Showing posts with label இணையம். Show all posts
Showing posts with label இணையம். Show all posts

Thursday, November 24, 2016

இணைய விற்பனையில் Amazon ஏன் முதலிடத்தில் இருக்கிறது?

தற்போது இணையத்தில் கிடைக்காத பொருட்களே இல்லை என  எண்ணுமளவு இணைய சந்தை வளர்ச்சி கண்டிருக்கிறது. நம்பகமான, நிறைய வலைத்தளங்கள்  இருந்தாலும், இணைய பொருட்கள் விற்பனையில்  அமேசான் எப்படி முதலிடத்தில் இருக்கிறது என பார்ப்போம்.

flipkart, ebay, snapdeal, jabong, shopclues, Myntra, Homeshop18, என்று இணைய விற்பனை வலைத்தளங்கள் மிக நீண்ட வரிசை கொண்டது.

இதில் ebayதான் இந்தியாவில் இணைய பொருட்கள் விற்க முதன் முதலாக பெரிய தொகையை முதலீடு செய்து களமிறங்கியது, ஆனால் இப்போது அது பின்னுக்கு தள்ளப்பட்டு ஏறக்குறைய காணாமல் போகும் நிலைக்கு வந்து விட்டது. உதாரணமாக ebayவில் இதுவரை மூன்று முறை பொருட்கள் வாங்கி இரண்டு முறை திருப்தி இல்லாமல் திருப்பி கொடுத்துள்ளேன், நமது பணம் நமக்கு திரும்ப கிடைக்க ஏறக்குறைய 25 நாட்களை கடத்துகிறது, replace எனும் மாற்று முறையில்  மிக மோசமான வணிகம் ebayவில் இருக்கிறது, பொருள் கிடைக்கவும் நீண்ட நாட்கள் காத்திருக்க வேண்டி இருக்கிறது.  வாடிக்கையாளர்களை திருப்தி படுத்துவதை விட, நாம் கேட்கும் கேள்விக்கு பதில் சொல்வதில் இருந்து தப்பிப்பதே அவர்களின் முக்கிய நோக்கமாக இருக்கிறது.

shopclus ஓரளவு வேகமாக செயல்படுகிறது, ஆனால் பொருளின் தரத்தை நம்ப முடிவதில்லை.  flipkart, snapdeal, jabong, Myntra, Homeshop18, போன்ற தளங்களை ஒப்பிடுகையில் flipkartன் சேவை திருப்திகரமாக இருந்தாலும், டெலிவரி பெரு நகரங்களுக்கு கூட தாமதமாகவே கிடைக்கிறது.  

 நாம் இணையத்தில் பொருட்களை வாங்குவதில் முக்கியமாக கவனிக்க வேண்டிய விஷயங்கள், வாங்கும் இணையம் பாதுகாப்பானதா, அதில் உள்ள   பொருளின் தரம் நன்றாக உள்ளதா, அது மற்ற நிறுவனங்களை விட விலை குறைத்து தருகிறதா, திருப்தி இல்லை என்றால் திரும்ப ஒப்படைப்பதில் எளிய அணுகுமுறை உள்ளதா, replace எனப்படும் மாற்று விரைவில் கிடைக்கிறதா என்பனவே.

Amezon இதை சிறப்பாக செயல் படுத்துகிறது, அதனால் தான் இந்திய வணிக சந்தையில் முதலிடம் வகிக்கிறது. வாடிக்கையாளர்களுக்கு தேவையான ஏராளமான பொருட்கள், பண பாதுகாப்பு, விரைவான டெலிவரி, எளிதான திரும்ப எடுக்கும் முறை (easy returns), வாடிக்கையாளர் சேவை, மாற்றுபொருளை விரைவில் அனுப்புதல் எனும் செவைகளால் இது முதலிடம் பிடிக்கிறது. இணைய பொருட்கள் வாங்க Amezon உகந்தது. 

Saturday, September 24, 2016

ஏன் மீனவர் கைதுகள்? அப்படி என்னதான் பிரச்னை?

