Thursday, July 25, 2019

தம்பிக்கலை அய்யன் கோவில் - புதிய எக்ஸைல்

820 பக்க புதிய எஸ்சைல் படித்து கொண்டிருக்கிறேன், எனக்கு சொந்த ஊரே ஈரோடு மாவட்டம் தான், கோவை வாழ்விடம். எனக்கு நன்கு தெரிந்த பலமுறை போன தம்பிக்கலை அய்யன் கோவில் பற்றி சாரு எழுதியது வியப்பை ஏற்படுத்தியது.
சில நூற்றாண்டுகளுக்கு முன்னர் இந்த ஊரில் ஒரு பெரும் பணக்காரர் இருந்தாராம், இவரிடம் நூற்றுக்கணக்கான பசுக்கள் இருந்ததாம், அவற்றை இவரது தம்பி கவனித்து வந்தானாம். ஒருநாள் ஒரு பசுவின் மடியில் ஒரு நாக பாம்பு பால் குடித்து கொண்டு இருக்கும் அதிசய காட்சியை கண்டானாம்.
இதை அண்ணனிடம் சொல்ல, அவரோ என்னடா கதை விடுகிறாய் என ஓங்கி அடித்தாராம், அடுத்தநாள் பண்ணைக்கு கூட்டிப்போய் அதை நேரடியாகவே அண்ணனுக்கு காட்ட, அந்த காட்சியை கண்ட பணக்காரர், வீட்டுக்கு திரும்பி வராமல் அங்கேயே அமர்ந்து சித்தராகி விட்டாராம். அதன் பின் எல்லா விஷத்தையும் முறியடிக்கும் தம்பண கலை கைவர பெற்றதால், அவர் தம்பண கலை அய்யன் என அழைக்கப்பட்டாராம்.
இவரின் விஷ முறிவு க் கலை இந்தியா முழுவதும் பரவி இருந்ததாகவும், பல மன்னர்கள் இவரிடம் மருத்துவம் பெற்று போனதாகவும் கதைகள் உலவுகின்றன. இவரது பெயர் தம்பண கலை அய்யன்தான் மருவி தம்பிக் கலை அய்யன் என மாறியதாம்.
இவர் சமாதி அடைந்த போது இவருக்கென உருவாக்கப்பட்ட கோவிலே தம்பிக் கலை அய்யன் கோவிலாம்.
வெறும் அம்பது வீடுகள் கொண்ட இந்த ஊரில் (தங்கமேடு) இங்கு கார்த்திகை தீபத்தின் போது, இந்த மாவட்டத்தில் உள்ள எல்லா மக்களும் வந்து லட்சம் தீபங்கள் ஏற்றப்படுவது வழக்கமாம்.
நமக்கு பக்கத்தில் உள்ள கோவிலுக்கு பின்னால் உள்ள, தெரியாத செய்திகள் மிகுந்த சுவாரஸ்யமானவை.

No comments:

Post a Comment