர்த்து ஆவாஹனம் செய்யவும்.

ஸ்ரீவரலக்ஷ்ம்யை நம:| பாத்யம் ஸமர்ப்பயாமி (தீர்த்தம் விடவும்)

ஸ்ரீவரலக்ஷ்ம்யை நம:| அர்க்யம் ஸமர்ப்பயாமி (புஷ்பத்துடன் தீர்த்தம் விடவும்)

ஸ்ரீவரலக்ஷ்ம்யை நம:| ஆசமனீயம் ஸமர்ப்பயாமி (தீர்த்தம் விடவும்)

ஸ்ரீவரலக்ஷ்ம்யை நம:| மதுபர்க்கம் ஸமர்ப்பயாமி (தேன் கலந்த தயிர் நிவேதனம்)

ஸ்ரீவரலக்ஷ்ம்யை நம:| பஞ்சாம்ருதம் ஸமர்ப்பயாமி (பஞ்சமிர்த நிவேதனம்)

ஸ்ரீவரலக்ஷ்ம்யை நம:| ஸ்நானம் ஸமர்ப்பயாமி (தீர்த்த ப்ரோக்ஷணம்)

ஸ்ரீவரலக்ஷ்ம்யை நம:| வஸ்த்ரம் ஸமர்ப்பயாமி (வஸ்திரம் அல்லது அட்சதை)

ஸ்ரீவரலக்ஷ்ம்யை நம:| கண்டஸூத்ரம் ஸமர்ப்பயாமி (கருகமணி/பனைஓலை அணிவிக்க)

ஸ்ரீவரலக்ஷ்ம்யை நம:| ஆபரணானி ஸமர்ப்பயாமி (ஆபரணங்கள் அணிவிக்கவும்)

ஸ்ரீவரலக்ஷ்ம்யை நம:| கந்தம் ஸமர்ப்பயாமி (சந்தனம் இடவும்)

ஸ்ரீவரலக்ஷ்ம்யை நம:| அக்ஷதான் ஸமர்ப்பயாமி ( அட்சதை சேர்க்கவும்)

ஸ்ரீவரலக்ஷ்ம்யை நம:| புஷ்பமாலாம் ஸமர்ப்பயாமி (புஷ்பம், மாலை சேர்க்கவும்)

பிறகு அங்க பூஜை செய்யவும்.

முழுதாகச் செய்யாவிடினும், மகாலட்சுமி பிம்பத்தின் பாதம் முதல் சிரசு வரை பூஜிப்பதாக பாவனை செய்து, ஓம் ஸர்வமங்களாயை நம: ஸர்வாண் அங்காநி பூஜயாமி என்று சொல்லி புஷ்பம் அட்சதை ஸமர்ப்பிக்கவும்.

பின், நூற்றியெட்டு போற்றி அல்லது அஷ்டோ த்ரசத நாமம் சொல்லி, புஷ்பம் அல்லது குங்கும அர்ச்சனை செய்யவும்.

ஸ்ரீ லக்ஷ்மி அஷ்டோத்ர சத நாமாவளி
(ஒவ்வொரு நாமாவளிக்கு முன்னும் ஓம் என்றும், பின்னர் நம: என்றும் சேர்த்துச் சொல்லவும்)

ஓம் ப்ரக்ருத்யை நம:

விக்ருத்யை

வித்யாயை

ஸர்வபூத ஹிதப்ரதாயை

ச்ரத்தாயை

விபூத்யை

ஸுரப்யை

பரமாத்யை

வாசே

பத்மாலயாயை

பத்மாயை

சுசயே

ஸ்வாஹாயை

ஸ்வதாயை

ஸுதாயை

தன்யாயை

ஹிரண்ம்யை

லக்ஷ்ம்யை

நித்யபுஷ்டாயை

விபாவர்யை

அதித்யை

தித்யை

தீப்தாயை

வஸுதாயை

வஸுதாரிண்யை

கமலாயை

காந்தாயை

காமாக்ஷ்யை

க்ரோதஸம்பவாயை

அனுக்ரஹப்ரதாயை

புத்தயே

அநகாயை

ஹரிவல்லபாயை

அசோகாயை

அம்ருதாயை

தீப்தாயை

லோகசோக விநாசின்யை

தர்மநிலயாயை

கருணாயை

லோகமாத்ரே

பத்மப்ரியாயை

பத்மஹஸ்தாயை

பத்மாக்ஷ்யை

பத்மஸுந்தர்யை

பத்மோத்பவாயை

பத்மமுக்யை

பத்மநாபப்ரியாயை

ரமாயை

பத்மமாலாதராயை

தேவ்யை

பத்மகந்தின்யை

புண்யகந்தாயை

ஸுப்ரஸன்னாயை

ப்ரஸாதாபிமுக்யை

ப்ரபாயை

சந்த்ரவதனாயை

சந்த்ராயை

சந்த்ரஸஹோதர்யை

சதுர்ப்புஜாயை

சந்த்ரரூபாயை

இந்திராயை

இந்துசீதளாயை

ஆஹ்லாத ஜனன்யை

புஷ்ட்யை

சிவாயை

சிவகர்யை

ஸத்யை

விமலாயை

விச்வஜனன்யை

துஷ்ட்யை

தாரிர்ய நாசின்யை

ப்ரீதிபுஷ்கரிண்யை

சாந்தாயை

சுக்லமால்யாம்பராயை

ச்ரியை

பாஸ்கர்யை

பில்வநிலயாயை

வராரோஹாயை

யசஸ்வின்யை

வஸுந்தராயை

உதாராங்காயை

ஹரிண்யை

ஹேமமாலின்யை

தனதான்யகர்யை

ஸித்தயே

ஸ்ரைண ஸெளம்யாயை

சுபப்ரதாயை

ந்ருபவேச்ம கதானந்தாயை

வரலக்ஷ்ம்யை

வஸுப்ரதாயை

சுபாயை

ஹிரண்யப்ராகாராயை

ஸமுத்ரதனயாயை

ஜயாயை

மங்களாதேவ்யை

விஷ்ணுவக்ஷஸ்தல ஸ்திதாயை

விஷ்ணுபத்ன்யை

ப்ரஸன்னாக்ஷ்யை

நாராயண ஸமாச்ரிதாயை

தாரிர்ய த்வம்ஸின்யை

தேவ்யை

ஸர்வோபத்ரவ வாரிண்யை

நவதுர்காயை

மஹாகாள்யை

ப்ரஹ்மவிஷ்ணு சிவாத்மிகாயை

ஸம்பன்னாயை

புவனேஸ்வர்யை


(108 அஷ்டோத்திர சத நாமாவளி முற்றும்)

நன்றி Ssivf, and Dinamani