நான்கைந்து வருடங்களுக்கு முன்பே தேனி இணைய தளம் இதை பற்றி முழுமையான கட்டுரையை வெளியிட்டுள்ளது, மேலோட்டமாக நாம் கடந்து செல்லும் இந்த பிரச்னையின் நேரடியான களம் கடும் அதிர்ச்சிகரமானது. தொடர்ந்து படியுங்கள் .....  

மீனவர்களுக்கு மட்டுமே புரிந்த அல்லது தெரிந்த மீன்பிடி தொழில் பற்றி நிலம் சார்ந்த மக்களுக்கு தெரியாது. அதாவது இரட்டை மடி வலை, சுருக்கு வலை ஆகியவை ஒட்டுமொத்த மீனவர்களும் மீன் பிடிக்க முடியாமல் தடுக்கின்ற அல்லது அவர்களுக்கு மீன்கள் கிடைக்காமல் முழு கடலையும் அரித்து எடுக்கின்ற ஒரு தடை செய்யப்ப்பட்ட வலைகளாகும். அந்த வலைகளை சில குறிப்பிட்ட எண்ணிக்கையில் உலா மீனவர்கள் மட்டும் மற்ற மீனவர்களின் எதிர்ப்புக்கு மத்தியில் ராமேஸ்வரத்திலும், நாகப்பட்டினத்திலும் பயன்படுத்துகிறார்கள். அதில் அவர்களுக்கு பல லட்சம் ரூபாய் கிடைகிறது. அதனால் மற்ற மீனவர்களுக்கு மீன்களே இல்லாமல் ஆகிவிடுகிறது.

இந்த தடை செய்யப்பட்ட வலைகளை பயன்படுத்துவதை மீன்வளத் துறையின் ஊழல் அதிகாரிகளும், ஊழல் அரசியல்வாதிகளும் ஆதரிக்கிறார்கள். கையூட்டு வாங்கி கொள்கிறார்கள். இது விசைப்படகு மீனவர் சங்கங்களால் தொடர்ந்து எதிர்க்கப்படுகிறது. இதே தடை செய்யப்ப்பட்ட வலைகளை பயன்படுத்தி மன்னார், யாழ்ப்பாணம் வரை சென்று தமிழ்நாட்டு மீனவர்கள் மீன் பிடிக்கும் போதெல்லாம் சில ஆண்டுகளாகவே அங்குள்ள தமிழ் மீனவர்கள் எதிர்ப்பை கொடுத்துள்ளார்கள்.

அது தவிர யாழ்ப்பாணம், மன்னார் தமிழ் மீனவர்கள் தமிழ்நாட்டு மீனவர்கள் போல டிராலர்களை பயன்படுத்துவது இல்லை. அவர்கள் இன்னமும் நாட்டு படகு முறைகளையே பயன்படுத்துகிறார்கள். இப்போது அங்கே பிடிபட்டவர்கள் இரட்டை மடி வலைகளையும், ஒற்றை மடி வலைகளையும் பயன்படுத்தி டிராலர்கள் மூலம் மீன் பிடிக்க சென்றவர்கள். அங்கே வந்து மீன் பிடிப்பதை அங்குள்ள தமிழ் மீனவர்கள் எதிர்க்கவில்லை.

டிராலர்களை பயன்படுத்துவது அவர்களுக்கு இடையூறுதான் என்றாலும்  அதைக்கூட அவரால் பெரிதுபடுத்தவில்லை. ஆனால் பல முறை எச்சரிக்கை விடுத்தும் இந்திய மீனவர்கள் தடை செய்யப்பட்ட இரட்டை மடி வலைகளை பயன்படுத்துவது அவர்களது வாழ்வுரிமையை பறிப்பதாக உள்ளது. அதுமட்டுமின்றி இவர்கள் யாழ்ப்பாண கரையோரம் சென்று மீன் பிடித்துள்ளனர். அது அவர்களது அன்றாட மீன் பிடித்தலுக்கே எதிரானது.

