Thursday, July 11, 2019

சிவலிங்கம் மற்றும் கருணாகரன்

கோவையில் நான் குடியிருக்கும் ஏரியாவில் டீ குடிப்பதற்கு பதில் விஷத்தை குடித்து விடலாம், நல்ல பசியாக இருக்கிறதென்று ஒரு கடையில் டீயும் வடையும் வாங்கிவிட்டு என்ன செய்வதென்று முழித்து கொண்டிருந்த நேரத்தில், சிவலிங்கம் நினைவுக்கு வந்தார், டீ எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு அவர்தான் உதாரணம், சுடச் சுட வடை போடுகையில் கையில் காசிருக்கிறதோ இல்லையோ வாங்கி விடுவோம், பணம் கொடுத்தாலும் கடன் சொன்னாலும் ஒரே ரியாக்ஷன் தான் கொடுப்பார், பழைய பாக்கியென எங்களிடம் ஒரு நாளும் கேட்டதே இல்லை. சுப்பு மாம்ஸிடம் சதா கோபித்து கொண்டு "இனிமேல் இங்க டீ குடிக்கவே கூடாதுடா" என கட்டளையிட்டு விட்டான், கருணாகர அண்ணனும் ஆபத் பாண்டவன், கடைசியாக நான் பார்த்தபோது அவர் ஒரு பெரிய பொட்டணத்தில் வடை கட்டி கொடுத்தார், காசு கொடுக்க போனதற்கு கோபித்து கொண்டார், அதில் அன்பும் சுவையும் நிறைய இருந்தது. நான் கடந்து வந்த பாதைகள் பிரியங்களால் நிறைந்திருந்தன

No comments:

Post a Comment