இரட்டை மடி மற்றும் சுருக்கு வலை என்ற தடை செய்யப்ப்பட்ட வலைகளை மீன் பிடிக்க பயன்படுத்த கூடாது என்பது தமிழகத்தில் மட்டுமல்ல, அனைத்து நாடுகளிலும் அமுலில் இருக்கிறது. ஆனால் தமிழகத்தில் உள்ள ஊழல் பிடித்த மீனவர் அல்லாத மீன்வளத்துறையின் அதிகாரிகள் தங்கள் பணிக்காலத்திற்குள் எவ்வளவு சுருட்டலாம் என்ற நோக்கம் கொண்டவர்கள் கை நிறைய காசை வாங்கிக்கொண்டு அத்தகைய தடை செய்யப்ப்பட்ட வலைகளை பயன்படுத்துபவர்களுக்கு பல்லக்கு தூக்குகிறார்கள்.

கடல்ச் சூழலை பற்றியோ, கடலின் நீரோட்டங்கள் பற்றியோ, மீன்களின் வளர்ச்சி பற்றியோ, மீன்களை பிடிப்பதில் இருக்கவேண்டிய கட்டுப்பாடு, ஒழுங்குமுறை, மற்றும் விதிகள் பற்றியோ, வெவ்வேறு வகை மீன்களை வெவ்வேறு காலத்தில் பிடிப்பதற்கான வெவ்வேறு வகையான வலைகளை பற்றியோ எந்த அறிவும் இல்லாத அதிகாரிகள், மீன் வளத்துறையை ஆக்கிரமித்துள்ளனர். அதேபோல மீன்வளம் பற்றிய, மீன் பிடித்தல் பற்றிய அடிப்படை அறிவே இல்லாத அரசியல்வாதிகளும், இந்த நாட்டில் கடற்கரை தொகுதிகளின் எம்.எல்.ஏ.க்களாக, மற்றும் அமைச்சர்களாக இருக்கிறார்கள்.

அநேக காலங்களில் கடலை பற்றிய அறிவே இல்லாத மீனவர் அல்லாத மாற்று சமூகங்களை சேர்ந்தவர்கள் அப்படிப்பட்ட அமைச்சர்களாக வந்துவிடுகிறார்கள். சிலநேரம் மீனவர் சமூகத்தை சேர்ந்த மனிதர்களே அமைச்சர்களாக வந்தாலும் அவர்கள் விவரம் தெரிந்தவர்களாக இருந்தாலும், தவறான அறிவியலுக்கு எதிரான வழிமுறைகளை கையாண்டு அதிகமான லாபத்தை சுரண்டலாம் என்ற லாப வெறி கொண்டவர்களாக இருக்கிறார்கள்.

இவ்வாறு நிலம் சார்ந்த முதலாளிகளுக்கு, அதாவது நிலம் சார்ந்த முதலைகளுக்கு, கடல் சார்ந்த மக்களான மீனவர்கள் என்ற கடல் சார் பழங்குடிகள் பற்றிய அறிவே இருப்பதில்லை. அறிவு இருந்தாலே அதில் எப்படி ஊழல் அதிகமாக செய்து சொத்து சேர்க்கலாம் என்ற புத்தி கொண்ட இன்றைய உலகமயமாக்கல் காலகட்டத்தில், இயற்கை விதிகள் பற்றிய அறிவே இல்லாமல், சிறு மனச்சாட்சி உறுத்தல் கூட இல்லாமல் இந்த முதலைகள் தவறு செய்கின்றன. அப்படித்தான் இங்கே கடல் சார் உலகத்தை இவர்கள் கொடுமை படுத்துகிறார்கள்.

உதாரணமாக மீன் பிடித்தலில் பொதுவாக உலகம் முழுவதும் கில்நெட் வலையை பயன்படுத்துவார்கள். ஆனால் லாப வெறி பிடித்த தன்னலவாதிகள் இந்த தொழிலில் நுழைந்த பின், டிராலர் முறையை அறிமுகப்படுத்தி கொள்ளை அடிக்க தொடங்கினார்கள். இந்த டிராலர் முறை எல்லா மீனவர்களாலும் எப்போதும் எதிர்க்கப்படும் முறை. ஆனால் இன்றைய சாக்கடை அரசியலின் விளைவாக, ஊழல் பெருச்சாளிகள் அதிகாரிகளாக இருப்பதன் விளைவாக இந்த டிராலர் முறை பயன்படுத்தப்படுகிறது.

இலங்கை தீவில் தமிழ் மீனவர்களும், சிங்கள மீனவர்களும் டிராலர் முறையை பயன்படுத்துவதில்லை. அவர்கள் கில்நெட் முறையைத்தான் பின்பற்றுகிறார்கள். கேரளாவில் கடற்கரைகளில் டிராலர் முறையை பின்பற்றுவதில்லை. அவர்கள் கில்நெட் முறையைத்தான் பின்பற்றுகிறர்கள். ஆனால் தமிழ்நாட்டில் கன்னியாகுமரி தொடங்கி, ராமேஸ்வரம், நாகப்பட்டினம் என்று எல்லா ஊர்களிலும் டிராலர் முறையை பின்பற்றி மீன் பிடிக்கிறார்கள்.

இந்த டிராலர் முறை என்பது கடலுக்குள் அடியாழம் வரை கருவி மூலம் வலையை கொண்டு சென்று, அரித்து எடுக்கும் தன்மை கொண்டது. அடுத்த மீனவனின் தேவைக்கு கிடைக்கவிடாமல் கடலை உடனடியாக காலி செய்யும் தன்மையுடையது. ஆறு மாதங்களுக்கு முன்பு தமிழ்நாட்டு மீனவர் சங்கங்களை சந்திக்க வந்திருந்த இலங்கை மீனவர்களான தமிழ் மீனவர்களும், சிங்கள மீனவர்களும் இங்குள்ள விசைப்படகு மீனவர்களுடன் இது பற்றி ஒரு பேச்சு வார்த்தை நடத்தினார்கள். அந்த பேச்சுவார்த்தையில் இலங்கை மீனவர்கள் டிராலர் முறையை விட்டுவிடுங்கள் என்று வற்புறுத்தினார்கள். அதன்பிறகு ஒரு ஒப்பந்தம் ஏற்பட்டது. அந்த ஒப்பந்தத்தில் டிராலர் முறையில் இன்னும் எழுபது நாட்களுக்கு அதாவது இந்த ஆண்டிற்கு இந்த சீசன் காலத்தில் வேண்டுமானால் விடமுடியவில்லை என்பதால் நீங்கள் பயன்படுத்திக்கொள்ளுங்கள். ஆனால் எங்கள் அதாவது இலங்கை கடற்கரைக்கு ஐந்து மைல்களுக்கு [ கடல் மைல்கள்] அப்பால் நீங்கள் பயன்படுத்திக்கொள்ளுங்கள்.

அதேநேரம் அடுத்த ஆண்டிலிருந்து இத்தகைய டிராலர் பயன்படுத்தும் முறையை கைவிட்டு விடுங்கள் என்பதே அவர்களது கோரிக்கையாக வைக்கப்பட்டது. அதை இங்குள்ள விசைப்படகு மீனவர் சங்கங்களும் ஏற்றுக்கொண்டு அதில் கையெழுத்திட்டனர். அதன்பிறகு சமீபத்தில் கடந்த மூன்று வாரமாக இலங்கை தமிழ் மீனவர்கள் இந்திய தமிழ் மீனவர்களிடம் இதை நினைவு படுத்தி டிராலர் வேண்டாம் என்று அறைகூவல் விடுத்து வந்தனர். அதன்பிறகும் இந்தியாவில் தமிழ்நாட்டில் உள்ள ஊழல் மீன்வளத்துறை அதிகாரிகள், மற்றும் அரசியல்வாதிகளான ஆளும் கட்சிக்காரகளின் ஒத்துழைப்பில், அமைச்சரின் பங்களிப்புடன் இந்த சட்டவிரோத மீன்பிடிக்கும் முறை தொடரத்தொடங்கியது.

அதில் குறிப்பாக ராமேஸ்வரம் பகுதியின் மீன்வளத்துறை துணை இயக்குனர், இந்த ஆண்டுக்கான இலஞ்சத்தொகையாக இந்த சட்டவிரோத டிராலர்காரர்களிடம், ஆறு லட்சம் ரூபாயை பெற்றுள்ளார் எனச் சொல்கிறார்கள்.  அதேபோல நாகப்பட்டினம் பகுதியின் மீன்வளத்துறை அதிகாரிகள் ஐந்து கோடி ரூபாயை பெற்றுள்ளார்கள் என்றும் சில தகவல்கள் தெரிவிக்கின்றன.  இந்த பணத்தில் ஒரு பகுதி அமைச்சகம் வரை செல்வதால் அவர்களும் இவர்களுக்கு ஆதரவாக செயற்படுகின்றனர் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

இத்தகைய சூழலில்தான் பிப்ரவரி பதினைந்தாம் நாள் யாழ்ப்பாணம் கடற்கரை வரை சென்று,  அதாவது அவர்கள் கேட்டுக்கொண்ட ஐந்து மைல் தூரத்திற்குள்ளும் சென்று டிராலரில் இரட்டை மடியையும், ஒற்றை மடியையும் கொண்ட வலைகளை வைத்துக்கொண்டு மீன் பிடித்த நாகப்பட்டினம் மீனவர்கள் நூற்று ஆறு பேரை அவர்களது பதினெட்டு படகுகளுடன், யாழ்ப்பாண தமிழ் மீனவர்கள் சுற்றிவளைத்துப் பிடித்து, கரைக்குக் கொண்டு சென்று,  அவர்களுக்கு நல்ல உணவுகள் வழங்கிய பின்னர், படித்துறை என்ற காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளதாகத் தெரியவருகிறது.

உண்மைநிலை இவ்வாறு இருக்கையில், மீனவர்களுக்கான போராட்டம் என்பதன் பேரில், கட்சிகள்  நடத்திய போராட்டம் தடை செயப்பட்ட வலைகளை பயன்படுத்துவோருக்கு ஆதரவாகவும், ஊழல் அமைச்சர்களுக்கும், ஊழல் அதிகாரிகளுக்கும் ஆதரவாகவும் இருகிறதே தவிர, உன்மையில் அப்பாவி மீனவர்கள் கடலில் இலங்கை கடற்படையால் சுடப்படுவதற்கு எதிரானதாகவோ, அத்தகைய எதிர்புப்  போராட்டங்களுக்கு ஆதரவாகவோ இருக்கவில்லை.

அப்படி அவர்கள் ஆதரவாக குரல் கொடுக்க எண்ணினால் இதுவரை கொல்லப்பட்ட தமிழ்நாட்டு மீனவர்களின் 538 முதல் தகவல் அறிக்கைகளையும், அடிக்கப்பட்ட, வலைகள் அறுக்கப்பட்ட, படகுகள் உடைக்கப்பட்ட தமிழ்நாட்டு மீனவர்களின் இருபதேட்டேட்டாண்டு வழக்குகளையும் சேர்த்து உயர்நீதி மன்றத்தில் போட்டு, இலங்கை கடற்படை தளபதிகள் மீது கைது வாரண்டை பிறப்பிக்க செய்யட்டும் என்பதே மீனவர்களுக்கான நியாயமான கோரிக்கையாக அமையும்.

இந்த உண்மைநிலையைச் சரிவரப் புரிந்து கொள்ளாவிடின், 'மீனவர் போராட்டம்' என்ற பொதுவான தலைப்பில், இருநாட்டு மீனவர்களுக்கும் இடையில்,  அரசியல்வாதிகளும், அவர்களது கைகூலிகளும், மோதல்நிலையை உருவாக்கி. தங்கள் கல்லாக்களை நிரப்பிக்கொள்ளும் அபாயம் ஏற்படும். இதனால் என்றும்  இறப்பதும், இழப்பதும் மீனவர்கள் என்பதே மாறாத உண்மையாகும்.

கட்டுரையின் ஒரு பகுதியில்....
நன்றி: தேனி இணையதளம்

Wednesday, September 21, 2016

முக்கியமான இணைய தமிழ் பத்திரிக்கைகள்

இணையத்தில் நிறைய தமிழ் பத்திரிக்கைகள் படிக்க கிடைக்கின்றன, இது போல பலர் தொகுத்து கொடுத்திருந்தாலும் ஏறக்குறைய தமிழின் அனைத்து பத்திரிக்கைகளின் இணைய பக்கங்களை தொகுத்து கொடுக்க வேண்டும் என்ற ஆசையின் விளைவே இந்த முயற்சி. விடுபட்ட முக்கிய பத்திரிக்கைகளை தெரியப்படுத்தினால் இணைத்து கொள்ள வசதியாக இருக்கும். பத்திரிக்கைகளின் வலைத்தளம் செல்ல அந்த பெயரின் மேல் click செய்யுங்கள்

பிரபல நாளிதழ்கள் 


பிரபல வார/மாத  இதழ்கள் 


இணைய இதழ்கள் 



Friday, September 16, 2016

காவிரி ஆறும்,அதை கொலை செய்த நாமும்

இந்த புகைப்படம் காவிரி டெல்டாவின் மையப்பகுதி பிரதான சாலையில் எடுக்கப்பட்டது.  தஞ்சையை தாண்டிய பின் இந்த காவிரி புதர்மண்டி, சாக்கடை கலந்து, கழிவுநீர் வர, வெங்காயத்தாமரை சூழ, பாலிதீன் குப்பைகள் நிறைந்து கிட்டத்தட்ட இறக்கும் தருவாயில் இருக்கிறது.

மக்கள் இதை பார்த்தும்சாதாரணமாக கடந்து கொண்டுதான் இருக்கிறார்கள். தமிழ்நாட்டில் மொத்தம் விளைகிற நெல்லின் அளவு 18ஆயிரம்டன். இதில் 13ஆயிரம் டன் காவிரி பாயும் பூமியான 7மாவட்டங்களில் மட்டுமே நமக்கு கிடைக்கிறது.  இப்பொன்விளையும் பூமிக்கு உயிர் தரும் ஆறுதான் காவிரி. நம் மக்கள் காவிரி ஆற்றையோ, ஆற்று நீரையோ பாதுகாக்க சிறு பங்களிப்பை கூட நிகழ்த்தவில்லை என்பதன் பெரும் வேதனை.

இந்த புகைப்படம்விவசாயத்தை நம்பி வாழ்கிற, அதை உண்ணும் பொருளாக வாழ்க்கை ஆதாரமாக மாற்றுகிற பூமியில் ஆறு சீரழிந்து கிடப்பது வரலாற்றின் மிகமோசமான துயரம்.  ஆற்றுசமவெளி பகுதியால், அவ்விடங்களில்   செழிப்பாக வாழ்ந்தது நம் கலாச்சாரம், எல்லா வளமும் தந்த அதே ஆற்றை சாக்கடையாக்கி, அதன் சாவுக்கும் வழி வகிக்கிறோம் என்பதை நினைக்கையில் நெஞ்சம் நெருப்பாய் எரிகிறது. ஆற்றின் குறுக்கே கட்டப்படும் தடுப்பணை நீரை பாதுகாத்து தேவைகேற்ப பயன்படுத்த வழிவகை செய்யவே.

காமராஜருக்கு பிறகு தமிழகத்தில் எந்த அணையும் கட்டப்படவில்லை என்பதும், அதற்கான முயற்சிகள் கூட மேற்கொள்ளப்படவில்லை என்பதும் உங்களுக்கு தெரியுமா? நெடும் துயரம் என்னவெனில் கட்டிய அணைகளை கூட பராமரிக்கவில்லை. ஆறு,குளம், ஏரிகண்மாய், வாய்க்கால் என எவையும் சரியாக தூர்வாரப்படவில்லை.  காவிரி ஆற்றில் இருந்து பயன்படுத்தாமல் கடலில் கலக்கும் நீரின் அளவு 155TMC.  நாம் கர்நாடாகாவிடம் கெஞ்சிக்கொண்டிருக்கும் நீரின் அளவு 142TMC.  தடுப்பணைகள் கட்டி நீரை சேமித்திருந்தாலே முப்போகம் விளையும் பூமியாக இருந்திருக்கும். 

சென்னையில் வெள்ளம் வந்த பொழுது ஏற்றப்பட்ட பேரிழப்பிற்கு முக்கிய காரணம் ஆறு, குளங்கள்,ஏரிகள் தூர்வாரப்படாததே என்பது யாவரும் அறிந்ததே. நீரின் முக்கியத்துவத்தையும், மகத்துவத்தையும் நாம் இன்னும் சரியாக புரிந்து கொள்ளவே இல்லை. ஆறுகளை பாதுகாப்பதில் உள்ள  பெரிய நன்மையை நாம் வளரும் தலைமுறைக்கு கற்றுக்கொடுக்க தவறிவிட்டோம். 

கர்நாடகம் நிச்சயம் தண்ணீர் தந்தே ஆகவேண்டும். ஆனால் அவர்கள் தரும் நீரை நாம் தலையிலா தூக்கிவரமுடியும்? காற்று கலப்படமாகிவிட்டால் எப்படி சுவாசிப்பது சிரமமோ, அது போல் நீர் கலப்படமாகிவிட்டாலும் விஷமென்பதை புரிந்து கொள்ள வேண்டும்.  இனியாவது ஆறுகளை பாதுகாக்கவேண்டும்.


இது அடுத்த தலைமுறைக்கு, நாம் செய்தே தீர வேண்டிய அடிப்படை சூத்திரம்.

@Rajarocketrocky from twitlonger 

Friday, January 22, 2016

தமிழ் இணையதளங்கள்

தமிழில் முக்கியமான செய்தி, தமிழ் அகராதி, வானொலி, தொலைக்காட்சி, மற்றும் இணைய இதழ்கள் ஆகியவற்றின் தொகுப்பு, ஏதேனும் சேர்த்த வேண்டி இருந்தால் தயவு செய்து பின்னூட்டம் இடுங்கள்  

   
தமிழில் செய்திகள்
·         வெப்தமிழன்
·         தமிழ்நெட்
·         உதயன்
·         சுடர் ஒளி
·         தினக்குரல்
·         வீரகேசரி
·         அலைகள்
·         வெப் உலகம்
·         விகடன்
·         குமுதம்
·         தினகரன்
·         தினத்தந்தி
·         தினபூமி
·         மாலைமலர்
·         சுதந்திரன்
·         தினமணி
·         தினமலர்
·         விடுதலை
·         தமிழோசை
·         நிதர்சனம்
·         சங்கதி
·         வலம்புரி
தமிழ் அகராதி

தமிழ் வானொலிகள்
·         கலசம்
தமிழ் தொலைக்காட்சிகள்
·         ரீவி ஐ
·         தீபம்
இணைய இதழ்கள் 
·         ஆறாம்திணை
·         பதிவுகள்
·         தமிழ்.காம்
·         அப்புசாமி
·         சினி சவுத்
·         கல்கி
·         நெட் தமிழ்
·         ஈழம் வெப்
·         தமிழம்
·         தமிழ்மணம்
·         தமிழ்வாணன்
·         முத்தமிழ்
·         செந்தமிழ்

நன்றி வைரமுத்து வலை